முதலில் 10 கேள்வி – பதில்கள். (1) உடற்பயிற்சி பண்றதையும் யோகான்னுதான சொல்றாங்க, அப்ப அது வேற, இந்த ஞான, பக்தி, கர்ம யோகம் வேறயா? யோகா, யோகம், யோகா டீச்சர் எல்லாமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ள விஷயங்கள் தான். அனுஷ்காவைக் கொஞ்சம் விட்டுவிட்டு பாக்கி இரண்டையும் நெருங்கிப் பார்ப்போம். உடற்பயிற்சி யோகா என்பது பதஞ்சலி மகரிஷியின் ஹடயோகத்தில் வருவது. அவர் எழுதிய ‘ஹடயோகப் ப்ரதீபிகா’வில் முறைப்படி ஆசனங்கள், பிராணாயாமங்கள் செய்வது பற்றி சொல்லித் தரப்படுகிறது. கீதையில் சொல்லப்படும் [..மேலும் படிக்க..]
கீதையை நாம் ஆழ்ந்து படிப்பதற்கு முன், கீதை பற்றிய சில உண்மைகள், விமர்சனங்கள், பொதுவான பார்வைகளை தெரிந்து கொள்வது நல்லது. முதலில் பத்து கேள்வி – பதில்கள்: 1. கீதை எந்த மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது? சம்ஸ்கிருதத்தில். ஆனால் சம்ஸ்கிருதம் உட்பட பலப்பல இந்திய மொழிகளில் சிறப்புரைகள், பொழிப்புரைகள், விளக்க உரைகள் கிடைக்கின்றன. ஸ்வாமி சிவானந்தரின் ஆங்கில உரை மிகவும் எளிதான ஒன்று. ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் உரைகள் மிகவும் பிரபலம். பாரதியாரின் அழகான தமிழ் உரை கிடைக்கிறது. [..மேலும் படிக்க..]
அனைத்து இந்திய மொழிகள் தவிரவும் உலகம் முழுவதும் பல முக்கிய மொழிகளில் (லத்தீன், ஃப்ரஞ்ச், ஜெர்மன், சைனீஸ், இத்தாலியன்) மொழிபெயர்க்கப்பட்டு, உலகளாவிய பல அறிஞர்களாலும் அலசி ஆராயப்படும், ஆராதிக்கப்படும் பகவத் கீதையைப் பற்றி, பாரதத்தில் பிறந்து வளர்ந்த ஹிந்துவாகிய எனக்கு ஒன்றுமே சரியாகத் தெரியவில்லையே என்கிற ஏக்கம் எனக்குப் பல நாட்களாக இருந்து வந்தது. பகவத் கீதை என்றால் என்ன என்று தெரியும். ஒரு சில ஸ்லோகங்கள் தெரியும். ஆனால் அதை ஆழமாகப் படித்ததில்லை. ஆதி சங்கரரின் [..மேலும் படிக்க..]
சுஜாதா மறைந்து மூன்றாண்டுகள் ஓடி விட்டன. இந்த ஆண்டு அவருக்குத் தமிழ் இலக்கிய, வாசக உலகம் நிகழ்த்தாத / நிகழ்த்திய அஞ்சலி கொஞ்சம் விநோதமானது. ஃபிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருக்கிறோமே, ஃபிப் 27 சுஜாதா மறைவு தினமாயிற்றே, ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்தால் நாமும் போய் எட்டிப் பார்க்கலாமே என்று நினைத்திருந்தேன். நண்பர்களுக்கு ஃபோன் செய்து பார்த்தேன், ட்விட்டரில் மெசேஜ் கொடுத்துப் பார்த்தேன், ஊஹூம், யாரும் எந்த நிகழ்ச்சியுமே இல்லை என்று தான் சொன்னார்கள். பொதுஜனத் தொடர்பாளரும் சக [..மேலும் படிக்க..]
வாசகர்களின் பல பின்னூட்டங்கள், என் ஜிமெயில் அக்கவுண்டின் ‘ஸ்பாம்’ செட்டிங்குக்குள் புகுந்து மாதா மாதம் அநாதையாய்க் கேட்பாரின்றி காலாவதியாகிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். பின்னூட்டங்கள் ஒழுங்காகவே வந்துகொண்டிருந்தன. வோர்ட்பிரஸ் அல்லது ஜிமெயில் செட்டிங்சில் ஏதோ சமீப அப்டேட்டின்போது மாற்றம் செய்து விட்டார்கள் போலும் ;-( இப்பொழுது சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், உங்கள் பின்னூட்டங்கள் சரியான முறையில் வெளிவராமல் இருந்திருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். என்னுடைய யாஹு முகவரியிலும் இனிமேல் எனக்குத் தெரியப்படுத்தலாம். [..மேலும் படிக்க..]
செவ்வடையான மசால்வடையே! ———————————————– ’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக் குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம். ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல! ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், [..மேலும் படிக்க..]
“இணையம், இணையத் தமிழ் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதித் தாருங்கள்” என்று நண்பர் நா. கணேசன் சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். ஏதோ விழா மலருக்கு என்று நினைவு. இது என்ன ஆயிற்று, வெளியானதா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. அதனாலென்ன, இங்கே வெளியிட்டு விடலாமே என்று இன்று காலை தோன்றியதன் பலனை இனிமேல் அனுபவியுங்கள்! ***** “ஏய், இவளே! ஓடி வந்து இதைப் பாரேன்! உன் பெயரைத் கம்ப்யூட்டரில் தமிழில் அடித்திருக்கிறேன், பார்!” வீட்டிலே [..மேலும் படிக்க..]
’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ – இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள். ‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ – இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள். என் ஜூரி டயரி படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்: ‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’ ‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’ ‘ஒஹோ, [..மேலும் படிக்க..]
“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’ வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!. வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. [..மேலும் படிக்க..]
நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்! அர்ச்சகரே கோவிலில் ஆட்டம் போட்டால் ஆண்டவன் போவதுதான் எங்கே? காக்கிச் சட்டையே கைலிக்கு மாறி ஆட்டோவிலேறி ஆட்டையப் போட்டால்? மக்களைக் காப்பாற்றி ரட்சிக்கவேண்டிய போலீஸ் அதை மறந்து உட்டாலக்கடி வேலைகளில் ஈடுபட்டதால் எழுந்த கேஸ்தான் நம் ஜூரி டையரியின் அடுத்த பக்கம். *** *** *** லாஸ் ஏஞ்சல்ஸ்- பிரம்மாண்டமான ஒரு மாநகர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கேயும் பெருநகர், புறநகர், வெளிநகர் எல்லாம் தாண்டிய சிற்றூர்களில் அங்குமிங்குமாகச் [..மேலும் படிக்க..]
சமீபத்திய பின்னூட்டங்கள்