<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</title>
	<atom:link href="http://www.writerlaram.com/tamil/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.writerlaram.com/tamil</link>
	<description>கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!</description>
	<lastBuildDate>Thu, 12 Aug 2010 20:06:44 +0000</lastBuildDate>
	
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>மன்னிக்க வேண்டும்!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=410</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=410#comments</comments>
		<pubDate>Thu, 12 Aug 2010 20:06:44 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[general]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=410</guid>
		<description><![CDATA[வாசகர்களின் பல பின்னூட்டங்கள், என் ஜிமெயில் அக்கவுண்டின் ‘ஸ்பாம்’ செட்டிங்குக்குள் புகுந்து மாதா மாதம் அநாதையாய்க் கேட்பாரின்றி காலாவதியாகிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.  பின்னூட்டங்கள் ஒழுங்காகவே வந்துகொண்டிருந்தன. வோர்ட்பிரஸ் அல்லது ஜிமெயில் செட்டிங்சில் ஏதோ சமீப அப்டேட்டின்போது மாற்றம் செய்து விட்டார்கள் போலும் ;-(
இப்பொழுது சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், உங்கள் பின்னூட்டங்கள் சரியான முறையில் வெளிவராமல் இருந்திருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். என்னுடைய யாஹு முகவரியிலும் இனிமேல் எனக்குத் தெரியப்படுத்தலாம். (அதே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வாசகர்களின் பல பின்னூட்டங்கள், என் ஜிமெயில் அக்கவுண்டின் ‘ஸ்பாம்’ செட்டிங்குக்குள் புகுந்து மாதா மாதம் அநாதையாய்க் கேட்பாரின்றி காலாவதியாகிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.  பின்னூட்டங்கள் ஒழுங்காகவே வந்துகொண்டிருந்தன. வோர்ட்பிரஸ் அல்லது ஜிமெயில் செட்டிங்சில் ஏதோ சமீப அப்டேட்டின்போது மாற்றம் செய்து விட்டார்கள் போலும் ;-(</p>
<p>இப்பொழுது சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், உங்கள் பின்னூட்டங்கள் சரியான முறையில் வெளிவராமல் இருந்திருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். என்னுடைய யாஹு முகவரியிலும் இனிமேல் எனக்குத் தெரியப்படுத்தலாம். (அதே பெயர் தான் @யாஹு.காம்!)</p>
<p>என்றென்றும் அன்புடன்,</p>
<p>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=410</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>செவ்வடையான மசால்வடையே!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=403</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=403#comments</comments>
		<pubDate>Fri, 09 Jul 2010 19:28:08 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[Miscellaneous]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=403</guid>
		<description><![CDATA[செவ்வடையான மசால்வடையே!
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;
’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக்  குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.
ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!
ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>செவ்வடையான மசால்வடையே!<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக்  குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.</p>
<p>ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!</p>
<p>ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும்  கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.</p>
<p><a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/07/vada.jpg"><img class="alignleft size-full wp-image-404" title="Masal Vadai" src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/07/vada.jpg" alt="" width="400" height="342" /></a></p>
<p>‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!</p>
<p>’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?</p>
<p>இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!</p>
<p>*************************</p>
<p>பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?</p>
<p>ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.</p>
<p>என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.</p>
<p>சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:</p>
<p>”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”</p>
<p>ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.</p>
<p>”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. &#8216;ஆறு&#8217; என்றால் வழி; &#8216;ஆற்றுப்படுத்துதல்&#8217; என்றால் &#8216;வழிகாட்டுதல்&#8217;. &#8216;ஆற்றுவடை&#8217; என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, &#8220;அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்&#8221; என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.</p>
<p>’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட &#8216;ஆறுபடை வீடு&#8217; அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், &#8216;ஆறு திருப்பதி&#8217; &#8216;அறுபத நிலை&#8217; &#8216;ஆறு நிலை&#8217; போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. &#8216;ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே&#8217; என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்&#8230; ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”</p>
<p>இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.</p>
<p>இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.</p>
<p>சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.</p>
<p>’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’</p>
<p>ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.</p>
<p>’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.</p>
<p>திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:</p>
<p>”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.</p>
<p>’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்<br />
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்<br />
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்<br />
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்<br />
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’<br />
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.</p>
<p>இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.</p>
<p>‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.</p>
<p>சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”</p>
<p>சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”</p>
<p>வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.</p>
<p>**********************</p>
<p>”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”</p>
<p>”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்‌ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”</p>
<p>இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?</p>
<p>”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”</p>
<p>இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.</p>
<p>“இந்த மசால் வடை &#8211; செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.</p>
<p>இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.</p>
<p>செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?</p>
<p>இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.</p>
<p>ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.</p>
<p>நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”</p>
<p>எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.</p>
<p>இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!</p>
<p>நன்றி: கல்கி                                                                             </p>
<p>************************</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=403</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>கணினியில் கன்னித் தமிழ் வளர்ந்த கதை!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=399</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=399#comments</comments>
		<pubDate>Tue, 18 May 2010 18:16:07 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=399</guid>
		<description><![CDATA[&#8220;இணையம், இணையத் தமிழ் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதித் தாருங்கள்” என்று நண்பர் நா. கணேசன் சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். ஏதோ விழா மலருக்கு என்று நினைவு. இது என்ன ஆயிற்று, வெளியானதா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது.
அதனாலென்ன, இங்கே வெளியிட்டு விடலாமே என்று இன்று காலை தோன்றியதன் பலனை இனிமேல் அனுபவியுங்கள்!
*****
“ஏய், இவளே! ஓடி வந்து இதைப் பாரேன்! உன் பெயரைத் கம்ப்யூட்டரில் தமிழில் அடித்திருக்கிறேன், பார்!”
வீட்டிலே ஒரு புதுக் குழந்தை பிறந்ததும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;இணையம், இணையத் தமிழ் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதித் தாருங்கள்” என்று நண்பர் நா. கணேசன் சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். ஏதோ விழா மலருக்கு என்று நினைவு. இது என்ன ஆயிற்று, வெளியானதா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது.</p>
<p>அதனாலென்ன, இங்கே வெளியிட்டு விடலாமே என்று இன்று காலை தோன்றியதன் பலனை இனிமேல் அனுபவியுங்கள்!</p>
<p>*****</p>
<p>“ஏய், இவளே! ஓடி வந்து இதைப் பாரேன்! உன் பெயரைத் கம்ப்யூட்டரில் தமிழில் அடித்திருக்கிறேன், பார்!”</p>
<p>வீட்டிலே ஒரு புதுக் குழந்தை பிறந்ததும் எல்லோரும் என்ன செய்வதென்று கூடத் தெரியாமல் வாயெல்லாம் பல்லாக அதைச் சுற்றிச் சுற்றி வருவோமே, அதே போல், முதன் முதலாகத் தமிழ் எழுத்துகளைக் கணினியில் பார்த்த குதூகலம் இப்பொழுதும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.</p>
<p>1995-ம் வருடம். அமரர் சுஜாதா அவர்கள் சென்னையிலிருந்து குடும்பத்துடன் என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டுக்கு வருகை தந்திருந்த நேரம் அது. எங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான சினிமா, அரசியல் நண்பர்களைப் பற்றி சுவாரசியமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். வசனம் எழுதுவது, திரைக்கதை அமைப்பது, Scriptor, Movie Magic போன்ற சினிமா தொழில் சார்ந்த மென்பொருட்கள் பற்றியும் பேச்சு திரும்பியது.</p>
<p>“தமிழில் தட்டச்சு செய்யமுடியும், தெரியும், இல்லையா?” என்று கேட்டார் சுஜாதா.</p>
<p>அது பற்றிய விபரங்களை நான் அரசல் புரசலாக இணையத்தில் அறிந்திருந்தாலும், அந்த மாதிரி முயற்சிகளுக்கு சுஜாதா பெரும் முன்னோடியாக இருந்தவர் என்கிற முறையில் அவரையே மேல் விபரங்கள் தரும்படி கேட்டுக் கொண்டேன். கணினி, தமிழ், அறிவியல்- எல்லாமே சுஜாதாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியான சந்தோஷ சமாச்சாரங்கள் அல்லவா! அவ்வளவு பெரிய பிதாமகர் குருகுலம் மாதிரி பக்கத்திலிருந்து சொல்லிக் கொடுத்தால் கேட்பதற்கு எனக்குக் கசக்குமா?!</p>
<p>‘அஞ்சல்’ மென்பொருள், முத்து நெடுமாறன், இன்னும் பல சிங்கை நண்பர்களின் கூட்டு முயற்சி பற்றியெல்லாம் சுஜாதா விபரமாகச் சொன்னது மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்கும்படியும், சோதனை முயற்சிகளுக்கு உதவவும் அவர் என்னைப் பணித்தார். ஓரளவுக்கு நானும் கணினித் துறையில் வல்லுனராக இருந்ததும் எங்களுக்கு வசதியாகப் போயிற்று. இன்னமும் சொல்லப்போனால், கணினி தொடர்பான வியாபாரங்களில் நான் அப்போது தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். IBM, HP, Apple, Microsoft போன்ற நிறுவனங்களுடனும், சினிமா தொழில் சார்ந்த மென்பொருள் தயாரிப்பாளர்களுடனும் எங்கள் வியாபார உறவுகள் பலமாகவே இருந்தன.</p>
<p>முத்து நெடுமாறன் மூலமாக, முதன் முதலாக ‘அஞ்சல்’ மென்பொருள் உபயோகப்படுத்தி ‘அம்மா, அப்பா’ என்றெல்லாம் விளையாட்டாகத் தட்டச்சு செய்து பார்த்து, எங்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் ஓடி வந்து ‘மானிட்ட’ரைப் பார்க்கச் செய்து குதூகலித்திருந்த காலம் அது. ஒரு சின்னக் குழந்தையைப் போல கணினியில் தமிழ் தவழ்ந்து, தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்த கால கட்டம்,</p>
<p>அது முதல், பல சோதனை முயற்சிகளுக்கும் என்னைத் தோள் கொடுக்குமாறு பணித்ததுடன் எனக்கு நல்ல பல அறிமுகங்களையும் சுஜாதா செய்து கொடுத்தார். கொஞ்சம் கூட வறட்டு கௌரவம் பார்க்காமல் அவர் எங்களுடன் பழகியது, சிக்கலான பல அறிவியல், கணினி, திரைக்கதை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாங்கள் விவாதித்திருந்தது,  கணினியில் தமிழுக்காக மேலும் என்னென்ன செய்யவேண்டும், யார் யார் எங்கெங்கே எப்படி இதற்காக மெனக்கெட்டு உழைக்கிறார்கள் போன்ற விபரங்கள்= எல்லாமே நாங்கள் எல்லோரும் ஒரு பெரிய, உயரமான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற உற்சாகமான முயற்சியாக இருந்தது. தமிழ் எழுத்தாளர்களில் ஒரு ஜாம்பவானாக இருந்த சுஜாதா அவர்கள் இப்படிப்பட பலப்பல புது முயற்சிகளுக்கு உதவியதுடன், இதற்கெல்லாம் தீவிரமான ஆதரவாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். ஒரு சின்ன அணிலாக நானும் என் பங்குக்கு ஏதோ என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன் என்கிற பெருமிதம் எனக்கு இன்றும் மன நிறைவைத் தருகிறது.</p>
<p>ஆரம்பத்தில் TSC, TSCu போன்ற கட்டமைப்புகளுடன் புதுப்புது தமிழ் ‘ஃபாண்ட்கள்’ வெளிவந்தபடியே இருந்தன. ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு ஃபாண்டில்! ‘இதைப் படித்தால் அதைப் படிக்க முடியாது, அதைப் படிக்க வேண்டுமென்றால் இன்னுமொரு ஃபாண்ட் தேவை’ என்று ஆரம்ப காலக் குளறுபடிகள் ஏராளம், ஏராளம்! “அவர் இதிலே காசு பார்க்கப் பார்க்கிறார்”, “இந்தாருங்கள், இது இலவசம்!” “இலவசமா? அதெல்லாம் குப்பை!” போன்ற வியாபாரக் கூச்சல்கள், குழப்படிகளுக்கும் அப்போது பஞ்சம் இல்லை! தகராறுகள் இல்லாமல் தமிழ் வளர்ந்ததாக சங்க காலத்திலிருந்தே சான்றுகள் இல்லையே!</p>
<p>பக்கம் பக்கமாக என்னுடைய நாடகங்களுக்கும், கதைகளுக்கும், கவிதைகளுக்கும் வெள்ளைத் தாளில் எழுதிப் பழகியிருந்த நான் எல்லாவற்றையும் கணினியில் செய்ய முடிவதில் சந்தோஷப்பட்டேன். ஆனால், அடிக்கடி கணினிகள் தட்டுத்தடுமாறுவது, ஹார்டு டிஸ்குகள் அகாலமாக மண்டையைப் போட்டு எழுத்தாளர்களை அழவைப்பது, வாரக் கணக்கில் எழுதியவையெல்லாம் ஒரே நொடியில் virtual space என்கிற வெற்றிடவெளியில் காணாமல் போவது போன்ற கவலைகளும் கூடவே வந்து கழுத்தை அறுத்தன.</p>
<p>பாலா பிள்ளையின் <a href="http://www.tamil.net/">www.tamil.net</a> இம்மாதிரி பல ஊடக முயற்சிகளில் இருந்த என் போன்றவர்களை ஒருங்கிணைக்க உதவியது. சிட்னி, ஆஸ்திரேலியாவில் இருந்த அவருடன் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருந்த நான் நண்பனானேன், ஆனாலும், பல விஷயங்களை ஒருங்கிணைக்க முடிந்தது. முத்து நெடுமாறன் சிங்கப்பூரில், சுஜாதாவோ சென்னையில்! இன்னும் பல நண்பர்கள் பலப்பல ஊர்களில்! ஒவ்வொருவரும் இருப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், படிப்பதும் ஒவ்வொரு நேரத்தில். ஆனால் ஒரே தளத்தில் எங்களால் எப்போதும் உறவாட முடிந்தது. தமிழ் இணையத்தால் மட்டுமே இது சாத்தியமானது. நல்ல பல தமிழ்ப் பெண்கள் “நாங்கள் கணினிக் கைம்பெண்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்!” என்று உலகளவில் கூக்குரலிட ஆரம்பித்ததும் இதே கால கட்டத்தில் தான்!</p>
<p>எந்தக் கண்ணகியின் கூச்சலுக்கும் பயந்து கணினித் தமிழ் முடங்கிக் கிடக்கவில்லை! அதன் வளர்ச்சி, பல தமிழ் ஆர்வலர்களின் பெரு முயற்சியுடன் யாஹு, கூகுள் போன்ற இடங்களில் பல தமிழ் குழுமங்களாகத் தொடர்ந்தது.</p>
<p>நானும் அகத்தியர், மரத்தடி, தமிழோவியம் போன்ற பல குழுக்களிலும் உறுப்பினராகித் தொடர்ந்து எழுதி வளர்ந்தேன். இரா. முருகன், என். சொக்கன், வெங்கடேஷ், பாரா போன்றவர்களுடன் ‘ராயர் காப்பி கிளப்’ ஆரம்பித்து அதையும் ஜாலியாக நடத்தினோம். என்னை ஊக்குவித்த பல நல்ல நண்பர்களை நான் இங்கே நன்றியுடன் நினைவு கூறுகிறேன். பாரா, வெங்கடேஷ் போன்ற பல பத்திரிகை நண்பர்கள் என்னை அடுத்த அடி நோக்கி நடக்க உற்சாகப்படுத்தினார்கள். ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், திண்ணை, தென்றல், கிழக்கு பதிப்பகம் என்று நானும் பல இடங்களில் எழுதலானேன்.</p>
<p>குழுக்கள் பெரிதாகப் பெரிதாக வெட்டியும் ஒட்டியும் எழுதுதல், வெட்டிப் பேச்சுகள், வீணர்கள் சிலர் என்று மட்டுறுத்தல் தேவைகளும் நாளடைவில் அதிகரிக்க ஆரம்பித்தன!</p>
<p>‘ஜாண் இடமாக இருந்தாலும் தனி இடமே சொர்க்கம்’ என்று ‘ப்ளாக்’கள் பிறகு வேர் விட ஆரம்பித்தன. ‘இந்தக் கூட்டுக் குடும்ப குழப்பங்களுக்குத் தனிக் குடித்தனமே தேவலை போல் இருக்கிறதே!’ என்று பலரும் யோசிக்க நேர்ந்தது. ஆனால், ஒன்றுக்கொன்று பிரச்னை இல்லாமல் குழுமங்களும், தனி வலைப்பகுதிகளும் சேர்ந்தே ஒற்றுமையுடன் இன்றும் இயங்குகின்றன.</p>
<p>‘ப்ளாக்’ என்கிற தனிப்பட்ட Blogger, Wordpress போன்ற வலைப்பகுதிகளில் நாங்கள் எல்லோருமே இன்றும் தமிழால் வளர்ந்து வருகிறோம்! என்னுடைய முகவரியாகிய losangelesram.blogspot.com “வாருங்கள்! வந்து உங்கள் நினைவலைகளைப் பதிவு செய்யுங்கள்!” என உங்களை அன்புடன் அழைக்கிறேன். <a href="../../">www.writerlaram.com</a> இதுவும் என் வீடே!</p>
<p>தமிழின் பரிணாம வளர்ச்சி Twitter, Facebook, Myspace போன்ற இடங்களிலும் விருவிருப்பாகத் தொடர்கிறது</p>
<p>இணையத் தமிழ் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் வாசகர்கள், ரசிகர்கள், நண்பர்கள் ஏராளம்!</p>
<p>வாழ்க தமிழ்! வளர்க தமிழ் இணையம்! நாளையும் நமதே!</p>
<p>என்றென்றும் தமிழன்புடன்,</p>
<p>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</p>
<p><a href="http://losangelesram.blogspot.com/">http://losangelesram.blogspot.com</a></p>
<p><a href="http://losangelesram.blogspot.com/"></a> <a href="../../">www.writerlaram.com</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=399</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு ஜூரியின் டயரி &#8211; 4 1/2</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=392</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=392#comments</comments>
		<pubDate>Tue, 23 Feb 2010 19:00:32 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[தொடர்கள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=392</guid>
		<description><![CDATA[’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ &#8211; இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள்.
‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ &#8211; இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள்.
என் ஜூரி டயரி  படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்:
‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’
‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’
‘ஒஹோ, கலிஃபோர்னியாவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியமோ, ஈஸ்ட் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ &#8211; இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள்.</p>
<p>‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ &#8211; இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள்.</p>
<p>என் ஜூரி டயரி  படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்:</p>
<p>‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’</p>
<p>‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’</p>
<p>‘ஒஹோ, கலிஃபோர்னியாவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியமோ, ஈஸ்ட் கோஸ்டில் நாங்கள் ஜூரியானால் வெறுமனே பேஸ்தடித்துக் கை கட்டி வாய் பொத்தி  நிற்க வேண்டி இருக்கிறதே!’</p>
<p>இப்படிப்பட்ட  கவலைகளால் நம் வாசகர் உலகம் குழம்பிக் கிடக்கிறது.</p>
<p>தனி மடலில் கேட்கிறார்கள், தண்ணியடித்து விட்டு விம்முகிறார்கள், ”தல, நீ ஒண்ணும் கண்டுக்காத பிரதர்” என்றும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள்.</p>
<p>அதனால் தான் இந்த அரைப் பக்கக் கேள்வி, உங்களைப் பார்த்து:</p>
<p>இந்த ஜூரி டயரியைத் தொடர்ந்து</p>
<p>எழுதிக் கிழிக்கட்டுமா? அல்லது கிழித்துப் போட்டு விடட்டுமா?!</p>
<p>(சட்டம் தன் வேலையைத் தொடருமா ?)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=392</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு ஜூரியின் டயரி -4</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=379</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=379#comments</comments>
		<pubDate>Mon, 15 Feb 2010 23:09:31 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[தொடர்கள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=379</guid>
		<description><![CDATA[“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’
வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!.
வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. வீர மரணம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’</strong></p>
<p>வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!.</p>
<p>வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. வீர மரணம் அடைந்தவர்களை விட, கை, கால், கண் இழந்து மன நோயாளிகளாகவும், முடமாகவும், பல்வேறு பயங்கர உடல் உபாதைகளுடனும் திரும்பிய பல்லாயிரம் பேரைக் கண்டு ஒரு தேசமே திகைத்துப் போனது. என்ன செய்வதென்றே தெரியாமல் பம்மிப் பதுங்கியது. பழுத்த அரசியல்வாதிகள் கூட நிலைகுலைந்து போனார்கள்.</p>
<p>எங்கு பார்த்தாலும் நொண்டிகளாகவும், கை கால் இழந்தவர்களாகவும் ’வியட்நாம் வார் வெடரன்ஸ்’ வீல் சேர்களில், ஆஸ்பத்திரிகளில், வீதிகளில். “அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக, அரசியல் லாபங்களுக்காக, ஆயுத வியாபாரிகளின் லாபத்திற்காக, அநியாயமாக ஒரு தலைமுறையே பலிகடா ஆக்கப்பட்டு விட்டது” என்கிற போருக்கெதிரான வலுவான கோஷங்கள் நாடெங்கும் ’பீட்டில்ஸ்’ போன்றவர்களால் எதிரொலிக்க ஆரம்பித்திருந்த நேரம்.</p>
<p>ஆட்சியாளர்கள், தங்கள் மனச்சாட்சிக்கு ஒரு களிம்பு பூசும் முயற்சியாகவும், போருக்கெதிரான போராட்டங்களைச் சற்றேனும் திசை திருப்புமுகமாகவும் ‘Americans with Disabilities Act’ என்றொரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ‘வெடரன்ஸ்’களுக்காகக் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன், இலவச மேற்படிப்பு, இலவச ஆஸ்பத்திரி இத்தியாதி இத்தியாதி!</p>
<p>அந்த ADA சட்டத்தின்படி, நாடு முழுவதும் வீல்சேர்களில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைகண்ணிகளின் நுழைவாயில்களுக்கு மிக அருகே சரியான பார்க்கிங், சக்கர வண்டிகள் சென்றுவர சரியான பாதை அல்லது லிஃப்ட், முறையான பாத்ரூம் வசதிகள் செய்து தரும்படி எல்லாக் கம்பெனிகளும், பிசினஸ்களும் நிர்ப்பந்திக்கப்பட்டன. படியிலேறி நடந்து செல்லமுடியாதவர்களுக்கான சாய்வான வசதியான பாதைகள், ஸ்பெஷல் சாய்விருக்கைகள், பஸ், ரயில் போன்ற பொதுஜன மார்க்கங்களில் ரிசர்வ்டு சீட்கள்- எல்லாம் கட்டாயமாக்கப்பட்டன. போர்க்காலத்தில் நொண்டி, முடமானவர்கள் தவிர, பிறக்கும்போதே ஊனமுற்றிருந்தவர்களுக்காவும் இந்த கட்டாய வசதிகள் பயன்பட ஆரம்பித்தன.</p>
<p>கண் பார்வை இல்லாமல் போனவர்கள் வசதிக்காக பஸ்களில் Blind Dogs என்று சொல்லப்படும் ஸ்பெஷல் டிரெய்னிங் உள்ள நாய்களுக்காக ரிசர்வ் சீட்கள் இருப்பதை நான் சான் ஃப்ரான்சிஸ்கோ பேருந்துகளில் பார்த்திருக்கிறேன். செய்யப்படவேண்டிய நல்ல காரியம் தான். அடிக்கடி வலிப்புநோய் வந்து அவதிப்படுபவர்கள் கூட இப்படிப்பட்ட புத்திசாலி நாய்களை உபயோகிப்பதுண்டு.</p>
<p>அருகாமையில் இருப்பவர்களுக்கு வலிப்பு வரப்போகிறது என்கிற செய்தி இந்த நாய்களுக்கு சில நொடிகள் முன்கூட்டியே தெரிந்து, அவை தம் எஜமானவர்கள் தடுமாறிக் கீழே விழுந்தால் தம் உடலைத் தலையணை போல் கிடத்தி அவர்களைத் தலையில் அடிபடாமல் காப்பாற்றுமாம். பஸ் சீட்களுக்கு அடியில் சமர்த்தாக வாலைச் சுருட்டியபடி, அதே நேரத்தில் தன் எஜமானர் மேலும் ஒரு கண்பதித்து இந்த நாய்கள் படுத்திருப்பதை நான் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன்.</p>
<p>*** *** ***</p>
<p>ஆனால், எல்லா நல்ல காரியங்களையும் தத்தம் சுயநலத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டு ஆதாயம் தேட முனையும் அசுரர்கள், கேவலமான மனம் படைத்தவர்கள் எங்கும் உண்டெல்லவா?</p>
<p>அப்படிப்பட்ட அமெரிக்காசுரர்களில் முதன்மையான வீல் சேர் அசுரனின் கேஸ் ஒன்று எங்கள் கோர்ட்டுக்கு வந்தது. வீல்சேராசுரன் என்பது நான் வைத்த செல்லப்பெயர். அவனுடைய ஒரிஜினல் பெயர் மோல்ஸ்கி.</p>
<p>மோல்ஸ்கிக்கு இடுப்புக்கீழே கை கால் விளங்காது. வீல்சேரில் தான் சதா வாசம். ஆனால் ஆளைப் பார்த்து ’ஐயோ பாவம்’  என்று பரிதாபம் கிரிதாபம் பட்டு விடாதீர்கள். ஏனென்று சொல்கிறேன்.</p>
<p>தினமும் மோல்ஸ்கிக்கு என்ன வேலை தெரியுமா? காரில் வீல்சேரிலுடன் ஏறி, தன் கேர்ள் ஃப்ரண்டுடன் பக்கத்துப் பக்கத்து ஊர்களில் இருக்கும் ஏதாவது கடைகளுக்கு அல்லது ஹோட்டலுக்குச் செல்வது.</p>
<p>இதிலே என்ன தப்பு? என்கிறீர்களா? பொறுங்கள்.</p>
<p>அங்கே போனவுடன் “என்னால் வீல்சேருடன் கடைக்குள் சரியாக நுழைய முடியவில்லை, நீ போட்ட பாதை சரியில்லை, வாசலில் பார்க்கிங் சரியில்லை, கதவைத் திறக்கும்போது கை பிசகி விட்டது, கடைக்குள் பாத்ரூம் சரியில்லை” என்று ஏதாவது வம்படியாக ரவுசு பண்ணி அந்தந்த கடைக்காரர்கள் மேல் கேஸ் போடுவது அல்லது கேஸ் போட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி காசு பறிப்பது மோல்ஸ்கியின் தொழில்!</p>
<p>பல சின்ன கடைக்காரர்கள் மோல்ஸ்கியின் அதிரடிக்குப் பயந்து, “நமக்கெதற்கு வம்பு?” என்று அவன் கேட்கின்ற தொகையை சைலண்டாக செட்டில் பன்ணித் தொலைக்க ஆரம்பித்தார்கள். இல்லையென்றால் “அங்கே போன் பண்ணுவேன், இங்கே சொல்லி விடுவேன். நீ கடையை இடித்துக்கட்ட எவ்வளவு செலவாகும் தெரியுமா?” என்ற பயமுறுத்தல் தான்.</p>
<p>ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இப்படி அடாவடி வீல்சேர் கட்டைப் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த மோல்ஸ்கி நாளாவட்டத்தில் மேலும் மேலும் எக்கச்சக்கமாக துட்டு பண்ணப் பழகிவிட்டான். அவனுக்கு ’உதவி’ செய்வதற்கென்றே ஒரு வக்கீல்கள் டீம், போட்டோகிராஃபர்ஸ் டீம், அசிஸ்டெண்ட்ஸ் என்று வைத்துக்கொண்டு பகல் கொள்ளையே அடிக்க ஆரம்பித்து விட்டான்.</p>
<p>மோல்ஸ்கியின் பெயரைக்கேட்டாலே லாஸ் ஏஞ்சல்ஸ் சிறு தொழில் கடைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம் ஆகி விட்டது.</p>
<p>அப்படித்தான் ஒரு நாள் மோல்ஸ்கி லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரங்களில் ஒன்றான வுட்லண்ட் ஹில்சில் ஒரு சைனீஸ் ஹோட்டலுக்கு லஞ்ச் சாப்பிடப் போனான். சாப்பிட்டு முடித்து, பாத்ரூம் போகவேண்டும் என்று அங்கே போய் ஏகப்பட்ட கலாட்டா. ’டாய்லெட்டின் அமைப்பு சரியில்லை, டிஷ்யூ பேப்பரை வீல்சேர்வாதிகள் எட்ட முடியாமல மிக உயரே வைத்து விட்டார்கள், வாஷ் பேசின் உசரம் அதிகம், கம்மோட்டில் இருந்து வீல்சேர் மாறுவதற்குள் எனக்குக் கை பிசகி விட்டது, கழுத்து ஒடிந்து விட்டது’ என்றெல்லாம் குறை சொல்லி, ரெடியாக வந்திருக்கும் தன் வக்கீலுடன் நோட்டிஸ், அது, இது என்று மிரட்டிப் பார்த்தான். “ஐயாயிரம் டாலர்ஸ் எடு. இல்லாட்டி மவனே, கோர்ட், கேசுன்னு உன்னை அழிச்சிடுவேன், ஜாக்கிரதை!”.</p>
<p>எத்தனையே பேர் இதற்கு முன மோல்ஸ்கியிடம் அடி பணிந்திருந்தாலும் அன்று அந்த சைனாக்கார ஓனர் இந்த பெப்பேக்கெல்லாம் பயப்படுவதாக இல்லை. “கேஸ் போடறதுன்னா போடப்பு. சும்மா உதார் காட்டாத. பத்து பைசா தர்ரதாயில்ல. மொதல்ல எடத்தக் காலி பண்ணுடா சோமாறி”</p>
<p>*** *** ***</p>
<p>கேஸ் ஜூரிக்கு வந்தது.</p>
<p>வீல்சேரில் பரிதாப முகம் காட்டிய மோல்ஸ்கி தன்னால் சின்னச் சின்ன அசைவுகளைக்கூட சரியாகச் செய்ய முடியவில்லை என்று நடிப்பைப் பிழிந்து கொட்டிக் கொண்டிருந்தான். ’பாகப் பிரிவினை’ சிவாஜி தோற்றார், போங்கள்! கண்ணாடி போட, தண்ணீர் குடிக்க என்று அடிப்படை உதவிகளுக்குக்கூட ஆள், படை, அம்பாரியுடன் ஒரு பெரிய பட்டாளம்.</p>
<p>பல ஜூரர்கள் அவன் நடிப்பில் கரைந்து காணாமலே போய்க் கொண்டிருந்தாலும் இவன் ஒரு வல்லாளகண்டன் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லாமல் போயிற்று. என் குருநாதர் சுஜாதா சொல்கிற மாதிரி, அவன் கண்களில் கயமை தெரிந்தது.</p>
<p>நஷ்ட ஈட்டுத்தொகையாக ஒரு 5000, இதுவரை அவன் அங்கே பட்ட உடல் கஷ்ட நிவர்த்திக்காக ஒரு 5000, அப்புறம் அவன் பட்டிருக்கின்ற மனவலிக்காக ஒரு 25,000 என்று மோல்ச்கி தரப்பு வக்கீல் பெரிய பட்டியல் போட்டுக் கொண்டிருந்தான். சைனீஸ் ஹோட்டல் மூடுவிழா தான் என்று மற்ற ஜூரர்கள் பேசிக்கொண்டார்கள்.</p>
<p>“சர்த்தான், பெர்ர்ர்ய ப்ளானோட ஒரு குரூப்பாத்தான் திரியறானுவ போல இருக்கு” என்று எனக்குப்பட்டது. இருந்தாலும், சுற்றி இருக்கின்ற  எல்லோருடைய பச்சாதாபத்திலும் நனைந்து வழியும் ஒரு வீல்சேர் பேர்வழி மேல் அவ்வளவு சீக்கிரமாக அபாண்டமாக எதுவும் சோல்லிவிட முடியாதல்லவா? எக்குத்தப்பாக எதையாவது சொல்லி வைத்தால் எல்லோரும் நம் மேல் பாய்ந்து விழுந்து பிறாண்டி விட மாட்டார்களோ?</p>
<p>ஹோட்டல்காரருடைய சைனாக்கார வக்கீலும் கேஸை சொதப்பலாகவே நடத்திக் கொண்டிருந்தான். 25,000 டாலர்கள் கொடுத்து செட்டில் பண்ணிவிடலாம் என்கிற நினைப்பில் இருந்தான் போலிருக்கிறது. 10,000த்தில் முடியுமா என்று நூல் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற ஜூரர்களுக்கும் இது ஓகே, இன்னும் கொஞ்சம் கூட ‘மீட்டருக்கு மேலே’ போட்டுக் கொடுக்கலாம் என்றார்கள்.</p>
<p>“அன்னிக்கே அஞ்சாயிரம் குடித்திருந்தியானா உன்னிய அன்னிக்கே வுட்ருப்பேன்டி. பதில் கேசா போடற? இன்னிக்கி உனுகு இருக்குடி ஆப்பு, அம்பதாயிரமாச்சியும் கறக்காம உடறதில்லடி”</p>
<p>வீல்சேர் ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே, வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்’ என்று மனசுக்குள் பாடி சந்தோஷத்தில் குலுங்கியதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் ’த்ஸோ த்ஸோ’ என்று பதறினார்கள் சக ஜூரர்கள்.</p>
<p>“பயங்கர பகல் கொள்ளை இது” என்று நான் மனசுக்குள் குமுறினேன்.</p>
<p>கோர்ட் இடைவேளையில் சைனா வக்கீலைக் கூப்பிட்டேன்.</p>
<p>“அடேய் அபிஷ்டு, பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராச்சாரியார், டைகர் வரதாச்சாரியார், பூச்சி பயங்கராச்சாரியார் ரேஞ்சுக்கெல்லாம் உனக்கு கேஸ் நடத்தத் தெரியாதென்பது உன் சப்பை மூஞ்சியைப் பார்த்தாலேயே தெரிகிறது. அதற்காக நீ இவ்வளவு சோப்ளாங்கியாகவா கேஸ் நடத்துவது? அந்த வீல்சேரன் என்னடாவென்றால் ஆட்டோகிராஃப் ரேஞ்சுக்கு ஃபிலிம் காட்டுகிறான், ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே’ என்று சொல்லிச் சொல்லி ”அங்கே வலிச்சுதே, இங்கே குடைஞ்சுதே என்று சைக்கிள் ஓட்டுகிறான். இந்த மாயக்கண்ணாடியிலெல்லாம் நீயும் மயங்கி மக்கு பிளாஸ்திரியாக நிற்கிறாய்.</p>
<p>‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ ரேஞ்சுக்கு உன்னால் ஸ்நேகா மாதிரி இழுத்துப் போர்த்திக்கொண்டே சிரித்து மயக்கத் தெரியாதென்றாலும், இந்த அநியாயத்தை யாராவது தட்டிக் கேட்க வேண்டாமா?</p>
<p>சைனா தலையை தொங்கப் போட்டுக்கொண்டான்.</p>
<p>சரி, நீயும்  போய் சோத்தைக் கொட்டிக்கொண்டு, அல்லது நூடுல்சை ஒரு மொக்கு மொக்கி விட்டு வா. நான் சில பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுக்கிறேன் உனக்காக”</p>
<p><a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/02/Gita-in-Chinese.png"><img class="alignleft size-full wp-image-380" title="Gita in Chinese" src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/02/Gita-in-Chinese.png" alt="" width="200" height="250" /></a></p>
<p>ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ</p>
<p>அஹம் த்வா ஸர்வாபாபேப்யோ மோக்‌ஷயிஷ்யாமி மாஷுச:</p>
<p>நான் எதற்காக பகவத் கீதையின் பதினெட்டாவது அத்தியாயம் அறுபத்தி ஆறாவது ஸ்லோகம் ரேஞ்சுக்கு- கீதையின் சாராம்ச ரேஞ்சில் -அவனுக்கு அபயம் அளிக்கிறேன் என்பது புரியாமல் அவனும் பேய் முழி முழித்து, தலையைச் சொறிந்தபடி வெளியே போனான்.</p>
<p>நான் ஏன் பிறந்தேன்?</p>
<p>பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்கிருதாம்</p>
<p>தர்ம சம்ஸ்தாபனார்த்தாய <strong>சம்பவாமி யுஎஸ்ஏ யுஎஸ்ஏ</strong></p>
<p>என்றெல்லாம் நான் அவனுக்கு விளக்கம் சொல்வதாயில்லை.</p>
<p>*** *** ***</p>
<p>கைக்கடக்கமான என் ’பிட்’களைப் பார்த்த சைனா ஒரிஜினல் ஷகீலா பிட் பார்த்த சந்தோஷத்தில் இருநூறு டெசிபல் அதிகமாகவே எகிறி முழங்கினான்:</p>
<p>“மிஸ்டர் மோல்ஸ்கி, அன்று என் க்ளையண்ட்டின் சைனா உணவகத்தில் லஞ்ச் சாப்பிட வந்தீர்கள் இல்லையா?</p>
<p>“எங்கே சாப்பிட்டேன்?” மோல்ஸ்கி சிங்கம் போல் சீறினான்.</p>
<p>“சாப்பாடோ கேவலம். வாந்தி வந்தது. சக்கர நாற்காலியில் பாய்ந்து பாத்ரூம் ஓடினால், அய்யகோ, அங்கே என் சொல்வேன்? வாஷ் பேசின் எட்டவில்லை, தவித்த வாய்க்குத் தண்ணீர் குடிக்க முடியவில்லை, கம்மோடில் கால் வைக்க முடியவில்லை, கண்ணுக்கெட்டிய டிஷ்யூ கைக்கு எட்டவில்லை. கதவிடுக்கில் கை மாட்டி, கம்மோடில் கால் மாட்டி, சக்கர நாற்காலி சறுக்கி நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. என் எதிரிக்கும் இது நிகழலாகாது”</p>
<p>ஆஸ்கார் பெர்ஃபாமன்சில் மோல்ஸ்கி குலுங்கி அழுதான். மற்ற ஜூரர்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டபடி ”அட் லீஸ்ட் அம்பதாயிரம் குடுத்துடலாம்” என்று கிசுகிசுத்துக் கொண்டார்கள்.</p>
<p>புழு, பட்டாம்பூச்சியிலிருந்து பிரதிவாதி பயங்கர வக்கீலாய் உருவெடுத்துக் கொண்டிருந்த சைனா வக்கீல் என்னைப் பார்த்துக் கண்ணடித்தபடி,</p>
<p>“நல்ல நடிப்பு நண்பரே!. ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை தடவை லஞ்ச் சாப்பிடுவீர்கள், மோல்ஸ்கி?” என்று கேட்டான்.</p>
<p>”இதென்ன முட்டாள்தனமான கேள்வி?” மோல்ஸ்கி சீறினான். ஜட்ஜைப் பார்த்து “இந்த அபத்தத்துக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டுமா, ஐயா?”</p>
<p>“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்” என்றார் ஜட்ஜ். தன் செல்லத் தூக்கத்தை யார் கலைத்தாலும் அவருக்குக் கடுப்பு தாங்காது.</p>
<p>“எல்லோரையும் போல் ஒரு வேளை லஞ்ச், ஒரு வேளை டின்னர் தான்”</p>
<p>சீன வக்கீல் திடீரென்று விஸ்வரூபம் எடுத்தான்.</p>
<p>”இல்லையே, சம்பவம் நடந்த அதே தினத்தன்று நீங்கள் ஏழு இடங்களில் லஞ்ச் சாப்பிடச் சென்று, மற்ற ஆறு இடங்கள் மேலும் கேஸ் போட்டு, முப்பதாயிரம் டாலர்களுக்கு செட்டில் செய்திருப்பது உண்மையா இல்லையா?”</p>
<p>“ஜட்ஜய்யா, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” மோல்ஸ்கி பிளிறினான்.</p>
<p>“ஷட் அப்” என்றார் ஜட்ஜய்யா.</p>
<p>“அது மட்டுமல்ல, கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் 400-க்கு மேற்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர ஏரியா கடைகளில், ஹோட்டல்களில், பார்களில், திரை அரங்குகளில் ஏதாவது ஒரு பொய்க் குற்றச்சாட்டின் பெயரில் அடாவடியாக வசூலித்திருக்கின்ற மொத்தத் தொகை 1 மில்லியன் இருநூற்றி முப்பத்தை ஐந்தாயிரம் டாலர்கள். உண்மையா இல்லையா?”</p>
<p>“அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்” –மோல்ஸ்கியின் வக்கீல் அலறினான்.</p>
<p>“ஆல் ஆஃப் யூ ஷட் அப்” சீறினார் ஜட்ஜ்.</p>
<p>“உண்மையாகவே நலிவுற்றிருப்பவர்களின் நலன் கருதி நாட்டிலே ஒரு நல்ல  சட்டம் போட்டால் அதை வைத்து மோல்ஸ்கி போன்ற கயவர்கள் இப்படிக் கொள்ளை அடிப்பது அசிங்கம், அவமானம், அதிகபட்ச அபராதத்திற்கும் உரியது. மோல்ஸ்கியுடன் சேர்ந்து வக்கீல்கள் உட்பட ஒரு குண்டர் குழாமே இப்படி ஆட்டம் போட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.</p>
<p>இதை உடனே தடுத்து நிறுத்துவது இந்தக் கோர்ட்டாரின் தலையாய கடமையாகிறது. அதனால் இந்த மோல்ஸ்கி என்கிற வீல்சேர் வில்லனை உடனேயே, இக்கணமே, vexatious litigant என்று அறிவிக்கிறேன். அதாவது, இனிமேல் எந்த கோர்ட்டிலும் எந்தக் காலத்திலும் இந்த ஆள் எந்த கேஸ் போடவேண்டுமென்றாலும் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்.</p>
<p>இந்த கேசை தள்ளுபடி செய்கிறேன்.</p>
<p>”அது மட்டுமல்ல” தூக்கம் கலைந்து ஜட்ஜுக்கு நன்றாக முழிப்பு வந்து விட்டது போலும் “இந்த மாதிரி வெத்து கேஸ்களை ஜோடனை செய்ய உதவிய வக்கீலாகிய உமக்கும் இதே கதி தான். இனிமேல் நீர் எந்த கேஸை எங்கே தாக்குதல் செய்வதானாலும் என்னிடம் பர்மிஷன் கேட்டு வரவேண்டும்”</p>
<p>“நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது வழங்கப்படுவது அனைவருக்கும் தெரிந்து வழங்கப்படவேண்டும். உம்மை கலிஃபோர்னிய பார் கௌன்சிலில் இருந்தே நீக்கவும் இதனால் பரிந்துரை செய்யப்படுகிறது.</p>
<p>எல்லா ஜூரர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள்.</p>
<p>உலகத்திலே, ஸ்பெக்ட்ரமாகட்டும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகட்டும், லஞ்சத்தைக் களைய நினைப்பதாகட்டும்- வெறுமனே மனசுக்குள் நினைத்துக் கொண்டு மசாலா டீ சாப்பிட்டால் மட்டும் போதாது. தலைமை முதலில் பெருந்தூக்கம் கலைய வேண்டும், பயப்படாமல் துணிந்து செயல்படவேண்டும், சேலை நுனியில் ஒளிந்துகொள்வதை விடவேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காகக் குண்டர்களிடன் அடிபணிந்து கிடக்காமல் சிங் கம் போல் எழுந்து செயல்படவேண்டும்.</p>
<p>இன்னொரு முக்கியமான விஷயம். பயங்கர வீக்கான 1-11 மைனாரிடியாக இருந்தாலும், மெஜாரிட்டிக்கு ஜால்ரா போடாமல்,. சரியான நேரத்தில் மிகச் சரியான பாயிண்டுகளோடு நீதியை நிலைநாட்ட உதவிய ஜூரர் நம்பர் 12 அவர்களுக்கு இந்த கோர்ட் தன் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறது!</p>
<p>நான் வெட்கத்தில் நாணிச் சிவந்தேன்!</p>
<p>டயரியின் அடுத்த பக்கம், <strong>“நல்ல நல்ல பொண்ணுங்களை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி!” </strong></p>
<p>(சட்டம் தன் வேலையைச் செய்யும்)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=379</wfw:commentRss>
		<slash:comments>13</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு ஜூரியின் டயரி -3</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=373</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=373#comments</comments>
		<pubDate>Sat, 30 Jan 2010 04:02:10 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[தொடர்கள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=373</guid>
		<description><![CDATA[நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்!
அர்ச்சகரே கோவிலில் ஆட்டம் போட்டால் ஆண்டவன் போவதுதான் எங்கே?
காக்கிச் சட்டையே கைலிக்கு மாறி ஆட்டோவிலேறி ஆட்டையப் போட்டால்?
மக்களைக் காப்பாற்றி ரட்சிக்கவேண்டிய போலீஸ் அதை மறந்து உட்டாலக்கடி வேலைகளில் ஈடுபட்டதால் எழுந்த கேஸ்தான் நம் ஜூரி டையரியின் அடுத்த பக்கம்.
*** *** ***
லாஸ் ஏஞ்சல்ஸ்- பிரம்மாண்டமான ஒரு மாநகர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இங்கேயும் பெருநகர், புறநகர், வெளிநகர் எல்லாம் தாண்டிய சிற்றூர்களில் அங்குமிங்குமாகச் சில வீடுகள். துருப்பிடித்த ஓட்டை உடைசல் கார்கள். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்!</strong></p>
<p>அர்ச்சகரே கோவிலில் ஆட்டம் போட்டால் ஆண்டவன் போவதுதான் எங்கே?</p>
<p>காக்கிச் சட்டையே கைலிக்கு மாறி ஆட்டோவிலேறி ஆட்டையப் போட்டால்?</p>
<p>மக்களைக் காப்பாற்றி ரட்சிக்கவேண்டிய போலீஸ் அதை மறந்து உட்டாலக்கடி வேலைகளில் ஈடுபட்டதால் எழுந்த கேஸ்தான் நம் ஜூரி டையரியின் அடுத்த பக்கம்.</p>
<p>*** *** ***</p>
<p>லாஸ் ஏஞ்சல்ஸ்- பிரம்மாண்டமான ஒரு மாநகர் என்பது எல்லோருக்கும் தெரியும்.</p>
<p>ஆனால் இங்கேயும் பெருநகர், புறநகர், வெளிநகர் எல்லாம் தாண்டிய சிற்றூர்களில் அங்குமிங்குமாகச் சில வீடுகள். துருப்பிடித்த ஓட்டை உடைசல் கார்கள். அரதப்பழசான வெள்ளைக்கார குக்கிராமங்கள் உண்டு.</p>
<p>பாப்பாரப்பட்டி, அலுமினியக் குவளை, டீக்கடை பெஞ்ச், லஞ்ச போலீஸ், அழுக்கு ஜமக்காளம், ஆலமரத்தடி- எல்லாமே அமெரிக்காவிலும் உண்டு. என்ன வித்தியாசமென்றால் எல்லாவற்றையும் கொஞ்சம் ஸ்டைலாக ஆங்கிலத்திலே செய்வார்கள்.</p>
<p>அப்படிப்பட்ட ஒரு அமெரிக்க குக்கிராமம் தான் இந்த க்ரைம் ஸ்பாட்.</p>
<p>ஷிஃப்ட் போட்டுக்கொண்டு ஆங்காங்கே ஆங்கிலத்தில் ஊளையிட்டுக் களைத்த சொறிநாய்கள் கூட போரடித்துப்போய் உறங்கப் போய் விட்ட ஓர் இரவு நேரம். கனத்த பனி. பின்ஜாமத்துக் குறட்டை ஒலிகளையும், மனித விஸர்ஜன சப்த ஜாலங்களையும் மீறி ஒலிக்கிறது பீட்டர் என்கிற அந்த ஹிப்பி இளைஞனின் கோபக் குரல்:</p>
<p>“பாட்டி, இன்னும் தண்ணி அடிக்கணும். ரெண்டு மணிக்கு கடைய மூடிடுவான். துட்டு எடு. இல்லாட்டிக் கீசிடுவேன்”</p>
<p>’பாட்டி சொல்லைத் தட்டாதே’ என்கிற தொன்மையான தமிழ்ப் பழமொழி ஆங்கிலத்தில் ஒரு வயசாளியால் மொழிபெயர்க்கப்பட்டு ‘Listen to your Grandma’ ஆகியிருப்பது உங்களுக்குத் தெரியும். பாட்டி சொல் கேட்காதது மட்டுமல்ல பாட்டியையே ஒரு தட்டு தட்ட முனைந்தான் அந்தப் பேராகிராதகன்.</p>
<p>“அடச்சீ, கஸ்மாலம். கம்னு கெட. ஒரு முழு குவார்ட்டரை அதுக்குள்ளாரவா முழுங்கிட்ட? ஒரு ஸ்பூன் கூட என் கண்ல காட்டவே இல்லியே?” – இது தாக பாட்டியின் ஏக எரிச்சல்..</p>
<p>“குவார்ட்டர் பத்தல பாட்டி. இன்னும் ரெண்டு கட்டிங்காவது வோணும். துட்டு எடு. இல்லாட்டி உனுக்கு இன்னிக்கு சங்குதான் …”</p>
<p>“அடச்சீ, போடா பொறுக்கி. போய்த் தூங்குடா”</p>
<p><a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/01/jury-3a1.jpg"><img class="alignleft size-full wp-image-374" title="jury 3a" src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/01/jury-3a1.jpg" alt="" width="314" height="500" /></a>“முடியாது பாட்டி. துட்டு குடுக்காட்டி இந்த அண்டாவை உன் தலையிலே போடுவேன்” விஜயகாந்த் படங்களில் வரும் சின்னி ஜெயந்த் மாதிரியான அரை லூஸ் கேரக்டர் பீட்டர்- கோரைத் தலை, பாதி அவிழ்ந்து கிடக்கும் அரை டிராயருடன் குடி போதையில் பண்ணும் அலம்பலைப் பாசம் கொண்ட பாட்டியால்கூடத் தாங்க முடியவில்லை.</p>
<p>“பொறம்போக்கு நாய்ங்களா, எழுந்து வந்தாக்க, பாட்டி, பேரன் ரெண்டையுமே போட்டுத் தள்ளிடுவேன். தூங்க வுடுங்கடா” –இது பக்கத்து வீட்டு மோட்டார் ஹோம் தேவனின் அசரீரிக் குரல்.</p>
<p>“பாட்டியைக் கீசிட்டு அப்பால உனுக்குத் தாண்டா மோட்சம் குடுக்கப் போறேன். இன்னிக்கி நைட்டு நீயும் காலிடி. நாளைக்கு உனுக்கும் பாலு தான் மாமே. அல்லாருக்கும் சொல்லி அனுப்பிடு”</p>
<p>அமெரிக்காவில் அத்தனை பேரும் பில்லியனர் பில் கேட்ஸோ, மில்லியனர் செரினா வில்லியம்ஸோ இல்லை. அங்கே தற்சமயம் நடப்பதும் இந்தியாவில் நடக்கின்ற அதே கலி காலம் தான்.</p>
<p>வேலைவெட்டி இல்லாத தடித் தாண்டவராயனான பீட்டர் தண்ணியடிக்க துட்டு கேட்டு பாடாய்ப் படுத்துவதை எத்தனை நாள்தான் பாட்டியால் பொறுக்க முடியும்?</p>
<p>தட்டுத் தடுமாறி எழுந்த பாட்டி போலீசுக்கு வழக்கம்போல் ஒரு போன் போட்டாள். பேரன் பேக்ரவுண்டில் சவுண்டு கொடுத்துக் கொண்டே பாத்திரங்களை உடைத்துச் சலம்பிக் கொண்டிருந்தான்.</p>
<p>அட! அடுத்த இரண்டாவது நிமிடமே, சிவப்பு, நீலச் சுழல் விளக்குகளுடன் அந்த ஓட்டை வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு போலீஸ் கார்.</p>
<p>*** *** ***</p>
<p>மிடுக்கான, விறைத்த நீல நிறச் சீருடையோடு அமெரிக்கன் போலீஸ் இடுப்புத் துப்பாக்கியை வருடியபடியே பந்தா காட்டுவது, ஓவர்கோட்டோடு மழையிலும் துப்போ துப்பென்று துப்பு துலக்குவது, Dirty Harry ஸ்டைலில் வில்லனைப் போட்டுப் புரட்டிப் புரட்டி கைமா பண்ணுவதெல்லாம் ஹாலிவுட் சினிமா படங்களில் மட்டும்தான்.</p>
<p>சாதாரணமாக அமெரிக்கப் போலீஸ் படு சோம்பேறி ரகம். Doughnut Shop, ஸ்டார்பக்சில் காஃபி, பார்க்கிங் டிக்கெட் கொடுப்பது, பல் நோண்டுவது என்றே முழுநேர வேலைகாலத்தை அவர்கள் தொப்பைக்கு சிரமமில்லாமல் கழித்து விடுவார்கள். எங்காவது ரத்தம், கொலை, இருபது பேர் காலி என்றால் தான் சீட்டிலிருந்து தம் பிருஷ்ட பாகத்தைக் கொஞ்சமாவது நகர்த்தி எழுந்து விசாரிக்க முனைவார்கள்.</p>
<p>இந்த மாதிரி லேட் நைட் லுச்சா தண்ணி கேஸ்களுக்கெல்லாம் “ஆகட்டும், பார்க்கலாம்” தான் எப்போதுமே ரெஸ்பான்சாக இருக்கும்.</p>
<p>ஆனால், இந்த வெத்துவேட்டு லேட் நைட் கேசுக்கு இவ்வளவு ஜரூராக, சுறுசுறுப்பாக ஒரு போலீஸ்காரி வந்திருப்பதிலிருந்தே அவள். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள் என்பது உங்களுக்குப் புரியும். வீட்டு வாசலில் முதன்முதலாக போலீசைப் பார்த்த பாட்டிக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை.</p>
<p>”என் மஞ்சள் பூனையின் ஏழாவது குட்டியைக் காணவில்லை”, “போன வாரம் என் சைக்கிளில் யார் காற்றை இறக்கியது?”, ”ரம்மோடு சோடாவா அல்லது கோக்கா? எது பெட்டர்?” போன்ற பல அத்தியாவசிய காரணங்களுக்காகப் பாட்டியும் ஐம்பது வருடங்களாகப் பல நேரங்களில் போலீசைக் கூப்பிட்டிருக்கிறாள். இதுவரை ஒரு நாளும் போலீஸ் அவளைக் கண்டுகொண்டதாகச் சரித்திரம் இல்லை.</p>
<p>பாட்டி தன் சாளேஸ்வர கண்ணாடியைச் சரி செய்து கொண்டாள். “அடேடே இந்த போலீஸ் குட்டிக்கு எச்சுமிப் பாட்டியின் ஜாடை இருக்கிறதே?’ என்பது போல் பார்த்தாள்.</p>
<p><a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/01/jury-32.jpg"><img class="alignleft size-full wp-image-375" title="jury 3" src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/01/jury-32.jpg" alt="" width="199" height="350" /></a>“ஏண்டி இவளே, நீ நம்ப வைத்துவோட மச்சினன் பொண்ணில்லையோ? படிப்பெல்லாம் முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்துட்டியா? நோக்குக் கல்யாணம் ஆயிடுத்துன்னாளே, குளிச்சுண்டிருக்கியோ?” என்ற ரேஞ்சில் குசலம் விசாரிக்க ஆரம்பித்த பாட்டியை ‘உஸ்’ஸென்று அடக்கினாள் க. க. க. தவறாத நம் போலீஸ்காரிகை மேரி.</p>
<p>ஒரு காலத்தில் தான் தூக்கி வளர்த்த மூக்கொழுகிப் பொடிசான குள்ள மேரியிடம் இப்படிப்பட்ட அஃபிஷியல் ரெஸ்பான்சைப் பாட்டி எதிர்பார்க்கவில்லை.</p>
<p>“அல்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பா’ன்’ங்கறது சரி தான். ராப்பேய் மாதிரி நீயும் உன் அசிங்க தொள தொளா யூனிஃபார்மும்” என்று பாட்டி முனகியதை மேரி கண்டுகொள்ளவில்லை. கஞ்சி போட்ட புது யூனிஃபார்மின் ஒவ்வொரு காலும் ஒவ்வோரு திசை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது அவளுக்கே தெரியும். ஏற்கனவே பேனா, பென்சில், ரெகுலர் பெல்ட், கன் பெல்ட், டேஸர் துப்பாக்கி, பிரம்புத்தடி, ரெகுலர் துப்பாக்கி, தோட்டாக்கள், மிளகுநெடித் துப்பாக்கி, டார்ச்லைட், தொப்பி, ஆபீஸ் போன், சொந்த போன், வாக்கி டாக்கி, கை விலங்கு, அதற்கான சாவி, ஸ்டேஷன் சாவிக்கொத்து, போலீஸ் மினி மேனுவல், கார் சாவிகள், டம்மி மெடல்கள், நிஜ மெடல்கள், வாட்ச், மோதிரம், வளையல்கள், கம்மல்கள் என்று அவள் ஒரு நடமாடும் நகைக்கிடங்குத் தீவிரவாதியாகத் திகழ்ந்ததில் இந்தக் கிழத்துக்குப் பொறாமை என்று நினைத்துக் கனைத்துக் கொண்டாள்.</p>
<p>“தரித்திர மூதிக் கெழமே, பீட்டர நீ சவுட்டினியா, அவன் உன்னிய சவுட்டினானா?”</p>
<p>பாட்டி இதற்கு பதில் சொல்லுமுன், “துட்டு தர மாட்டேன்ற? உன்னிய ஃபேன்ல தொங்கவிடாம இன்னிக்குத் தூங்கறதில்லடி பாட்டி” என்று கத்தியபடி அங்கே பேராண்டி பீட்டர் வாசலில் பிரசன்னமானான்.</p>
<p>பீட்டர் மேரியைப் பார்த்தான். மேரி பீட்டரைப் பார்த்தாள். வார்த்தைகள் என்ன பயனுமின்றி அங்கே பனிக்குளிரில் நமுத்துப் போய் விழுந்தன.</p>
<p>“ஏய் நீ மேரிக்குட்டியல்லோ? அர்த்தராத்ரியில இங்ஙண ஏது சம்சாரிக்கின்னு?”</p>
<p>“பீட்டர், நல்லா இருக்கியாடா? இன்னும் குடிச்சு கலாட்டா பண்றத நீ விடலியா?”</p>
<p>“யாயும் யாயும் யாராகியரோ</p>
<p>எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்</p>
<p>யானும் நீயும் எவ்வழி அறிதும்</p>
<p>செம்புலப்பெயல்நீர் போல</p>
<p>அன்புடைநெஞ்சம் தாம்கலந்தனவே”</p>
<p>இப்படி ஒரு சீனை குறுந்தொகையில் க. தோன்றி ம. தோன்றுமுன்னரே நம் தமிழர்கள் காட்டி அசத்தி விட்டார்கள் அல்லவா? நீங்களும் இந்த ’இருவர்’ சீனை மனதில் பேக்ரவுண்ட் ம்யூசிக்குடன் ஓடவிடுங்கள். என்னதான் இன்று கச்சா முச்சாவென்று போலீஸ் சீருடை மாட்டியிருந்தாலும் மேரியும் பீட்டரும் ஒரு காலத்தில் ஒரே தெருவில் அம்மணக்கோலியாடிய நண்பர்கள் அல்லவோ?</p>
<p>நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்</p>
<p>“ஒன் செகண்ட். உள்ளாற வா மேரி. இந்தக் கெழம் என்ன பண்ணிச்சுன்னு நா சொல்றன்”</p>
<p>செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்</p>
<p>“நீ ஒன்னியும் சொல்லவோணாம். ஏற்கனியே குடி நாத்தம் கொமட்டுது”</p>
<p>அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா? நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்.</p>
<p>“பாவாடயத் தூக்கிப் புடிச்சிகினு நாம பாண்டி, பேந்தா ஆடினத நீ மறந்துகினியா செல்லம்?”</p>
<p>இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை</p>
<p>இடையே இல்லாமல், துரும்பு இடையில் மேகலை நில்லாமல் நழுவி விடும்படி தான் ஒரு காலத்தில் இளைப்பாக இருந்ததை பீட்டர் பாட்டால் சுட்டியதும் மேரி விம்மினாள், கமறினாள், தும்மினாள்.</p>
<p>இதுதான் சாக்கென்று வாசல் பக்கம் சாய்ந்து பீட்டர் ஒரே ஓட்டாமக ஓட எத்தனித்தான்.</p>
<p>துரும்பு இடை, கரும்பு வார்த்தை, செம்புலப்பெயல்நீராரின் குறுந்தொகைப் பாட்டு எல்லாமே பீலா என்று கொஞ்சம் லேட்டாக உணர்ந்த குண்டுக் குள்ள மேரி,</p>
<p>“ஓடாதடா, சுட்டுடுவன்” என்றலறினாள்.</p>
<p>“உனுக்கு ஒயுங்கா அம்மானை ஆடவே தெரியாது. நீ துப்பாக்கியால வேற சுடுவியா?” என்று இருட்டில் நக்கல் பண்ணினான் பீட்டர்.</p>
<p>என்ன செய்வது? இதுவோ நம் முதல் கேஸ் என்று கையைப் பிசைந்த மேரி, தன் போலீஸ் மினி மேனுவலை அவசரமாகப் படிக்க ஆரம்பித்தாள். இருட்டில் படிக்க முடியவில்லை. எதையெடுத்தாலும் ’மீதியை நெட்டில் பார்க்க’ என்று வேறு போட்டுத் தொலைத்திருக்கிறார்கள்.</p>
<p>பாட்டிக்கு ஏற்கனவே குள்ளமேரியிடம் இருந்த கடுப்பில், மேரியின் இடுப்பிலிருந்த கார் சாவிக்கொத்தைப் பிடுங்கி, இருட்டில் உத்தேசமாக பீட்டர் இருந்த திசையில் எறிந்து “ஓட்றா பீட்டரு. அவ போலீஸ் காரை எடுத்துட்டு ஓடிடு. இந்த குண்டம்மா இருட்டில தஸ்ஸு புஸ்ஸுன்னு நுரை தள்ளிக்கிட்டு ஓடியாற நாலு நாளாவும்”</p>
<p>‘Blood is thicker than liquor’ அல்லவா!</p>
<p>“ஐ லவ் யூ பாட்டி” இருட்டில் சாவி தேடிப் பீட்டர் துழாவலானான். குடி போதையில் நண்டு, நத்தையெல்லாம் கிடைத்ததே தவிர சாவிக்கொத்து கிடைத்தபாடில்லை.</p>
<p>தெலங்கானா மாதிரி நிலைமை அதிவேகமாகக் கட்டுங்கடங்காமல் போவதை உணர்ந்த மேரி பானா சீனா தானா வாய்க்கு வந்த வாக்குறுதியெல்லாம் தந்தது போல், “வோணாம்டா பீட்டரு. என் கண்ணில்ல. உன்னிய கண்ணாலம் கட்டிக்கிறண்டா, வேற எவனயாச்சியும் கட்டிக்கிட்டா மூத்த புள்ளக்கி ஒம் பேர வெக்கறாண்டா” என்று பினாத்தினாள்.</p>
<p>பாட்டி படாரென்று கதவைச் சாத்தி வாசல் லைட்டையும் அணைத்து விட்டு, உள்ளேயிருந்து. “கஸ்மால நாயே, எம்பேரனையா அரெஸ்ட் பண்ணப் பாக்கற? நாங்கள்லாம் யாருன்னு நெனச்சடி குள்ள சிறுக்கி? அவங்க தாத்தா எத்தனி ஜெயில்ல தப்பிச்சுப் போயிருக்காரு, தெரியுமா?” என்று தொடர்ந்தாள்.</p>
<p>அப்போது தான் பீட்டர் சுடப்பட்டு இறந்தான்.</p>
<p>கும்மிருட்டில் டேஸர் கன் எது, நிஜமான கன் எது என்று தெரியாமல், மேரி தொளதொளா யூனிஃபாரத்தில் கைவளை மாட்டிக்கொண்டு தடுமாறி, அவசர ஆத்திரத்தில் டேஸரால் சுட்டு பீட்டரை தற்காலிகமாகச்  செயலிழக்க வைக்கலாமென்று நினைத்து உத்தேசமாக இருட்டில் சுட, அந்த நிஜ தோட்டா பீட்டரின் உயிரை வாங்கியது.</p>
<p>பீட்டரின் பாட்டி போலீஸ் மேல் கேஸ் போட, போலீஸ் டேஸர் கன் கம்பெனி மேல் கேஸ் போட, நான் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன் ஜூரி பெஞ்சில்.</p>
<p>*** *** ***</p>
<p>‘நிஜ துப்பாக்கி மாதிரியே டேஸர் துப்பாக்கி இருந்ததால்தான் மேரி டேஸரென்று நினைத்து பீட்டரைச் சுட்டாள் என்பது போலீஸ் வாதம். அதற்கும் ஒரு படி மேலே போய் டேஸர் கம்பெனி தான் நஷ்ட ஈடு தரவேண்டுமென்பதும் அவர்களின் நிலைப்பாடு.</p>
<p>’இந்தக் கேஸே அபத்தம். டேஸர் கம்பெனி மேல் எந்தத் தப்பும் இல்லை’ என்கிற முடிவு எங்கள் ஜூரியின் ஏகோபித்த முடிவு.</p>
<p>ஆனால் ’மேரி மேல் எந்த டிபார்ட்மெண்டல் ஆக்‌ஷனும் போலீஸ் எடுக்காதது தவறு’ என்ற விஷயத்தில் 11 ஜூரர்கள் எனக்கு எதிர்தரப்பில்.</p>
<p>”போலீஸ்காரி மேரி சமயோசிதமாகச் செயல்படவில்லை. அவள் ஒரு மகா முட்டாள். போலீஸ் வேலைக்கே அவள் லாயக்கில்லை” என்றேன் நான்.</p>
<p>“எங்கள் ஊர் சாமிகள் எக்கச்சக்கமான ஆயுதங்கள் வைத்திருப்பார்கள். சங்கு, சக்கரம், அம்பு, வில், வாள் என்று உடம்பு முழுவதுமே போர் தளவாடங்கள். எங்கள் அம்பாள் கூட ’தனுர்பாணான் பாசம் ஸ்ருணிமபி ததானா கரதலை:’ வில், அம்பு, பாசக் கயிறு எல்லாம் வைத்திருப்பவள். ஆசைவடிவான பாசம் இடது மேல்கையில், கோபமாகிய அங்குசம் வலது மேல்கையில், மனமாகிய கரும்புவில் இடது கீழ்க்கையில், ஐந்து தன்மாத்திரைகளாகிய பாணங்கள் வலது கீழ்க்கையில். எந்த நேரத்தில் எதை எடுத்து எதை மறைத்து எப்படிப் பிரயோகிக்கவேண்டும் என்பது ஆயுதம் ஏந்தியவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டிய பாலபாடம்.</p>
<p>மேரி அதிலே பூஜ்யம். முன்னால் அணியவேண்டிய டேஸரைப் பின்னால் அணிந்து, பின்னால் அணிய வேண்டிய நிஜத் துப்பாக்கியை முன்னால் அணிந்து, ’முன் அணி எது, பின் அணி எது?’ என்ற குழப்பத்தில் அவள் சொதப்பி விட்டாள். இந்தக் குற்றமே இந்த பின்னணியால் தான். அதை விட மிக முக்கியம் அவள் தன் டார்ச் லைட் வெளிச்சத்தில் பீட்டரைத் தேட முயலாதது. ஏகப்பட்ட சமாச்சாரங்களுடன் டார்ச் லைட்டையும் இடுப்பில் வைத்திருந்தது அவளுக்கு நினைவே இல்லை.</p>
<p>ஒரே நேரத்திலே எங்கள் ஊர் சாப்பாட்டுத் தட்டில் பூரி, கிழங்கு, சாம்பார், ரசம், இட்லி, தோசை, மிளகாய்ப்பொடி, நெய், எண்ணெய், மசால் வடை, மெதுவடை, பாயசம், பஜ்ஜி, சொஜ்ஜி என்று எக்கச்சக்கமான ஐட்டங்கள் இருந்தாலும் நாங்கள் எந்த நேரத்தில் எதை, எதற்கு முன்னால் எதை, எதற்குப் பின்னால் எதை, என்றெல்லாம் ஒரு வரைமுறை வைத்து வளைத்துக் கட்டுவோம். உதாரணமாக, முதலில் பருப்பு சாதம், நெய் …”</p>
<p>பதினோரு ஜூரர்களும் இரு கைகளையும் தூக்கி “அய்யோ வேண்டாம், பிரிஞ்சிட்சிங்ணா, விட்ருங்ணா” என்று என் வழிக்கே வந்தனர்.</p>
<p>லாஸ் வேகாஸ் போகும் வழியில் மேரி இப்போது ஆப்பக்கடையோ, காக்காய் பிரியாணிக் கடையோ வைத்திருக்கிறாள் என்று கேள்வி. கடையின் நடுநாயகமாக பீட்டரின் படம் அலங்காரங்களுக்கு நடுவே இருக்கிறதாம்.</p>
<p>டயரியின் அடுத்த பக்கம், <strong>“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’</strong></p>
<p>(சட்டம் தன் வேலையைச் செய்யும்)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=373</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு ஜுரியின் டயரி -2</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=345</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=345#comments</comments>
		<pubDate>Tue, 19 Jan 2010 20:00:19 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[தொடர்கள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[காமெடி]]></category>
		<category><![CDATA[ஜுரி]]></category>
		<category><![CDATA[டயரி]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=345</guid>
		<description><![CDATA[’கலக்கப் போவது யாரு?’
முதல் திருட்டு முத்தம், முதன்முறை செவுளில் வாங்கிய ‘பளார்’, முதன் முதல் கசமுசா மேட்டர் அளவுக்கு முதல் ஜூரி கேசும் முக்கியமானது தான்.
காரணமே இல்லாமல் நம் இந்திய சகோதர சகோதரிகளுக்கு அவ்வப்போது சிக்கன்குனியா, ஜாண்டிஸ் என்று அடிக்கடி வருவது போல், அமெரிக்க வாழ் மாந்தருக்கும் ‘ஜூரர் செலக்‌ஷன் நோட்டீஸ்’ என்ற ஒன்று தபாலில் திடீரென்று வரும்.
அது வந்தவுடனேயே அதைப் படிக்காமல் அப்படியே குப்பையில் போடக் கை கால் பரபரக்கும். இருந்தாலும் அதில் சிவப்பு மையில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>’கலக்கப் போவது யாரு?’</strong></p>
<p>முதல் திருட்டு முத்தம், முதன்முறை செவுளில் வாங்கிய ‘பளார்’, முதன் முதல் கசமுசா மேட்டர் அளவுக்கு முதல் ஜூரி கேசும் முக்கியமானது தான்.</p>
<p>காரணமே இல்லாமல் நம் இந்திய சகோதர சகோதரிகளுக்கு அவ்வப்போது சிக்கன்குனியா, ஜாண்டிஸ் என்று அடிக்கடி வருவது போல், அமெரிக்க வாழ் மாந்தருக்கும் ‘ஜூரர் செலக்‌ஷன் நோட்டீஸ்’ என்ற ஒன்று தபாலில் திடீரென்று வரும்.</p>
<p>அது வந்தவுடனேயே அதைப் படிக்காமல் அப்படியே குப்பையில் போடக் கை கால் பரபரக்கும். இருந்தாலும் அதில் சிவப்பு மையில் எழுதியிருக்கும் வார்னிங் வாசகங்களைப் பார்த்தவுடன் உடம்பு லேசாக நடுங்குவதையும் காது மடல் சிவப்பதையும், மார் வலி வருகிறாற்போல் உணருவதையும் யாரும் மறுக்க முடியாது.</p>
<p>”மவனே! அப்டிய தூக்கிக் கடாசிடலாம்னு ரோசனை பண்ற? அப்டி எத்னா பண்ணின, ஆறு மாசம் ஆப்பக்களி தாண்டி உனுகு’</p>
<p>“இந்த நோட்டீசில் உள்ள போன் நம்பரைத் தொடர்பு கொள்ளாவிட்டால் $10,000 அபராதம்”</p>
<p>”ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறாதீர்”</p>
<p>இன்னபிற வாசகங்களால் உந்தப்பட்டு, அதுவும் அந்த ஆறு மாசம் ஆப்பக்களி + ஃபைனுக்குப் பயந்து தான் நான் முதல் ஜூரி வேலைக்குப் போனேன்.</p>
<p>*** *** ***</p>
<p>யாராவது ’பென்சிலைத் திருடிட்டான் சார், லப்பரை லவுட்டிட்டான் சார்’ ரேஞ்சுக்குத்தான் சின்ன கேஸ் வரும், மாலை வரை தாக்குப் பிடித்து, சாலமன் மாதிரி மர்மமாக ஏதாவது ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டு, சாயங்கால டிஃபனுக்கு வீட்டுக்கு வந்துவிடலாம் என்று தெம்பாகத்தான் நான் போனேன்.</p>
<p>ஜுரி செலக்‌ஷன், 12 ஜுரர்கள், 2 ஆல்டர்நேட் போன்ற விவகாரங்கள் உங்களுக்கு இப்போது தேவை இல்லை. சமயம் வரும்போது தேவையானால் சொல்கிறேன். என்னைத் தவிர வேறெந்த ஜுரருக்கும் இந்தக் கேசில் கிஞ்சித்தும் ஆர்வம் இல்லை என்பதே இங்கே சாராம்சம். அவனவனும் ஒரு புதுத் திசையில் திரும்பிப் பல் குத்திக் கொண்டிருந்தான்கள். எனக்கு அப்படியெல்லாம் எச்சில் பண்ணப் பிடிக்காது. தவிரவும் இங்கே என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று எனக்குள் ஓர் ஆர்வம்.</p>
<p>சில லக்கி ஜுரர்களுக்கு மட்டும் ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு மர்மக் கேஸ், O.J. சிம்ப்ஸன் கேஸ், மைக்கேல் ஜாக்சன் மர்டரா? என்று மாட்டும். கேஸ் முடிந்தவுடன் ஜுரர் புத்தகம் எழுதியே துட்டு பார்க்கலாம்.</p>
<p>ஆனால் எனக்கு வாய்த்ததென்னவோ ’கணவன் – மனைவி கேஸ். (உண்மைப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன் என்றெல்லாம் டகல்பாச்சி பண்ணப் போவதில்லை. உண்மைப் பெயரைப் போட்டால் நீங்கள் என்ன ஓடிப்போய் விசாரிக்கவா போகிறீர்கள்?)</p>
<p>கணவன் ஜாக், மனைவி சில்வியா. “நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க” மாதிரி தான் இருவரும் இளமையாக இருந்தார்கள்.<br />
<a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/01/huge.22.110912.jpg"><img class="alignleft size-full wp-image-346" title="huge.22.110912" src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/01/huge.22.110912.jpg" alt="" width="338" height="450" /></a></p>
<p>ஆனால், ”இங்கே வயசு முக்கியம் இல்லை, யுவர் ஆனர், இது ‘ஹோம் வயலென்ஸ் கேஸ்’ என்றார்கள் வக்கீல்கள் முதலில். நான் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். கட்டிப் பிடித்துக் கட்டிலிலிருந்து கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ளவேண்டிய வயதல்லவோ இது? யார் யாரிடம் வயலெண்ட் ஆக நடந்து கொண்டது?</p>
<p>கேசின் விபரங்கள் அவ்வப்போது அசுவாரசியமாகச் சொல்லப்பட்டன.</p>
<p>அந்த சில்வியாப் பெண்மணி தான் ஜாக்கைப் போட்டு சாத்தி விட்டாளாம். பலே! பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. ‘பரிஷீணா மத்யே’ என்றபடி இடையே இல்லாமலும் முன் பின் பாரத்தோடும் அழகாக இருக்கிறாளே, இதுவா அந்த ஜாக்கைப் போட்டுப் பொளந்து விட்டது? இந்த மாதிரி தே, கேசுகள் அடித்தால் தானென்ன? கடித்தான் தானென்ன? வலிக்கவே வலிக்காதே.(தேவதை கேசுங்காணும், நீர் ஏதாவது தப்பர்த்தம் செய்து கொள்ளப் போகிறீர்)</p>
<p>ஜாக்கும் ஆமிர் கான் மாதிரி தான் இருந்தான். வாய் ஓங்கினாலேயே சில்வியா பயந்து விடும் போல் தெரிகிறதே ஜாக், எதற்குக் கை ஓங்கினாய்? ஓங்கி உலகளந்த உத்தமன் மாதிரி இப்போது சிரித்துக்கொண்டு நிற்கிறாயே. ஒரு வேளை இதெல்லாமே இந்த வக்கீல்களின் செட்டப்போ?</p>
<p>நான் நான்வயலென்ஸை நம்புகிறவன். பெண்டாண்டி கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்த உடனே ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொண்டு கார் சாவியைக் கையில் வைத்துக்கொண்டு வாசல் பக்கமாக நிற்கிற தைரியசாலி.</p>
<p>ரத்த சேதம், காயம் என்றெல்லாம் காற்று வாக்கில் பேச்சு கேட்டதுமே எனக்கு பல்ஸ் விழ ஆரம்பித்து விட்டது.</p>
<p>பிறகு “வாதி-பிரதிவாதி இருவருக்குமே காயங்கள் தான். ஆனால் வெளிக்காயம் மாதிரி உட்காயம்” என்று வக்கீல்கள் சொதப்பினார்கள். நம்பும்படியாக இல்லை.</p>
<p>எனக்கு சரியாக கேஸ் பிடிபடுவதற்குள் லஞ்ச் என்று சொல்லி விட்டார்கள். எனக்குப் பசியே இல்லை. லஞ்ச் நேரத்தில் கேஸ் கட்டை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்று வக்கீல்களிடம் சொல்லி, நான் ஏகாதசிப் பட்டினியாக ஒரு மரத்தடியில் சாய்ந்து கேஸ் கட்டைப் படிக்கலானேன்.</p>
<p>*** *** ***</p>
<p>அதிவேக அவசர அமெரிக்க வாழ்க்கையின் பல நிர்ப்பந்தங்கள் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் அல்லது ருசித்திருப்பீர்கள்.</p>
<p>காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக ஆபீஸ் ஓடவேண்டிய நிர்ப்பந்தம். காரிலேயே 60 மைல் வேகத்தில் பல பேர் ஷேவ் செய்துகொள்வது, லிப்ஸ்டிக், முகப்பூச்சு, பின்னல், மொட்டை எல்லாமே அவசரத்தில் தான் முடிக்க நேரிடும்.</p>
<p>கேசின் உள் வர்த்தமானம் என்னவென்றால், வழக்கமாக சில்வியா தான் தினமும் காஃபி போட்டு வைப்பாளாம். அவசர அவசரமாகக் காலைச் சிற்றுண்டி என்று பெயரில் எதையாவது தின்று விட்டு மறக்காமல் காஃபி மட்டுமாவது குடித்தபடி இருவருமே வேலைக்கு ஓடி விடுவார்களாம்.</p>
<p>இதிலே என்ன ஹோம் வயலென்ஸ் மண்ணாங்கட்டி என்று கேட்கிறீர்களா? எனக்கும் கொட்டாவி வந்தது. பொறுமை, பொறுமை.</p>
<p>திங்கள் முதல் வெள்ளி வரை வழக்கமான இதே ரொடீன். சனி, ஞாயிறுகளில் தான் அவர்களிடம் இந்த ‘கலக்கப் போவது யாரு?’ சர்ச்சையாக வெடித்திருக்கிறது.</p>
<p>தினம் தினம் தான் நான் காஃபி போட்டுத் தொலைக்கிறேனே, சனி ஞாயிறுகளிலாவது ஜாக் அதைக் கலந்தாலென்ன, நான் எக்ஸ்ட்ராவாக ஒரு பத்து நிமிஷம் தூங்குவேனே என்பது சில்வியாயின் வாதம். ஜாலியாகத்தான் அது ஆரம்பித்திருக்கிறது.</p>
<p>”நீதான் பிரமாதமாகக் காஃபி போடுகிறாயே, நான் போட்டால் கஷாயம் மாதிரி தானே வந்து தொலைக்கிறது. அதனால் நீயே போட்டு விடேன் இன்றும் என்றும்” என்பது ஜாக்கின் வாதம். அதிலுமொரு நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை.</p>
<p>ஆனால், வாதம் வாக்கு வாதமாகி, விவகாரமாகி, ஒரு சனிக்கிழமைக் காலை 9-10.30 நல்ல முகூர்த்த ராகு காலத்தில் கிச்சனில் வார்த்தை தடித்திருக்கிறது. விஜய் டீவியின் Boys Vs Girls மாதிரி ’போடா டேய், போடி டேய்’ ஆகியிருக்கிறது. பிறகு காஃபித்தூள், ஃபில்டர், வெந்நீர், டபரா, டம்ளர் எல்லாம் ’அவ்தார்’ மாதிரி ஆகாயத்தில் பறந்திருக்கிறது. இவன் கத்த, அவள் கத்த, இவள் வீச, அவன் வீச, இவள் அடிக்க, அவன் தடுக்க, இப்போது போலீஸ், கோர்ட் கேஸ், ஹோம் வயலென்ஸ் கேஸ் என்று ஆகி என் கழுத்தை அறுக்கும் ஜூரி டூட்டி வரையில் நடந்திருக்கிறது.</p>
<p>முழுவதும் படித்து முடித்த எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.</p>
<p>லஞ்சுக்குப் பிறகு கோர்ட் கூடியதும் நான் ஜட்ஜிடம் சில வார்த்தைகள் தனிமையில் பேசலாமா என்று கேட்டேன்.</p>
<p>“நீ யாரடா அற்பப் பதர்?” என்கிற மாதிரி முதலில் என்னைப் பார்த்த தொண்டு கிழ வெள்ளை ஜட்ஜிடம் கை கட்டி வாய் பொத்தி பவ்யமாகச் சில விஷயங்கள் சொன்னதும், “ஓ, அப்படியா?!” என்று புருவத்தை உயர்த்தினார். நானும் பதிலுக்குப் புருவத்தை உயர்த்தி என் நெற்றியை ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினேன்.</p>
<p>ஜட்ஜ் சிரித்தார்.</p>
<p>என்ன நடக்கிறது என்று புரியாமல், இரண்டு சைடு வக்கீல்களும் “இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை, யுவர் லொள், ஆனர் லொள்” என்று கோரசாக ஆரம்பிக்க, அவர்கள் ”உஷ்!” என்று கையமர்த்தப்பட்டனர்.</p>
<p>ஒரு தனி அறையில் நான், ஜாக், சில்வியா!</p>
<p>“உங்கள் தனிப்பட்ட கேசில் நான் தலையிடுவதாக நீங்கள் நினைக்கக்கூடாது. இதே மாதிரி கேஸ் ஒன்றில் நான் ஏற்கனவே அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் ஜட்ஜ் ஐயாவிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி …”</p>
<p>“கம் டு தி பாயிண்ட். ஹி ஈஸ் ய ப்ரூட்” என்றாள் சில்வியா கோபமாக.</p>
<p>“இருவருமே என் நெற்றியில் இருக்கும் வடுவைப் பாருங்கள்” என்றேன் நான்.</p>
<p>‘பேஷ்! உன்னையும் ஒரு கிராதகி டம்ளரால் அடித்தாளா? டம்ளரா, டவராவா? உருண்டு வரும் டம்ளரைக்கூடப் பிடித்து விடலாம். சுழன்று வரும் டவராவைப் பிடிக்கவே முடியாது தெரியுமா?” ஜாக் புலம்பினான்.</p>
<p>”இவன் எதற்குமே லாயக்கில்லை. அதற்கும் சேர்த்து” என்றாள் சில்வியா. வேறு எதற்கெல்லாம் என்று கேட்க நினைத்து, வேண்டாமென்று முடிவு பண்ணி, இருவரையும் கை அமர்த்திய பிறகு நான் சொன்னேன். “சில விஷயங்களில் பெண்கள் சமர்த்தர்கள். சில விஷயங்களில் ஆண்கள் சமர்த்தர்கள். எங்கள் வீட்டில் என் மனைவி மாதிரி நானும் காஃபி பொடுகிறேன் பேர்வழி என்று ஒரு தடவை நான் ஆரம்பித்து அந்த ஃபில்டரில் காஃபியை எங்கே வைத்துத் திணிப்பது என்று தெரியாமல் நான் திண்டாடிக் கடைசியில் அரை மணி நேரத்தில் ஒரு சொட்டு டிகாக்‌ஷன் கூட ஏன் இறங்கவில்லை என்று நான் குனிந்து கூராய்ச்சி பண்ணப் போய், அந்த நேரத்தில் ஃபில்டரில் மேல் மூடி நீராவி வேகத்தில் பொத்துக்கொண்டு என் நெற்றியில் அடித்து அதனால் ஏற்பட்ட விழுப்புண் இது. அன்றிலிருந்து நான் கறிகாய் கட்டிங், அவள் காஃபி என்று பொறுப்பாக சமையலறை வேலைகளைப் பிரித்துக் கொண்டு விட்டோம். இப்போது எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. என் மனைவி மாதிரி ஒருத்தரும் காஃபி போடமுடியாது. என்னை மாதிரி ஒரு பயலும் அதை சப்புக்கொட்டிக் குடிக்க முடியாது. ஐயாம் ஷ்யூர் சில்வியா ஈஸ் ய க்ரேட் குக்”</p>
<p>கொஞ்ச நேரம் மௌனம். யாரோ விசும்புவது மாதிரி என் காதில் விழுந்தது.</p>
<p>“சில்வியா மாதிரி ஒருத்தராலும் காஃபி போட முடியாது” என்றான் ஜாக்.</p>
<p>பத்து செகண்ட் மௌனம்.</p>
<p>“ஜாக் பிரமாதமாக கிச்சன் வேலை செய்வான். மெக்சிகோவிலிருந்து வாங்கி வந்த முழுப் பலாப்பழத்தைக் கூட ஒரு தடவை தானே நறுக்கி விட்டான்” என்றாள் அவள் சிவந்த மூக்குடன்.</p>
<p>“உங்கள் சாதாரண சண்டையை வக்கீல்கள் கண், காது, மூக்கு, உட்காயம் வைத்து ஜோடனை செய்து விட்டார்கள். ஜட்ஜோ மகா கிழவர். சீட்டில் சாய்ந்து தான் உட்காருகிறார். ஏதாவது உடல் உபாய மூலாதார எரிச்சலில், ஒரு பெரிய அமௌண்டை ஜீவனாம்சம், பரிகாரம் என்று சொல்லி வைத்தால் அதில் படிக்குப் பாதி வக்கீல்கள் கபளீகரம் செய்து விடுவார்கள், தெரியுமில்லையா? அதுவும் நீங்கள் இரண்டு பேருமே நல்ல வேலையில் இருப்பவர்கள். உங்களுக்கு இந்தக் கொடுமையெல்லாம் தேவையா?”</p>
<p>இருவருமே தலையசைத்து ”நோ” என்று ஆமோதித்தார்கள்.</p>
<p>“இரண்டு பேரும் என்னோடு வாருங்கள், ஜட்ஜிடம்” என்றேன்.</p>
<p>“யுவர் ஆனர்!” என்று ரெய்ன்கோட் போட்ட விஜய்காந்த் மாதிரி என் ஓவர்கோட்டை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு வசனம் பேச ஆரம்பித்தேன். இந்த மாதிரி ஒரு கோர்ட் சீனில் ஃபிலிம் காட்டவேண்டுமென்பது என் வெகு நாளைய ஆசை. நெற்றியைப் பரபரவென்று தேய்த்து விட்டுக் கொண்டேன். பூட்ஸ் காலால் படீரென்று சப்தம் எழுப்பினேன். சடனாகத் திரும்பி, ஒரு எஃபெக்டுக்காகக் கூரையை நோக்கி ஒரு லுக் விட்டபடி ஆரம்பித்தேன்.</p>
<p>“ஆண்களால் ஒழுங்காக சமையல் மட்டுமல்ல, கேவலம் ஒரு வாய் காஃபி கூடப் போட முடியாது என்பதை நான் 5000 வருஷத்துக்கு முந்தைய ஆதி சங்கரர் மேற்கோளுடன் இங்கே இச்சபையில் நிறுவப் போகிறேன், கனம் கோர்ட்டார் அவர்களே”</p>
<p>“திஸ் ஈஸ் ஹைலி அன்யூஷுவல் யுவர் ஆனர்”</p>
<p>“உஷ், கவனிங்கப்பா! எக்ஸ்பர்ட் ஜூரர்”</p>
<p>“நீங்களெல்லாம் மாடு மேய்க்கக் கற்றுக்கொள்வதற்கு ஐயாயிரம் வருட முன்பே நாங்கள் இதிகாசங்கள், காவியங்கள் படைத்து இலக்கியத்திலே திளைத்திருந்தோம். சௌந்தர்ய லஹரி என்ற ஒரு மகா காவியம் எங்கள் ஊரில் இருக்கிறது. அதிலே ஒரு இடத்தில் ஆதி சங்கரர் “நரம் வர்ஷியாம்ஸம் நயன விரஸம் நர்மஸு ஜடம்” என்கிறார்.</p>
<p>வக்கீல்களென்ன, டவாலி, க்ளார்க், மற்ற ஜுரர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள்- எல்லோருமே அங்கே பேச்சடைத்து பேஸ்தடித்து நின்றார்கள். ஏசி மெஷின் கூட சப்தத்தைத் தானாகவே குறைத்துக் கொண்டது. திருவிளையாடல் படத்தில் ‘நான் அசைந்தால் அசையும்’ பாட்டின்போது ஒரு ஃப்ரீஸ் வருமே, அதே எஃபெக்ட்.</p>
<p>“உங்களுக்கெல்லாம் சம்ஸ்கிருதம் வராதென்பது எனக்குத் தெரியாதா? பொழிப்புரையும் நானே சொல்லி விடுகிறேன். நரம் என்றால் மனிதர்கள். வர்ஷீயாம்ஸம் என்றால் மிகவும் வயதான கெழ போல்டு சொங்கிகள். நயன விரஸமென்றால் கண்ணாலே பார்க்கவும் சகிக்காத கண்றாவி. ’நர்மஸு ஜடம்’- நோட் தி பாயிண்ட், யுவர் ஆனர்! இங்கே தான் மிக முக்கியமான லா பாயிண்ட் அண்ட் எவிடென்ஸ் இருக்கிறது. எங்கள் ஊரில் நரசூஸ் காஃபி என்று ஒன்று இருக்கிறது. நெஸ்கஃபே இருக்கிறது. அதைத்தான் ஒன்றொன்றாக லிஸ்ட் போடாமல் ஆதி சங்கரர் கொஞ்சம் இலக்கியத் தரமாக நர்மஸு என்று கொஞ்சுகிறார். ரொம்ப சிம்பிளான அந்த ரெடிமேட் காஃபிகளைக் கூட ஒழுங்காகக் கலக்கத் தெரியாமல் எங்கள் ஊர் ஆண்கள் மகா கோரமான கலரில் அதைக் கலந்து, அருவருப்பான டேஸ்டில், பார்க்கவும் சகிக்காமல், சர்க்கரையைக் கொட்டித் தொலைத்து, அதையும் ஒரு பயலும் குடிக்கவும் முடியாமல், தடுமாறி, அப்படியே காலப்போக்கில் கிழபோல்டாகி நரை கூடிக் கிழப் பருவமெய்திப் பின் கூற்றுக்கு இரையென மாயும் பலப்பல வேடிக்கை மனிதர்களாகி விட்டார்கள்”</p>
<p>நான் தொடர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.</p>
<p>“அதனால் யுவர் ஆனர்! நான் இப்பொழுது என்ன சொல்ல வருகிறேனென்றால …” என்று நான் முடிக்க நினைத்துக் கீழே பார்த்தால், அங்கே ஒரு பயலும் இல்லை.</p>
<p>டோட்டல் சைலன்ஸ்!</p>
<p>கேஸை வாபஸ் பண்ணிக்கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லோரும்- ஜட்ஜ், டவாலி உட்பட- தலை தெறித்து ஓடிப்போய் விட்டார்களாம்.</p>
<p>டயரியின் அடுத்த பக்கம்: <strong>’நடந்தது என்ன? குற்றமும் பின் அணியும்’</strong></p>
<p>(சட்டம் தன் வேலையைச் செய்யும்)                                                படம்: நன்றி, இட்லிவடை!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=345</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>முதலை, நல்ல பாம்பு, ரோமுலஸ்!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=338</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=338#comments</comments>
		<pubDate>Tue, 19 Jan 2010 04:37:56 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[பயணம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=338</guid>
		<description><![CDATA[’ஒரு ஜூரியின் டயரி -2’ எழுதிக் கொண்டிக்கும்போது ஒரு சேஞ்சுக்காக நெட்டில் உலாத்திக் கொண்டிருக்கும்போது, இந்த அபூர்வமான விடியோவைப் பார்த்தேன்.
நான் எழுதி முடிக்கும்வரை நீங்கள் படம் பார்த்துக் கொண்டிருங்கள்!

]]></description>
			<content:encoded><![CDATA[<p>’ஒரு ஜூரியின் டயரி -2’ எழுதிக் கொண்டிக்கும்போது ஒரு சேஞ்சுக்காக நெட்டில் உலாத்திக் கொண்டிருக்கும்போது, இந்த அபூர்வமான விடியோவைப் பார்த்தேன்.</p>
<p>நான் எழுதி முடிக்கும்வரை நீங்கள் படம் பார்த்துக் கொண்டிருங்கள்!<br />
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="446" height="326" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="wmode" value="transparent" /><param name="bgColor" value="#ffffff" /><param name="flashvars" value="vu=http://video.ted.com/talks/dynamic/RomulusWhitaker_2009I-medium.flv&amp;su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/RomulusWhitaker-2009I.embed_thumbnail.jpg&amp;vw=432&amp;vh=240&amp;ap=0&amp;ti=728&amp;introDuration=16500&amp;adDuration=4000&amp;postAdDuration=2000&amp;adKeys=talk=romulus_whitaker_the_real_danger_lurking_in_the_water;year=2009;theme=a_greener_future;theme=bold_predictions_stern_warnings;theme=new_on_ted_com;theme=animals_that_amaze;theme=a_taste_of_tedindia;event=TEDIndia+2009;&amp;preAdTag=tconf.ted/embed;tile=1;sz=512x288;" /><param name="src" value="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf" /><param name="bgcolor" value="#ffffff" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="446" height="326" src="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf" flashvars="vu=http://video.ted.com/talks/dynamic/RomulusWhitaker_2009I-medium.flv&amp;su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/RomulusWhitaker-2009I.embed_thumbnail.jpg&amp;vw=432&amp;vh=240&amp;ap=0&amp;ti=728&amp;introDuration=16500&amp;adDuration=4000&amp;postAdDuration=2000&amp;adKeys=talk=romulus_whitaker_the_real_danger_lurking_in_the_water;year=2009;theme=a_greener_future;theme=bold_predictions_stern_warnings;theme=new_on_ted_com;theme=animals_that_amaze;theme=a_taste_of_tedindia;event=TEDIndia+2009;&amp;preAdTag=tconf.ted/embed;tile=1;sz=512x288;" bgcolor="#ffffff" wmode="transparent" allowfullscreen="true"></embed></object></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=338</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வாழ்த்து செய்திகள்! நன்றி!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=336</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=336#comments</comments>
		<pubDate>Mon, 18 Jan 2010 18:00:01 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=336</guid>
		<description><![CDATA[தொலைபேசி, தனி மடல், சாட் என்று எல்லா ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்து செய்திகள் அனுப்பி இருக்கின்ற வாசக, எழுத்தாள நண்பர்களுக்கு நன்றி!
எல்லோரும் இளித்திருக்க என்பதுவேயல்லாமல வேறொன்றறியேன் பராபரமே!
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
]]></description>
			<content:encoded><![CDATA[<p>தொலைபேசி, தனி மடல், சாட் என்று எல்லா ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்து செய்திகள் அனுப்பி இருக்கின்ற வாசக, எழுத்தாள நண்பர்களுக்கு நன்றி!</p>
<p>எல்லோரும் இளித்திருக்க என்பதுவேயல்லாமல வேறொன்றறியேன் பராபரமே!</p>
<p>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=336</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு ஜுரியின் டயரி -1</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=322</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=322#comments</comments>
		<pubDate>Sat, 16 Jan 2010 00:57:51 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[தொடர்கள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>
		<category><![CDATA[காமெடி]]></category>
		<category><![CDATA[ஜுரி]]></category>
		<category><![CDATA[டயரி]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=322</guid>
		<description><![CDATA[கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.
ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?
&#8216;ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)
மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.</p>
<p>ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?</p>
<p>&#8216;ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)</p>
<p>மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் தெரியும், ஏஞ்சலீனா ஜோலியைத் தெரியும், ஆனால் ஜூரியைத் தெரியாதா?</p>
<p>என்ன இளிப்புங்கறேன்? ஜூரிங்கறது லேட்டஸ்ட் நடிகை இல்லைங்காணும், ஜுரிங்கறது ஒரு அமெரிக்க சட்ட திட்ட வரைமுறை! அமெரிக்காவில் ‘ஜூரி’ சிஸ்டம் என்று ஒன்று இருக்கிறது.</p>
<p><img class="alignnone" src="http://imherehesthere.files.wordpress.com/2007/08/vicks-jury.png?w=496&amp;h=330" alt="" width="496" height="328" /></p>
<p>ஒரு ஜட்ஜ் -ஒரே ஒரு ஜட்ஜ் மட்டும்- ஒரு கேஸை விசாரித்து தீர்ப்பு சொல்வது நம் இந்திய நாட்டு சட்ட முறை. அவர் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்து வைத்திருக்கலாம், RTI ஆக்டுக்கே அல்வா கொடுத்து மாசக் கணக்கில் டபாய்க்கலாம், ஏக்கர் கணக்கில் வேலி போட்டு ஊரையே வளைத்துப் போட்டிருக்கலாம். அல்லது பத்து பைசா சேர்த்து வைக்காத தக்கணாமுட்டி ஜட்ஜாகவும் இருக்கலாம்.</p>
<p>ஆனால் கோர்ட்டில் அவர் விசாரித்துச் சொல்வது தான் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மேல் கோர்ட்டுக்கு நீங்கள் அப்பீல் செய்கிறேன் என்று நடையாக நடக்கலாம். அங்கேயும் உங்களுக்கு இன்னொரு ஜட்ஜிடம் ஆப்பு தான் என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறேன் பேர்வழி என்று கேஸை இழு இழுவென்று இழுத்தடித்து சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சம்மன் போட்டே சாகடிக்கலாம். மொத்தத்தில் கேஸ் விசாரணைக்கு வரும்போது அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே மண்டையைப் போட்டு விடுவார்கள். இது இந்திய முறை. ரொம்பவும் விளக்கமாக அப்பெல்லேட் கோர்ட், ஜுடிஷியல் பெஞ்ச், கான்ஸ்டிட்யூஷனல் ஸ்டூல் என்றெல்லாம் குருட்டுச் சட்டத்தின் இருட்டு அறைகளில் புகுந்து புறப்பட்டு இது பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல!</p>
<p>புழுதிக் கிராமத்தில் பதினெட்டுப் பட்டிக்கு நடுவே ஆல மரம், பித்தளைச் சொம்பு, அழுக்கு ஜமக்காளம், அதை விட அழுக்காக ஒரு ஐம்பது பேர் கூடி நின்று &#8230; ‘ என்று தமிழ் சினிமாக்களில் வழக்கமாக வருமே ஒரு சீன், நினைவிருக்கிறதா? ஹீரோவின் நொண்டித் தங்கையை வில்லன் கற்பழித்து விடுவான், அவள் “சொந்த மானம் போனாலும் பரவாயில்லை, என் குடும்ப மானம் பறி போய் விட்டதே” என்று ஒரு பாட்டையும் பாடி நம்மைச் சாவடித்துக் கடைசியில் தூக்கில் தொங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, மரக் கதவை உதைத்து வீழ்த்தி, ஹீரோ தங்காச்சியைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி கொண்டு வந்து மேற்சொன்ன ஆல மரத்தடி அழுக்குக் கும்பலின் நடுவே போட்டு விட்டு, மூச்சு வாங்கியபடி நீதி கேட்பானே, அந்த சீனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.</p>
<p>படத்தின் பட்ஜெட்டுக்குத் தக்கபடி ஊர்த் தலையாரியோ, வெட்டியானோ, பஞ்சாயத்து பிரசிடெண்டோ அல்லது பெரிய கவுண்டரோ அங்கே மரத்தடியில் நடுநாயகமாக ’கெத்’தாக உட்கார்ந்து ஒரு சொம்பு தண்ணீரையும் குடித்து முடித்து விட்டுத் தீர்ப்பு சொல்லுவாரே, ஞாபகம் இருக்கிறதா?</p>
<p>‘தாவணி விலகிய தங்கை மீது காமெரா எக்ஸ்ட்ரா க்ளோசப், பிறகு சிவப்புத் துண்டைப் போட்டுத் தாவணி தடுக்காமல் தங்கையைத் தாண்டுவது’, ‘கன்னத்தில் அலகு, நாக்கில் சூடத்தோடு சத்தியம் செய்’, வில்லனே நொ. தங்கையை மணந்து கொள்ளவேண்டும்’ &#8211; என்று ‘ஜட்ஜ்’ ஏதாவது தீர்ப்பு சொல்லித் தொலைப்பார். அந்தப் பட மேட்டரை அப்படியே விட்டு விடுவோம். போரடிக்கும் ஒரு பின்னிரவில் அதை நாம் விஜய் டீவியில் பார்த்து அழுது கொள்ளலாம். நமக்கு இங்கே தேவையானது இந்த சிச்சுவேஷனில் நடந்த மேட்டர்.</p>
<p>மேற்படி ஆல மரத்தடி தலையாரி / வெட்டியான் / பிரசிடெண்ட் / கவுண்டர் தான் அங்கே ஜட்ஜ், ஜுரி எல்லாமே. ஜூரர் என்பது ஒருமை. பல ஜூரர்கள் சேர்ந்து ஒரு ஜூரி. மெஜாரிட்டி ஒபினியன் தான் ஜெயிக்கும்.</p>
<p>’ஒரு ஜூரரின் டயரி’ என்றால் ஏதோ ஜன்னிக் கேஸ் மாதிரி எனக்கே பயமாகத் தெரிவதால் ‘ஒரு ஜூரியின் டயரி’.</p>
<p>அப்பாடா, இப்போது தலைப்பை விளக்கியாகி விட்டது. இனிமேலாவது மேட்டருக்கு வருகிறேன்.</p>
<p>இந்தியாவைக் குறுநில மன்னர்கள் கோலோச்சிய காலத்தில் பனிஷ்மெண்ட் என்றால் மாறு கால், மாறு கை, பையனைத் தேர்க்காலில் போட்டு நசுக்கியது, சிபிச் சக்கரவர்த்தி பையன் சதையை கிலோக் கணக்கில் கசாப் வெட்டியது, தேர் சக்கரத்தில் யாரோ யாரையோ நசுக்கியது, கண்ணகி ஒரு சைடு மேட்டரையே திருகி எறிந்தது, அதனால் மதுரையில் தினகரன் எரிந்து சாம்பலானது, மன்னிக்கவும், மதுரையே பற்றி எரிந்தது போன்ற தீர்ப்புக் காட்சிகள்.</p>
<p>வெள்ளைக்காரன் காலத்தில் பழைய மன்னர் சிஸ்டம் எல்லாம் வேஸ்ட், ’ப்ளடி இண்டியன் ப்ரூட்ஸ்’ என்று எல்லாரையும் திட்டி எல்லாவற்றையும் மாற்றினான். இந்த ஜூரி சிஸ்டம் தான் பெஸ்ட் என்று பண்ணினான்.</p>
<p>அமெரிக்காவில் ஆரம்பத்திலிருந்தே இந்த ஜூரி சிஸ்டம் தான். அதுவும் கிரிமினல் கேஸ்களுக்குக் கண்டிப்பாக ஜீரி தான்.</p>
<p>நான் ஜுரி வேலை பார்த்த முதல் அமெரிக்க கேஸ், ‘கலக்கப் போவது யாரு?’</p>
<p>(சட்டம் தன் வேலையைச் செய்யும்)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&amp;p=322</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
	</channel>
</rss>
