<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</title>
	<atom:link href="http://www.writerlaram.com/tamil/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.writerlaram.com/tamil</link>
	<description>கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!</description>
	<lastBuildDate>Wed, 26 Sep 2012 16:27:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.4.2</generator>
		<item>
		<title>எம்ஜிஆரும் நானும்!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=460</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=460#comments</comments>
		<pubDate>Tue, 25 Sep 2012 19:57:11 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=460</guid>
		<description><![CDATA[பல வருடங்கள் ஓடி விட்டாலும், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! அப்போது நான் சென்னையில் இருந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான் லேட்டாக எழுந்து, லேட்டாக காஃபி சாப்பிட்டுவிட்டு, லேட்டாகவே ‘ஹிண்டு’ படித்துக் கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. எது? அதாவது, எங்கள் வீட்டு தொலைபேசி சிணுங்கியது. “ராம் சார் வீடு தானுங்களே? சார், சி எம் வீட்ல இருந்து கூப்பிடறோம், சி எம் உங்ககிட்ட பேசணுமாம், கொஞ்சம் ராமாவரம் வரைக்கும் வநதுட்டுப் போகமுடியுமா?” -அடுத்த முனையில் மிகுந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பல வருடங்கள் ஓடி விட்டாலும், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது!</p>
<p>அப்போது நான் சென்னையில் இருந்தேன்.</p>
<p>அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான் லேட்டாக எழுந்து, லேட்டாக காஃபி சாப்பிட்டுவிட்டு, லேட்டாகவே ‘ஹிண்டு’ படித்துக் கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. எது?</p>
<p>அதாவது, எங்கள் வீட்டு தொலைபேசி சிணுங்கியது.</p>
<p>“ராம் சார் வீடு தானுங்களே? சார், சி எம் வீட்ல இருந்து கூப்பிடறோம், சி எம் உங்ககிட்ட பேசணுமாம், கொஞ்சம் ராமாவரம் வரைக்கும் வநதுட்டுப் போகமுடியுமா?” -அடுத்த முனையில் மிகுந்த மரியாதையுடனும், பதட்டத்துடனும் என்னை யாரோ வினவினார்கள்: </p>
<p>சரிதான், காலங்கார்த்தாலேயே என் டிராமா ட்ரூப்பிலிருந்தே யாரோ என் காலை வாருகிறான்.</p>
<p>‘பட்’டென்று போனை வைத்தேன்.</p>
<p>மறுபடியும் அதே தொலைபேசி, அதே நிறுத்தாத சிணுங்கல்.</p>
<p>என்னது, இது? சீஃப் மினிஸ்டர் எம் ஜி ஆரா? என்னைக் கூப்பிடுகிறாரா? ஏன், எதற்கு, எப்படி?</p>
<p>“இருங்க ஒரு நிமிஷம்” என்றேன் போனில் பேசியவரிடம்.</p>
<p>எழுந்து நெட்டி முறித்து, தலையை வளைத்துத் தரையைத் தொட்டு, காலால் கூரையைத் தட்டிக்குதித்தேன். ஞாயிற்றுக்கிழமை சோம்பல்கள் என்னிடமிருந்து சடுதியில் ஓடிப் பறந்தன. பயங்கர சுறுசுறுப்பானேன்.</p>
<p>“இப்ப சொல்லுங்க சார். இது ஏதாச்சியும் கலாட்டா போன் காலா? எம்ஜிஆர் என்னைக் கூப்பிடறாரா? ஒரு நிமிஷம் இருக்கீங்களா, நானும் பக்கத்து வீட்டு சிவாஜியைக் கூப்பிடட்டுமா?”</p>
<p>“அய்யய்யோ, அதெல்லாம் இல்ல சார். நெஜமாவே சி எம் வீட்ல இருந்துதான் போன்ல பேசறேன். நான் சி எம் சாரோட ப்ரைவேட் செக்ரட்டரி, என் பேரு பிச்சாண்டி. இருங்க இருங்க ஒரு நிமிஷம், சிஎம்மே இங்க வந்துட்டாரு”</p>
<p>’தடார், புடார், கிறீச்’ என்ற சப்தங்கள். நாற்காலிகள் நகர்த்தப்படுகின்றன. சல்யூட்கள் அடிக்கப்படுகின்றன போலும். திடீரென்று மரியாதைப்பட்ட மௌனம்.</p>
<p>”சார், இந்தாங்க, நீங்களே பேசுங்க” காதில் விழுந்தது.</p>
<p>“ஹலோ” &#8211; போனில் எம்ஜிஆர்!</p>
<p>முந்தைய நாள் மாங்கொல்லை காரசார கட்சி மீட்டிங் புண்ணியத்தில் எம்ஜிஆர் குரல் கொஞ்சம் கரகரத்திருந்தது என்று நினைத்தேன்.</p>
<p>“வணக்கம் ராம், சிஎம் தான் பேசறேன்”</p>
<p>நான் மென்று முழுங்கி கடித்துத் துப்பி, இருமித் துடைத்து மெர்சலாகி நின்றேன்.</p>
<p>“நெஜமாவே சிஎம் எம்ஜிஆரா போன்ல பேசறீங்க?”</p>
<p>“ஆமா, ஏன் நான் போன்ல பேசக்கூதாதா?” மெலிதான சிரிப்பு.</p>
<p>“இல்ல சார் நமக்குள்ள பழக்கம் இல்ல, தவிரவும் நான் கட்சி ஆளோ, ரத்தத்தின் ரத்தமோ இல்ல, அதான் நீங்க எப்படி &#8230;என்னோட போன்ல ,, சாரி சார், தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க தேடற ராம் வேற ஆளுன்னு இப்பவும் நினைக்கறேன்”</p>
<p>பொன்மனச்செம்மல் சிரித்துக்கொண்டே சொன்னார்: “எழுத்தாளர், டெலிவிஷன் ஆர்டிஸ்ட், தமிழ்ப் படங்கள்ல நடிக்கறீங்க, ரஜினியோட செகண்ட் ஹீரோ ஆயிட்டீங்க, அடுத்து ஹீரோதான், சிவப்பா உசரமா அபிராமபுரத்திலே, மூன்றாம் தெரு ராம் ராமச்சந்திரன் நீங்கதானே?”</p>
<p><a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2012/09/Ram_Around-the-Engeyo-Kaetta-Kural-Release.jpg"><img src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2012/09/Ram_Around-the-Engeyo-Kaetta-Kural-Release.jpg" alt="" title="Ram_Around the Engeyo Kaetta Kural Release" width="330" height="462" class="alignleft size-full wp-image-475" /></a></p>
<p>அவர் சொல்லச்சொல்ல, நான் ’முந்தாநாள் நைட் பீர் அடித்துவிட்டு ஸ்கூட்டரில் ஒன்வேயில் ஓட்டியதற்காக இருக்குமா? ஆழ்வார்பேட்டை சாம்கோ மாடியில் ஒரு கலாட்டாவில் ஓவராக சவுண்டு விட்டுச் சலம்பியதற்காக இருக்குமோ? அல்லது ’எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் அம்பிகாவுடன் நெருங்க நடிக்க மறுத்ததற்கு அவர் ஏதாவது சிஎம்மிடம் கம்ப்ளெய்ன் பண்ணி விட்டாரா?’&#8211; ஆயிரம் ஆயிரம் யோசனைகள், பயங்கள். </p>
<p>நான் பதில் ஏதும் பேசும் நிலையில் இல்லை. குடித்த காஃபியைக்கூட பயத்தில் வாந்தி எடுத்திருந்தேன் என்று நினைக்கிறேன். இப்போது சரியாக நினைவில்லை.</p>
<p>“நீங்க நேர்ல வாங்க, இருங்க ஒரு நிமிஷம். இந்தாப்பா ஐ ஜி கிட்ட சொல்லி ஒரு நல்ல வண்டியா எடுத்துக்கிட்டு போயி ராம் சாரை அழைச்சிட்டு வாங்க. மிஸ்டர் ராம் ஒரு பத்து மணிக்கு வந்தீங்கன்னா நிதானமா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுகிட்டே பேசலாம். நீங்க சைவம்னு எனக்குத் தெரியும், அதுக்கேத்த மாதிரி .இட்லி, வடை, பொங்கல், பெசரட்டு &#8230;.”</p>
<p>என்னால் நம்பவே முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. </p>
<p>என் முதல் ரியாக்‌ஷன் மனைவியிடம் இது பற்றி உடனே சொல்வதுதான். ஆனால் ..?</p>
<p>“அடியே, இவளே” என்று ஆரம்பித்ததை உடனே ‘கட்’ செய்தேன். மனதில் சிவப்பு டேஞ்சர் விளக்கு பிரகாசமாக எரிந்தது.</p>
<p>பெண்டாட்டியிடம் சொன்னால் ஊரைக்கூட்டி வைத்து ‘இடி இடி’யென்று சிரிப்பாள், அல்லது டாக்ஸி பிடித்து நேராக கீழ்ப்பாக்கம் அழைத்துச் சென்று விடுவாள். அவள் அம்மாவிடம் சொல்லி அவர்கள் சைடு அத்தனை உறவுக்காரர்களும் ஒரே நேரத்தில் இங்கே வந்து இறங்கிவிடவும் கூடும் &#8230;.. வேண்டாம், வேண்டாம், வேறு வினையே வேண்டாம்.</p>
<p>என்ன செய்யலாம்? </p>
<p>‘பார்யா விஷயவதி சத்ரு’. எதையும் பெண்டாட்டிக்குத் தெரியாமல் செய்வதே உத்தம புருஷனுக்கு நல்லது.</p>
<p>ஐஜியே நேரில் வரப் போகிறாரா? அய்யய்யோ, கார் மண்டையில் சிவப்பு சுழல் விளக்கு இருக்குமே, அக்கம் பக்கமெல்லாம் தெரிந்து போகுமே, “ஏதோ IB இன்வெஸ்டிகேஷனாம், ஏதோ பயங்கரமான  அடிதடி கேஸாம்” என்றெல்லாம் ஏகப்பட்ட வதந்திகள் கிளைத்துக் கிளம்புமே.</p>
<p>அதையெல்லாம் ஆற அமர உட்கார்ந்து யோசிக்க எனக்கு நேரமில்லை.</p>
<p>அவசர அவசரமாக குளித்து முடித்து ரெடி ஆனேன்.</p>
<p>போனில் நான் யாருடனோ பேசுவது, பம்முவது, அவசர அவசரமான காக்கைக்குளி போடுவது எல்லாவற்றையும் ஒரு தினுசாக பார்த்துக்கொண்டிருந்த சகதர்மிணியிடன் “எனக்கு ஏதோ அஞ்ஞானபீட அவார்டோ, சகிக்காத அகாடமி அவார்டோ தராங்களாம், அதுபத்திப் பேச உடனே வரச் சொல்றாங்க”</p>
<p>நான் நினைத்தது நடந்தது. இலக்கியம், எழுத்து இப்படி ஏதாவது சொன்னால்தான் அவள் அசுவாரசியத்தின் உச்சிக்கே போய் என்னை அலட்சியப்புழுவாக நகர்த்துவாள். சினிமா கினிமா என்றால் கூட கொஞ்சம் சுவாரசியம் காட்டுவாள், பத்திரிகை, விருது என்று சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டவே மாட்டாள். ஒரு பயலும் காசு தரமாட்டான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.</p>
<p>“ஸ்கூட்டருக்கு பெட்ரோல் வேஸ்ட்” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.</p>
<p>“இல்லை அவுங்களே வண்டி அனுப்புறாங்க”</p>
<p>“கட்டை வண்டியா, மாட்டு வண்டியா? எவனாவது பங்க்ச்சர் ஆன சைக்கிள்ல டபுள்ஸ் ஏத்திட்டுப் போவான்” என்று ’பக பக’ சிரிப்பு சிரித்தபடியே மனைவி அடுக்களைக்குள் நுழைந்து, மிக்சியை அலறவிட்டாள்.</p>
<p>கர்ணகடூரமான சத்தம். அப்பாடா!</p>
<p>சிந்தனை வயப்பட்டவனாக நான் இரண்டு கைகளையும் ஏ வி எம் சரவணன் ஸ்டைலில் கட்டியபடி ஹாலில் வேகமாக உலாத்த ஆரம்பித்தேன்.</p>
<p>சற்று நேரத்தில் வாசலில் மெலிதான மரியாதைப்பட்ட பூட்ஸ் கால் சப்தங்கள் கேட்டன.</p>
<p>மிக மெல்லிய குரலில் “ராம் சார் இருக்காங்களா?” என்று யாரோ பயபக்தியுடன் விளித்தார்கள்.</p>
<p>எட்டிப் பார்த்தேன், ஏதோ ஒரு புஸ்தி மீசை!</p>
<p>“தோ வந்துட்டேன்” என்று நான் பாய்ந்து வெளியே ஓடினேன்.</p>
<p>தெருவை அடைத்தபடி ஏழெட்டு அரசு இலச்சினை பொருத்திய வெள்ளை அம்பாஸடர் கார்கள், ஜீப்கள் வந்திருந்தபடியால் எதில் ஏறுவது, எதை விடுவது என்று சற்றே குழம்பினேன்.</p>
<p>சுழல் விளக்கு, அரசு கொடி இத்யாதி சகல லட்சணங்களுடன் இருந்த ஒரு ’பளிச்’ காரில் இருந்து மிக விறைப்பான யூனிஃபாரம் + ஒரு சல்யூட்டுடன் ஒருவர் இறங்கி என்னை வணங்கினார். அவர்தான் ஐ ஜி என்பவரோ? அப்படித்தான் இருக்கவேண்டும். கச்சா முச்சாவென்று சட்டையெங்கும் கலர் கலராக மெடல்கள் குத்திக் கொண்டிருந்தார். பளபளக்கும் பூட்ஸ் கால்களில் சூரியன் பிரதிபலித்தான். அவர்தான் அது!</p>
<p>“ஐ யாம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மோகன்தாஸ்ம்” மலையாள ஆக்ஸெண்ட் அவரை இன்னாரென்று உறுதி செய்தது.</p>
<p>மிகுந்த மரியாதையுடன் பின் கதவைத் திறந்து என்னை அதில் ஏறிக்கொள்ளச் சொன்னார். காருக்குள் ஏறி அமர்ந்தேன். படு பவ்யமாக கதவைச் சாத்தினார்.</p>
<p>சைரன்கள் சகிதம் சீறிச்சென்ற எங்களுக்கு ஊரே பயந்து வழிவிட்டது.</p>
<p>என்னால் நம்பவே முடியவில்லை. என் வலது கையைக் கிள்ளிக்கொண்டேன். நேற்று கறிகாய் நறுக்கித் தரும்போது அருவாமணையில் வெட்டிக்கொண்ட இடத்தில் இப்போது கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.</p>
<p>*** *** ***</p>
<p>ராமாவரம் தோட்டம்!</p>
<p>பூந்தமல்லி வழியாக திருப்பதி போகும்போதும் அல்லது L &#038; T, Audco India என்று ஏதாவது அபூர்வமாக அந்தப் பக்கம் வரும்போதும் நான் எம் ஜி ஆரின் ராமாவரம் கார்டன்ஸைக் கடந்து சென்று பழக்கம். அந்த மர்ம தேசத்தின் பெரிய கருப்புக் கதவுகள் பெரும்பாலும் சாத்தியே இருக்கும். இப்போது எனக்காக அவை திறந்திருந்தன. அந்த நாட்கள் ஸ்மார்ட்போன், விடியோ ஸ்ட்ரீமிங் எல்லாம் இல்லாத ஒரு கற்காலம் என்பதால் அந்த சரித்திர நிகழ்வை என் மனக்கண்ணில் மட்டுமே என்னால் பதிய நேர்ந்தது. அதிலிருந்து எடுத்துதான் இப்போது இங்கே ரீல் ஓட்டுகிறேன்.</p>
<p>பிரம்மாண்டமான அந்த பங்களாவெங்கும் கரைவேட்டிகள், கட்சிக்காரர்கள், காரியம் முடிக்க வந்தவர்கள், காசு தேற்ற வந்தவர்கள் அல்லது வள்ளல் எம்ஜிஆரிடம் காசு வாங்கிச்செல்ல வந்தவர்கள்.</p>
<p>கிட்டத்தட்ட ஒரு அவல் குசேலன் ரேஞ்சுக்கு, ஆனால் கூனிக் குமுறாமல், மிகுந்த ஆச்சரியத்துடன் நான் எம் ஜி ஆர் வீட்டுக்குள் நுழைந்தேன். வாசலருகிலேயே காத்திருந்து அவர் என்னை நெஞ்சாரத் தழுவி வரவேற்பார் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் செய்தார்.</p>
<p>“வாங்க லாம், எப்டி இருகீங்க” இன்னமும் குரலில் அவருக்கு உச்சரிப்பு சிரமம் இருப்பது புரிந்தது.</p>
<p>“நல்லா இருக்கேன் சார், ஒரு குறையும் இல்ல”</p>
<p>“இந்தாங்க இதைப் பிடிங்க, வாழ்த்துகள்! ரஜினி படத்திலே அட்டகாசமா பண்ணி இருக்கீங்கன்னு சொன்னாங்க. என் அன்புப் பரிசு” அவர் அன்பில் நான் திக்குமுக்காடினேன். </p>
<div id="attachment_463" class="wp-caption alignleft" style="width: 695px"><a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2012/09/ram-ram.jpg"><img src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2012/09/ram-ram.jpg" alt="" title="ram-ram" width="685" height="528" class="size-full wp-image-463" /></a><p class="wp-caption-text"> 2 ராமச்சந்திரர்கள்!</p></div>
<p>“என்னடா இது, எதுக்கு சி எம் நம்மளக் கூப்ட்ருக்காரேன்னு ஆச்சர்யப்படுதீங்கன்னு எனக்குத் தெரியும். மொதல்ல வாங்க சாப்பிடலாம், அப்புறமா பேசலாம்”</p>
<p>என்னை தோட்டத்துக்கு வெளியில் நிறுத்தி அவர் ஒரு சாயா கொடுத்திருந்தால்கூட அது ஒரு சரித்திர நிகழ்வென்றே காலம் பூராவும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பேன். ஆனால், அப்படியெல்லாம் அவர் என்னை லேசில் விடுவதாயில்லை.</p>
<p>“உங்களுக்குப் பிடிக்கும்னு கத்திரிக்காய் கொத்ஸும் பண்ணச் சொல்லி இருக்கேன்”</p>
<p>I was floored. &#8220;சார், சார், இதெல்லாம் எப்படி?” காஞ்சிபுரம் அண்ணா இட்லி என் தொண்டையில் அடைத்துக் கொண்டிருந்ததாலும் அதற்கும் சேர்த்துக் கண் கலங்கினேன்.</p>
<p>“எதுக்காக இவங்கள்லாம் இருக்காங்க? அதெல்லாம் கரெக்டா கண்டுபுடிச்சு சொல்லிடுவாங்க” என்று இண்டெலிஜென்ஸ் ஐஜி ஒருவர் பக்கமாகக் கை நீட்டினார். ‘படீர்’ என்று ஆங்கொரு சல்யூட்! ஒரு ‘பளிச்’ சிரிப்பு.</p>
<p>என்ன இண்டெலிஜென்ஸ்? நான் ஏன் பிறந்தேன்? இந்த நாட்டுக்கு என்ன துரோகம் செய்தேன்? அதுவும் ஒரு சிஎம்மே என்னை நேரில் கூப்பிட்டு பனிஷ் பண்ணுமளவுக்கு? </p>
<p>ஒரு வேளை ஃபுல் சாப்பாடு போட்டு செமத்தியாக ஏதேனும் அடி கொடுப்பாரோ?</p>
<p>சாப்பிட்டுக் கை கழுவினால், மதுரை வீரனில் மாறு கால் மாறு கை வாங்கப்பட்டவர் ஒரு கைத் துண்டை எடுத்து கை துடைத்துக்கொள்ளத் தருகிறார். இதற்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?</p>
<p>“டிகிரி காஃபிதானே, டபுள் ஸ்ட்ராங், சர்க்கரை அரை ஸ்பூன், சரியா?” என் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர்.</p>
<p>“அடாடா, இதுக்கெல்லாமா எமோசனல் ஆவீங்க, கூல் டவுன், டேக் இட் ஈசி!”</p>
<p>“இல்ல சார், எங்க வீட்ல கூட பல நேரங்கள்ல நானே வெந்நீர் போட்டு, நானே டிகாக்‌ஷன் போட்டு, நானே பாலைக் காய்ச்சி, நானே சர்க்கரையும் &#8230;”</p>
<p>“அட, அதெல்லாம் விடுங்க, தெரியும், தெரியும், அடிக்கடி கைய சுட்டுக்கறீங்கன்னும் தெரியும். வாங்க அந்த சோஃபாவில் உட்கார்ந்து பேசுவம்”</p>
<p>“இல்ல சார், நானே காபி கலந்து வீட்டுக்காரம்மாவுக்குக் கொடுத்துட்டு, நான் ரெண்டாவது டிகாக்‌ஷன்ல தண்ணி விட்டுத்தான் குடிப்பேன்”</p>
<p>எம்ஜிஆர் சிரித்துக் கொண்டார். “அது பற்றியும் குறிப்பு வந்திருக்கு. அந்த ஃபைலை எடுங்க”</p>
<p>குறிப்பறிந்து வேலைக்காரர்கள், போலீஸ்காரர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் அனைவரும் விலகினர்.</p>
<p>நானும் எம்ஜிஆரும் மட்டும், அம்மாம் பெரிய சோஃபாவில். காலை மடக்கி சம்மணம் போட்டு சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளலாமா என்ற நினைப்பை உடனே வீட்டோ செய்தேன்.  அரசியல், சினிமா, டெலிவிஷன் பற்றியெல்லாம் வெகுநேரம் அவர் பேசிக் கொண்டிருந்தார். ஆங்காங்கே நான் சொன்ன கருத்துகளையும் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டார். பேச்சு தேசிய அரசியல் பக்கம் திரும்பியது. ராஜீவுடன் கூட்டணி வைப்பது பற்றிய லாப, நஷ்டங்களை நான் கணக்கு போட்டுச் சொன்னேன். அசந்து போய் அவர் கேட்டுக்கொண்டார். </p>
<p>“பிச்சாண்டி, இவர் சொல்றத இங்க வந்து கொஞ்சம் குறிப்பெடுத்துக்கிட்டு போங்க” என்றதும் அவர் குறிப்பறிந்து குறிப்புகள் எடுத்து முடித்துக்கொண்டு, எம்ஜிஆர் செருமியதும் மீண்டும் குறிப்பறிந்து அங்கிருந்து விலகினார்.</p>
<p>கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாங்கள் நெடுநாள் பழகிய நண்பர்கள் போல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அவருடைய பொன்னான நேரத்திற்காக வெளியே ஏகப்பட்ட பேர்வழிகள் காத்துக்கொண்டிருப்பது எனக்கு நெருடலாக இருந்தது. </p>
<p>அந்த ஃபைலை மீண்டும் ஒருதடவை படித்த எம்ஜிஆர் அதைக் கீழே வைத்தார். பல முறை படித்திருப்பார் போலும். பிறகு என்னிடம் சொன்னார்: “சில விஷயங்களை உங்ககிட்ட மனசு விட்டுப் பேசணும்னுதான் உங்களை இங்க வரவழிச்சேன்”</p>
<p>“சொல்லுங்க சார்”</p>
<p>“எங்க ஐ பி சோர்ஸ்கள்படி உங்களுக்கு ரொம்ப பிரகாசமான எதிர்காலம் இருக்கு. என் பேரும் ராமச்சந்திரன், நீங்களும் ராமச்சந்திரன். நானும் சினிமா, நீங்களும் சினிமா”</p>
<p>“சார் சார்” அவசர அவசரமாக அவரை நான் இடமறித்தேன். “என்னங்க சொல்றீங்க, நீங்க தான் தமிழ் சினிமாவே. நான் இப்பத்தான் ஒண்ணு ரெண்டு படத்துல தலை காட்டி இருக்கேன்”</p>
<p>அவர் தொடர்ந்தார். :ஏதோ என்னாலானத ஏழை பாழைங்களுக்குச் செய்யறேன், அவங்களும் எனக்குக் ’கொடுத்துச் சிவந்த கைகள்’னு புகழறாங்க”</p>
<p>“அதிலென்ன சந்தேகம் சார்?”</p>
<p>”நான் மேலே சொன்ன பல ஒற்றுமைகளோட உங்க கைகளும் ரொம்ப சிவப்பா இருக்கறதா எங்க ஐ பி இண்டெலிஜென்ஸ் குறிப்பு ஆணித்தரமா சொல்லுதே. எங்க, கைய நீட்டுங்க பார்ப்போம்”</p>
<p>ஓ, மை காட்! நான் கிச்சன் அருவாமணையில் கையை வெட்டிக்கொண்டு ரத்தம் சிந்திக் கை சிவந்து, வெந்நீர் கொட்டிச் சூடு போட்டுக்கொண்டு &#8230; இதையெல்லாம் கூடவா அவசரப் போலீஸ் ஆள் வைத்துக் கண்காணிக்கிறது?</p>
<p>“இல்ல சார், நான் வந்து அருவாமணையால, ஐயோ அருவாமணை மலையாளம் கூட இல்லையே, அவருக்குப் புரியுமோ, புரியாதோ? நான் கிச்சன் கத்தில &#8230;”</p>
<p>“வேண்டாம் வேண்டாம், நீங்க சொல்லவே வேண்டாம். நீங்களும் என்னை மாதிரியே நல்லா கத்தி சண்டை போடுவீங்க, எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட பலப்பல ஒற்றுமைகள் இருக்கறதுனால, அடுத்த எலெக்‌ஷன்ல எனக்குப் பயங்கரமான போட்டி சக்தியாக நீங்கதான் தலையெடுப்பீங்கன்னு ரிப்போர்ட் சொல்லுது. ஃப்ராங்க்லி, கருணாநிதிய விட உங்களைப் பார்த்துதான் நான் பயப்படறேன். அதனால &#8230;”</p>
<p>எனக்கு பயங்கரமாகத் தலை சுற்றியது. சோபாவை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.</p>
<p>“அதனால, அதனாலன்னு என்னமோ சொல்ல வந்தீங்களே?”</p>
<p>எம்ஜிஆர் இன்னமும் அருகே வந்து வாத்ஸல்யமாக என் இரு கைகளையும் பிடித்துக் கொண்டார். “என் வீட்ல இப்ப சாப்பிட்டுட்டீங்க. கர்ணன் மாதிரி நீங்களும் செஞ்சோற்றுக் கடன்னு சொன்னா செண்டி மெண்டலாயிடுவீங்கன்னு எனக்குத் தெரியும்.”</p>
<p>”அய்யோ சார், அதெல்லாம் எதுக்கு? நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார்? அத்தனை கொத்ஸையும் இப்பவே வாந்தி எடுத்துக் காட்டிடட்டுமா?”</p>
<p>“நோ நோ, டோண்ட் பி ஸில்லி”</p>
<p>“அப்ப என்ன வேணும்னு சொல்லுங்க சார், உடனேயே செய்யறேன். நான் நடிக்கற படங்கள்ல சொந்தக் குரல்ல பாடலாம்னு இருக்கேன், அதை வேணா விட்டுக் கொடுத்துடட்டுமா? எஸ் பி பி பிழைச்சுப் போகட்டும்” </p>
<p>கொஞ்சம் கண் கலங்கினார். என் கைகளை இறுகப் பிடித்தபடி எம்ஜிஆர் என்னைக் கேட்டுக்கொண்டார்- ”நீங்க எனக்கு இரண்டு வரங்கள் கொடுக்கணும்”</p>
<p>என்னது, 2 வரங்களா? ஓஹோ, கதை அப்படி ராமச்சந்திர காதையாய் நீள்கிறதா?</p>
<p>நானும் இலக்கியம் படித்தவனல்லவா? இன் ஃபேக்ட், நானே எழுதிய அக்காட்சி. என் மனக்கண் முன்னே விரிந்தது. விஷயம் புரியாத தமிழ் துரோகிகள் இதெல்லாம் கம்பன் எழுதியது, நா. காமராசன் கார்பன் பேப்பரை வைரமுத்துவிடம் கடன் வாங்கி எழுதியது என்/று கன்ஃப்யூசாகி சொல்லக்கூடும். நம்பாதீர்கள். இன் ஃபேக்ட் கம்பர் எங்கள் மயிலாடுதுறை ஊர்ப்பக்கத்து திருவழுந்தூர்க்காரர்தான். அதனால் கொஞ்சம் பேருக்கு அவ்வப்போது இலக்கிய கன்பீசன் வருவதுண்டு. அவ்வளவே.</p>
<p>’ஆழிசூழ் உலகெலாம் பரதனேயாள நீ போய்த்<br />
தாழிரும் சடைகள் தாங்கிப்<br />
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி<br />
ஏழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றான்’ என்று கைகேயி சொன்னாளல்லவா?</p>
<p>கைகேயியும் தசரதனும் பரதனும் மட்டுமா என் கண் முன் தோன்றினார்கள்? </p>
<p>ஒரிஜினல் சம்ஸ்கிருதத்திலே நான் ஒரிஜினலாக எழுதி இருந்தேனே, அந்தக் காட்சியும் கிரந்தமயமாக என் கண்முன் காட்சி அளித்தது. அதையும் யாரோ காளிதாசனோ, வால்மீகியோ எழுதியதாகச் சொல்கிறார்களாம் கயவர்கள், ம்ஹும்!</p>
<p>அபிஷேகஸமாரம்பௌ ராகவஸ்யோபகல்பிதா<br />
அனேனபிஷ்ஷேகேன பரதோமி அபிஷிச்யதாம்<br />
யோ த்வீதியோவரா தேவதத்தா ப்ரீதேனமேத்வயா<br />
தெய்வாசுர யுத்தேகாலே தஸ்யகாலோ அயாமாங்கிதா<br />
நவபஞ்சஸவர்ஷாணி தண்டகாரண்யோமாஷ்ரிதா<br />
சிராஜீனஜடாதாரி ராமோ பவதுதாபஸா<br />
பரதோபஜதாமத்யா யௌவராஜ்யாமகண்டகம்<br />
ஈஷாமேபரமகாமோ தத்தமேவ வரம்வ்ரீணே<br />
அத்யாசைவஹி பாஷ்யேயம் ப்ரயாந்தம் ராகவம் வனம்</p>
<p>அந்தகால அதீத கிரந்தம் என்பதால் என் கண்முன் கொஞ்சம் அதிகமாகவே பூச்சி பூச்சியாகப் பறந்தது.</p>
<p>“என் அரசியல் எதிர்காலமே உங்க கையிலதான் இருக்கு மிஸ்டர் ராம். எனக்கு நான் வேண்டும் 2 வரங்களைத் ததுவீங்களா?”</p>
<p>“சொல்லுங்க சார், என்ன வேணும் உங்களுக்கு?”</p>
<p>“முதலாவது வரம், நீங்க தமிழ் சினிமா பக்கமே சிலபல வருஷங்களுக்கு வரக்கூடாது. கையெழுத்து போட்ட புதுப்பட அக்ரிமெண்டையெல்லாம் கிழிச்சிப் போட்டுடணும்”</p>
<p>நான் பேஸ்தடித்து நின்றேன். </p>
<p>“இரண்டாவது வரம்?”</p>
<p>அவர் தொடர்ந்தார்.</p>
<p>”தமிழ்நாட்டை விட்டே, ஏன் இந்தியாவை விட்டே நீங்க பதினாலு வருஷம் டிகிரி காஃபியோ கத்திரிக்காய் கொத்ஸோ கிடைக்காத அமெரிக்க வனாந்திரத்துக்குப் போயாகணும்.  ”</p>
<p>என்ன இருந்தாலும் அவர் வீட்டு உப்பைத் தின்று விட்டேன். </p>
<p>எப்படி மறுப்பது? </p>
<p>அதனால்தான் அன்றலர்ந்த தாமரை முகத்துடன் சிரித்தபடி உடனே சொன்னேன், “இது ஒரு பெரிய விஷயமா சார்? கண்டிப்பா செய்யறேன்”</p>
<p>சொன்னது மட்டுமல்ல, செய்தும் காட்டிவிட்டேன்!</p>
<p>*** *** ***</p>
<p>பி. கு: தன் வலைப்பதிவுகளில் நண்பர் ஜெயமோகன், எழுத்தாளர் சுஜாதாவை விட தானே மிகவும் பிரபலம், மிகவும் திறமைசாலி, தானே மிகவும் வாட்டெவர் வாட்டெவர் என்றெல்லாம் அடிக்கடி எழுதி வருகிறார். </p>
<p>(சுஜாதாவை மட்டுமல்லாமல் பாலகுமாரன், தி. ஜானகிராமன் போன்ற அனைத்துத் தமிழ் எழுத்தாள பிரபலங்களை விடவும் தானே பிரபலம், தானே பிராபலம் என்று சதா அனத்துவது அங்கலாய்ப்புக்கும் ஆட்சேபத்துக்கும் உரியது. அதையெல்லாம் இப்போது சற்று தள்ளி வைத்து மீண்டும் சுஜாதா மேட்டருக்கே வருவோம்!)</p>
<p>சுஜாதா வெறும் சாதா, தானே ஸ்பெஷல் ரோஸ்ட் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் மிகவும் கஷ்டப்பட்டு நிறுவ முயல்கின்ற எத்தனையோ கட்டுரைகளில் ஒன்றை* என் ட்விட்டர் நண்பர் @naganandhi சொல்லி நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.  அதிலே எந்த அளவுக்கு ஜெமோ பிரயத்தனப்பட்டிருந்தாரென்றால், சுஜாதாவின் தாத்தாவோடெல்லாம் தான் சென்னை பஸ் ஒன்றில் சம்பாஷித்ததாகவும் அவரே ’ஏன் பேரனை விட நீரே மகா பிராபல்யம்” என்றெல்லாம் இவரைப் புகழ்ந்து ஆசீர்வதித்ததாகவும், அப்படிப் போகிறது கதை! </p>
<p>நண்பர் ஜெமோ பிரபல நவீன எழுத்தாளர் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. அவருடைய ‘ஏழாம் உலகம்’, ‘அதர்வம்’ எல்லாம் படித்து அசந்திருக்கிறேன். அட்டகாசமான சர்ரியலிஸம். ஆனால் அவர் எழுதுகிற extremely verbose விஷயங்கள் மிகுந்த ஆயாசத்தைத் தருகின்றன என்பதும் உண்மையான விமர்சனமே. ஒரு நல்ல ‘யானை டாக்டர்’ கொடுத்தால் உடனே அதற்குப் பதிலாக நூறு அனத்தல் மேட்டர்கள் தருகிறார். ’விஷ்ணுபுர’த்தைத் தூக்குவதற்காகவே தினமும் இன்னமும் ஜிம் போய்க்கொண்டிருக்கிறேன். </p>
<p>ஜெயமோகன். லாஸ் ஏஞ்சல்ஸில் என் வீட்டுக்கு வருகை தந்து சிறப்பித்த நண்பரே. இந்த கிண்டலுக்கெல்லாம் அவர் மசியமாட்டார், சிரித்து இதை தாண்டிப்போகலாம் என்பது தெரிந்ததே. </p>
<p>“என் கருத்துக்களுக்காகப் புண்படும் ஒருவரை ஒருபோதும் நான் என் வாசகராக, நண்பராக ஏற்றுக்கொள்வதில்லை” என்பார் அவர். (http://www.jeyamohan.in/? p=30073) நானும் அப்படியே!</p>
<p>ஆனாலும் நான் சுஜாதாவுடன் பல வருடங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தவன், ஆரம்பகால தமிழ்நெட், கணினியில் தமிழ் போன்ற அவருடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த பலரோடு நானும் ஒரு அணிலாக இருந்திருக்கிறேன். பல இலக்கிய, சினிமா, நாடக விஷயங்கள் பற்றி அவர் என்னுடன் பேசி, விவாதித்திருக்கிறார். அவருடைய சிறுகதை ஒன்றை நாடகமாக்கி லாஸ் ஏஞ்சல்சில் அரங்கேற்றி இருக்கிறேன், பல முறை அவரோடு இந்தியாவிலும், ‘எல்லே’யிலும், சான் ஹோஸேயிலும் ஊர் சுற்றி இருக்கிறேன், அவருடைய குடும்பத்தினர் என்னோடு தங்கி மகிழ்ந்திருக்கிறார்கள், இன்றும் அவர்களோடு நல்ல உறவில் இருக்கிறேன் போன்ற விபரங்கள் இங்கே அநாவசியம். இருந்தாலும் சொல்லிவிட்டேன், சரவண பவனில் சாம்பார் வடை, நாரத கான சபா போன்றவற்றில் அவரோடு கச்சேரி அனுபவங்கள் பற்றியெல்லாம் இங்கே எழுதமாட்டேன். மன்னிக்க!</p>
<p>என்னை இந்தளவுக்கு இந்த விஷயத்தில் மெர்சலாக்கி எழுதவைத்த ஜெமோவுக்கு நன்றி!</p>
<p>மேலதிகத் தகவல்களுக்காக கீழ்க்கண்ட சுட்டிகள், விபரங்கள் இணைக்கப்படுகின்றன.</p>
<p>* http://www.jeyamohan.in/?p=29099</p>
<p>எழுத்தாளர் சுஜாதா காலம்: May 3, 1935 &#8211; February 27, 2008</p>
<p><strong>சுஜாதாவின் இரண்டு தாத்தாக்களும் அவர் பிறந்தபோதே இறந்து போய் விட்டிருந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!</strong></p>
<p>நான் நாடகமாக்கிய சுஜாதா சிறுகதை: ‘யாகம்’. நாடகத்தின் பெயர் ‘ஐந்திர கண்டத்தில் அதிருத்ர மகாயாகம்’, நாடகம் அரங்கேறிய வருடம்: 1997 இடம்: லாஸ் ஏஞ்சல்ஸ், </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=460</wfw:commentRss>
		<slash:comments>21</slash:comments>
		</item>
		<item>
		<title>எனக்குத் தெரியாத கீதை! 3</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=449</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=449#comments</comments>
		<pubDate>Tue, 18 Oct 2011 01:00:15 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[தொடர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=449</guid>
		<description><![CDATA[முதலில் 10 கேள்வி &#8211; பதில்கள். (1) உடற்பயிற்சி பண்றதையும் யோகான்னுதான சொல்றாங்க, அப்ப அது வேற, இந்த ஞான, பக்தி, கர்ம யோகம் வேறயா? யோகா, யோகம், யோகா டீச்சர் எல்லாமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ள விஷயங்கள் தான். அனுஷ்காவைக் கொஞ்சம் விட்டுவிட்டு பாக்கி இரண்டையும் நெருங்கிப் பார்ப்போம். உடற்பயிற்சி யோகா என்பது பதஞ்சலி மகரிஷியின் ஹடயோகத்தில் வருவது. அவர் எழுதிய ‘ஹடயோகப் ப்ரதீபிகா’வில் முறைப்படி ஆசனங்கள், பிராணாயாமங்கள் செய்வது பற்றி சொல்லித் தரப்படுகிறது. கீதையில் சொல்லப்படும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>முதலில் 10 கேள்வி &#8211; பதில்கள்.</p>
<p>(1) உடற்பயிற்சி பண்றதையும் யோகான்னுதான சொல்றாங்க, அப்ப அது வேற, இந்த ஞான, பக்தி, கர்ம யோகம் வேறயா?</p>
<p>யோகா, யோகம், யோகா டீச்சர் எல்லாமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ள விஷயங்கள் தான். அனுஷ்காவைக் கொஞ்சம் விட்டுவிட்டு பாக்கி இரண்டையும் நெருங்கிப் பார்ப்போம். </p>
<p>உடற்பயிற்சி யோகா என்பது பதஞ்சலி மகரிஷியின் ஹடயோகத்தில் வருவது. அவர் எழுதிய ‘ஹடயோகப் ப்ரதீபிகா’வில் முறைப்படி ஆசனங்கள், பிராணாயாமங்கள் செய்வது பற்றி சொல்லித் தரப்படுகிறது. கீதையில் சொல்லப்படும் ‘யோகம்’ என்கிற வார்த்தைக்கும் ஹடயோகத்தில் சொல்லப்படும் ‘யோகா’ உடற்பயிற்சி முறைகளுக்கும் ஒரே வேர்ச்சொல்தான் ‘யோக்’. இதிலிருந்து தான் யோகி, யோகன், அயோக்யன் எல்லாமே வந்திருக்கிறது.</p>
<p>‘யோகா’ என்றால் ஒன்றாவது. ஒன்றிச் செய்வது.</p>
<p>(2) எதுவும் எதுவும் ஒன்றாவது? சரியா புரியலையே? கிருஷ்ணர் எக்ஸர்சைஸ் பற்றி எதுவும் சொன்னதா தெரியலையே?</p>
<p>உடலும் மனமும் ஒன்றிச்செய்வதே யோகா. மனம் என்பது சூஷ்மமான ஒன்றாக இருந்தாலும்- அதாவது தொட்டுப்பார்த்து அறிந்து கொள்ளமுடியாத ஒன்றாக இருந்தாலும், பலவீனமான ஒன்று போல் தோன்றினாலும்,  உடலைவிட அது பல மடங்கு சக்தி வாய்ந்தது. முதலில் உடம்பை திடகாத்திரமாக வைத்துக்கொள்வது, பிறகு மனசும் உடம்பும் ஒரே நோக்கத்தில் ஒரே புள்ளியில் லயிப்பது, அந்த லயித்த குவிப்புள்ளியில் தியானம் செய்வது, குண்டலினி சக்தியை எழும்பச் செய்வது- இது பற்றியெல்லாம் கீதையில் கிருஷ்ணர் சொல்வார். யோகசூத்திர முறைகள் பற்றியும் கிருஷ்ணர் சொல்வார். அதற்கு நான் கேரண்டி! </p>
<p>பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் இந்த குண்டலினி தியானமுறைக்கு உதவுகின்றன. ஹடயோகம், பிராணாயாமம் எல்லாமே நாம் செல்லவேண்டிய பாதையில் நடுநடுவே வரும் ஒவ்வொரு ஊர்களே. </p>
<p>(3) எதற்காக இப்படி வரையறுக்கிறீர்கள்? நேரடியாக எனக்கு குண்டலினி யோகம், சந்நியாசம், மோட்சம் கிடைக்காதா?</p>
<p>இது ஒரு வழிமுறை தானேதவிர, இது மட்டுமே வழிமுறை என்று சொல்லவில்லை. பூர்வஜென்ம கர்மபலன் இருந்தால் உங்களுக்கு நல்லதொரு குரு கிடைத்தால், நீங்கள் மோட்சநிலை அல்லது சமாதி நிலைக்குத் தயாரானவர் என்று அவர் நினைத்தால், அவர் உங்களுக்குத் தீட்சை தரமுடியும். எழுத்தாள நண்பர் பாலகுமாரன் போன்ற பல அதிர்ஷ்டசாலிகளுக்கு இது நிகழ்ந்திருக்கிறது.</p>
<p>(4) தீட்சை என்பதாவது?</p>
<p>ஒருவகை சந்நியாசம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். மொட்டை அடித்துக் காவியும் உருத்திராட்சமும் அணிந்து சாமியாராக இருப்பது மட்டுமே சந்நியாசம் இல்லை. உலக மாயைகளிலிருந்து விடுபட்டு உன்னதமான ஒரு பரிபூரண ஆனந்த நிலைக்குச் செல்வதும் கூட சந்நியாசியம் தான். நம்மைப் போன்ற சராசரி குடும்பஸ்தர்களுக்கே அதுவே சிறந்த ஒன்றும்கூட. </p>
<p>(5) அதற்காக நான் இமயமலையில் போய் மூக்கைப் பிடித்துக்கொண்டு தினமும் தியானம் பயிலவேண்டுமா?</p>
<p>இறை அருளும், குரு அருளும் உங்களுக்கு இருந்தால் குருவானவர் உங்களுக்கு நயன, ஸ்பரிஸ, மானஸ தீட்சை முறைகளில் ஏதாவது ஒன்றை வழங்க முடியும். எந்த சிஷ்யனுக்கு எது சரிப்பட்டு வரும் என்பது குருவின் முடிவு மட்டுமே.</p>
<p>(6) இதற்கும் ஏதாவது ‘ஷார்ட் கட்’ உண்டா?</p>
<p>கிடையவே கிடையாது. ‘ஷார்ட் கட்’ முறைகள் உடலுக்கு மிகுந்த ஆபத்தானவை மட்டுமல்ல, உயிரையே போக்கவல்லன. ரிஷிகேஷில் கற்றுத் தேர்ந்த ஸ்வாமி யோகானந்தா என்ற ஒரு சந்நியாசியுடன் இது பற்றிக் கேட்டேன். முதலில் உடலையும் உள்ளத்தையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவே இந்த யோகா எக்ஸர்சைஸ், பிராணாயாமம் எல்லாம் மிக மிக அவசியம் என்றார். </p>
<p>(7) எனக்கு எல்லாவற்றிலும் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடறமாதிரி. இதிலும் நான் ரிஸ்க் எடுத்துப்பார்த்தால் என்ன ஆகும்?</p>
<p>உலக வாழ்க்கையில் ஏகப்பட்ட ஆசை, நிராசைகள், கோபதாபங்களுடன், காம, க்ரோதங்களுடன் உழலும் நாம் ஒரு 25 வாட் பல்ப் என்று வைத்துக் கொள்வோம். நயன, ஸ்பரிஸ, மானஸ தீட்சை முறைகளில் ஏதோவொன்றின்மூலம் குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பி நாம் பெறப்போவது 25,000 வோல்ட் ’ஷாக்’ தரவல்ல  கரெண்ட். சரியான breakers, fuse அல்லது fail-safe mechanism இல்லாமல் 25 வாட் பல்பில் 25,000 வோல்ட் மின்சக்தியைப் பாய்ச்சினால் அந்த பல்ப் என்ன ஆகும்? சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும் அல்லவா? அதாவது நமக்கு சித்தப்பிரமை ஏற்பட்டுப் பைத்தியமாக அல்லது தீரா நோயாளியாக ஆகிவிடும் வாய்ப்பு அதிகம் அல்லவா? அப்படி ஏதும் ஆகிவிடாமல் பாதுகாப்பாக, முறைப்படி படிப்படியாக அந்த beatific நிலைக்குச் செல்வதற்காகவே இந்த ஹடயோகம், பிராணாயாமம் போன்ற வழிமுறைகள் நமக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.</p>
<p>8. இதையெல்லாம் நம்பவேண்டும் என்று நினைத்தாலும் மனசு மறுக்கிறதே? ‘ஐஸ் கட்டியைத் தொட்டால் ஜிலீர் என்றிருக்கும், நெருப்பைத் தொட்டால் சுடும்’ என்பது போன்ற சிம்பிளான உதாரணங்கள் மூலம் இதை விளக்க முடியுமா?</p>
<p>முதலில் நம் மனித உடலின் வரையறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு எறும்பு தன் உடல் எடையைவிடப் பலமடங்கு பளுவைத் தூக்கவல்லது. நம்மால் அது முடியாது. நம் கண்களில் லிமிடேஷன் http://www.sciencecore.columbia.edu/demo/web/etextbook/6266.html ஆந்தைகள் இருட்டில் பார்க்கவல்லவை மட்டுமல்ல, இரையிடமிருந்து வரும் சப்த நுண்ணலைகளை வைத்து, அவற்றினூடே இருக்கும் வித்தியாசத்தை 0.00003 செகண்ட்களில் கணித்து மிகத் துல்லியமாக இரை இருக்கும் இடத்தைக் கணிக்க வல்லவை. ஒரு பல்லியால் விட்டத்தில் தலைகீழாக வேகமாக ஓடமுடிகிறது. எவ்வளவு தொங்கினாலும் நம்மால் இதெல்லாம் முடியாது. பிரபஞ்சத்திலுள்ள பல கோடிக்கணக்கான புத்திசாலி உயிர்களின் நடுவே நாமும் ஒரு சாதாரண உயிர்தான் என்கிற அடிப்படை அறிவு நமக்கு மிக முக்கியம். </p>
<p>“எனக்குத் தெரியவில்லை” என்று எப்போது ஒப்புக்கொள்கிறீர்களோ, அந்தக் கணத்திலேயே உங்கள் உள்ளே அறிவுச் சுடர் பற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறது. ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கற்கக் கற்க, இது இன்னமும் பிரகாசமாகிறது. அஞ்ஞானம் என்கிற உலக மாயையான இருட்டு ஓடிப்போகிறது.</p>
<p>எப்போதும் நமக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதும், ஒன்றில் லயிக்காமல் இன்னொன்றில் அடிக்கடி தாவுவதும் மனக் குரங்கின் குணாம்சம். நம் எல்லோருக்குமே இது இருக்கிறது. மனதை அதன் போக்கிலேயே விட்டு அதை ஓரிடத்தில் கட்டிப்போட்டு தியானத்தில் லயிக்கச்செய்வது கடினமான, ஆனால் கைவரக்கூடிய ஒன்று தான். நம் உடலே ஆண்டவன் குடியிருக்கும் ஒரு கோவில்தான் என்பதும், நம் உடலின் சூஷ்ம அம்சங்கள் பற்றியும் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். பலவித பிராணாயாம மூச்சுப் பயிற்சிகளின் மூலம் உடலின் ‘சக்கரங்களை’ நாம் அனுபவித்துப் பார்க்க முடிகிறது.  இந்த தியானமுறைகள் எல்லா வர்ணத்தாருக்கும், எல்லா ஜாதியினருக்கும் பொதுவானவையே. </p>
<p>9. சக்கரங்கள் என்றால virtual centers, சரிதானே?</p>
<p>ஆமாம். சரியான ஆசன, பிராணாயாம, தியானப் பயிற்சிகளின் மூலம் நம் கவனத்தை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரம், அநாஹதம், விசுத்தி, ஆஞ்யை போன்ற சக்கரங்களில் நிறுத்தி பல ரகசியங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.</p>
<p>10. கீதையோடு சேர்ந்து படிக்கத்தக்க சில புத்தகங்கள்?</p>
<p>ஹடயோகம் பற்றிய பதஞ்சலியின் புத்தகம், லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி போன்ற பொக்கிஷங்களை கீதையுடன் சேர்த்துப் படித்தால் நம் உடம்பு, தியானம், நம் வாழ்வியல் பற்றிய ஒரு பரிபூரண ஆரம்ப அறிவு ஏற்படுகிறது. </p>
<p>*** *** ***</p>
<p><a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Gita/?action=view&amp;current=gita-008.jpg" target="_blank"><img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Gita/gita-008.jpg" border="0" alt="Photobucket"></a></p>
<p>அந்த காலத்து போர்முறைகள் சரியான வரைமுறைகளுக்குக் கட்டுப்பட்டவை. பெண்கள், குழந்தைகள், கால்நடைகள், நலிவுற்றவர்கள், வயதானவர்கள்- இவர்கள் யாருக்குமே இடைஞ்சல் இல்லாமல், ஊருக்கு வெளியே ஒரு மைதானத்தில்தான் போர்கள் நிகழும். இவை கொரில்லா போர்முறைகள் போல கோழைத்தனமானவை அல்ல எனப்தை நினைவில் நிறுத்துங்கள். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே போர் நிகழ்ந்தது. ‘அம்பையர்’ மாதிரி ஒருவர் சங்கு ஊதி போரை ஆரம்பிப்பார், அவரே சாயங்காலத்தில் மறுபடியும் அதே சங்கை ஊதி அன்றைய போரை முடித்தும் வைப்பார். குருக்ஷேத்திரப்போர் 18 நாட்கள் நிகழ்ந்ததாக ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.</p>
<p>முதல் ஸ்லோகத்திலேயே த்ருதராஷ்டிரன் ஏதோ பொடி வைத்துக் கேட்கிறான் என்றோமே, அது என்ன?</p>
<p>’த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே’ என்றுதானே அவன் ஆரம்பிக்கிறான்? அதாவது ’தர்மங்கள் தழைத்தோங்கும் சிறப்புமிக்க இந்த ஊரான குருக்ஷேத்திரத்தில்’ என்கிறான். அங்கேயே அவனுடைய மனத் தடுமாற்றம் தெரிகிறது. ஆசாரமான இந்த இடத்தில் -குருக்ஷேத்திரத்தில்- இப்படி ஒரு அநியாயம் பண்ணுகிறோமே என்று அவனுடைய மனச்சாட்சியே அவனைக் குத்திக் குடைகிறது!</p>
<p>‘மாமகா பாண்டவாஸ்சைவ’- ‘மாமகா’ என்று தன் பிள்ளைகளையும், ‘பாண்டவாஸ்சைவ’ என்று தன் சகோதரனான பாண்டுவின் பிள்ளைகளையும் எப்படி பிரித்துப் பேசுகிறான் பாருங்கள். இவன் நினைத்திருந்தால், ஏதேனும் உண்மையான முயற்சி எடுத்திருந்தால் இந்த பாரதப் போரே நடக்காமல் நிறுத்தியிருக்க முடியும். அதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்காமல் இப்போது ஒருவித குற்ற உணர்வோடு ‘ரன்னிங் காமெண்டரி’ கேட்டுக் கொண்டிருக்கிறான்!</p>
<p><a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Gita/?action=view&amp;current=gita-002.jpg" target="_blank"><img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Gita/gita-002.jpg" border="0" alt="Photobucket"></a></p>
<p>இரண்டாவது ஸ்லோகத்திலிருந்து ஸஞ்சயன் தொடர்கிறான்:</p>
<p>ஸஞ்ஜய உவாச:<br />
த்ருஷ்ட்வாது பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா<br />
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத் ||1-2||</p>
<p>’பாண்டவாநீகம் வ்யூடம் த்ருஷ்ட்வாது’ என்றால் பாண்டவ சேனையின் வியூகங்களைக் கண்டதும் என்பது நேரடிப் பொருள். ‘ஆசார்யமுபஸங்கம்ய’  என்றால் ஆசார்யரான துரோணர் அருகில் சென்று என்பது பொருள். அதே போல் ’ராஜா வசனமப்ரவீத்’ -’ராஜா’வாகிய துரியோதனன் (வெறும் வெற்று வசனங்களால்) ஏதோ சொல்ல ஆரம்பித்தான் என்பதையும் தெரிந்து கொள்கிறோம்</p>
<p>”அங்கே அணிவகுத்துநின்ற பாண்டவர் படையைப் பார்வையிட்டு கொஞ்சம் நடுக்கத்துடன் வருகிற துரியோதனன் தங்கள் ஆச்சாரியரான துரோணரிடம் சென்று இப்படிப்பட்ட ‘சொற்களால்’ சொல்ல ஆரம்பித்தான்.”</p>
<p>பாண்டவ சேனையைவிட துரியோதனசேனை மிகப் பெரியது. ஆனாலும் தன்னுடைய சேனைகளைப்போய் பார்வையிடாமல் துரியோதனன் எதற்காக பாண்டவர்களுடைய சிறிய சேனையை முதலில் கண்டுகொள்கிறான்? சரி, போர் என்று ஆகிவிட்ட பிறகு, எதற்கு நடுக்கம்? பாண்டவர்களுக்கும் தமக்கும் சேர்த்தே ஒன்றாகப் போர்முறைகள் கற்பித்தவரான துரோணாச்சாரியரிடம் போய் எதற்காக, சரியான வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் கொஞ்சம் உளறலுடம் சரியான பொருளில்லாத வெறும் சொற்களுடன் பேச ஆரம்பிக்கிறான்?</p>
<p>”தான் செய்துவருவது பெரிய தப்பு, அதர்மம், அநியாயம் என்பது அவனுக்கும் புரிந்திருந்ததனால் துரியோதனன், சின்ன சேனையாக இருந்தாலும் அழகாக, பல வியூகங்களாகக் குவித்து வைக்கப்பட்டு தயார்நிலையில் இருக்கின்ற பாண்டவ சேனையைப் பார்த்து மனதில் ஏற்பட்ட நடுக்கத்தால், குரு துரோணரை அடைந்து, ஒரு அரசனுக்குரிய பேச்சு லட்சணங்கள் இல்லாமல் வெற்றுச் சொற்களுடன் இப்படி பேசலானான்” என்பது பொருள்.</p>
<p>இந்த இடத்தில் ’சொல்லின் செல்வன்’ ஆஞ்சநேயனை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.</p>
<p>ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் ‘கண்டனென் சீதையை’ என்று ஆரம்பித்து அவன் ரத்தினச் சுருக்கமாகச் சொன்ன பல விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் மறுபடியும் நினைவு கூறுவோம்.</p>
<p>கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்<br />
தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்<br />
அண்டர் நாயக! இனி துறத்தி ஐயமும்<br />
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்</p>
<p>’கண்டனென்’ என்கிற ஒரே வார்த்தையில் நெற்றியடியாக “இதெல்லாம் ஒரு அனுமானம் அல்லது guess work இல்லை. இது visual proof என்பது தெளிவாகிறது. ‘கற்பினுக்கு அணியை’ என்றதில் “ஹே ராமா! மகாலட்சுமியைப் பற்றி கிஞ்சித்தும் உனக்கு எந்த சந்தேகமும்  வேண்டாம். அவள் கற்புக்கரசி” புரிந்தது. ராமன் கலக்கத்தில் இருக்கிறானே என்று அனுமன் நினைத்திருப்பான் போலிருக்கிறது. மறுபடியும் “இதோ இந்த ரெண்டு கண்ணாலதான் பார்த்தேன்” என்று மறுபடியும் ஒரு ‘கண்களால்’ போடுகிறான். எங்கே பார்த்தான் என்பது ‘தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்’ என்பதில் லொகேஷனுடன் இன்னமும் தெளிவாகிறது.</p>
<p>பல பெரியவர்கள் இதற்குப் பலவிதமாகப் பொருள் சொல்லியிருக்கக்கூடும். என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இங்கே சில பல செய்திகள் சொல்லப்ப்டுகின்றன.</p>
<p>“நான் ஒன்றும் அங்கே போகாமல் சும்மா ஒரு தடவை ஊரை, வானத்தைச் சுற்றிவிட்டுத் திரும்பி விடவில்லை” என்பது ஒன்று. மற்றொன்று “எனக்குத் தெரியும் ஐயா, உங்கள் மனசு பேதலித்துக் கிடக்கிறது. மிகுந்த தடுமாற்றத்தில் இருக்கிறீர்கள். வரக்கூடாத சந்தேகங்கள் எல்லாம் வந்து தொலைக்கின்ற நேரம் இது. அதனால்தான் இவ்வளவு தூரம் சொல்கிறேன். எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்” என்பதாக எனக்குப் படுகிறது. ஒருபடி மேலேபோய் ‘ ‘அண்டர் நாயக! இனி துறத்தி ஐயமும் பண்டு உள துயரும்’ என்று சொல்லி “இனி உன் கவலையையும் சந்தேகத்தையும் மற” என்று ஒரே போடாகப் போடுகிறான். “கவலைய விடுங்க பிரதர்” ரேஞ்சுக்கு ஆஞ்சநேயன் இங்கே சிநேக பாவத்துடன் சொல்கிறான். </p>
<p>அடேயப்பா! எத்தனை வார்த்தை ஜாலம், எவ்வளவு செம்மையான பொருள்! அதனால்தான் அவன் ‘சொல்லின் செல்வன்’!</p>
<p>ஒரு வானர சிற்றரசனின் அமைச்சனான அநுமனே இப்படி படு புத்திசாலித்தனமாகப் பேசவல்லவன் என்றால், சக்ரவர்த்தி துரியோதன மகாராஜா இன்னும் எவ்வளவு சாதுரியத்துடன் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்? துரியோதனன் அப்படிப் பேசுகிறானோ என்றால் வியாஸர் ‘இல்லை’ என்றே பொருள்கொள்ள வைக்கிறார்.</p>
<p>நம் உடம்பே ஒரு குருக்ஷேத்திரம் என்பதும், நமக்குள்ளேயே பல நல்ல குணங்களும், சில தீய குணங்களும் அருகருகே இருப்பதும், தீய காரியங்களைச் செய்ய முற்படும்போது, மனச்சாட்சி நம்மை இடித்துரைப்பதும், நமக்கு உடலில் நடுக்கம், வார்த்தைகளில் குளறல், Lie Detector மெஷினில் Fail ஆவதையுமே இங்கே குறிப்பால் உணர்ந்து கொள்கிறோம். கிருஷ்ணர் இருக்கும் இடத்தில், அதாவது, தர்மம், நியாயம் இருக்குமிடத்தில் இப்படிப்பட்ட மிரட்சி இருப்பதில்லை, பதற்றம் இல்லை, குரல் நடுக்கம் இல்லை. அங்கே ’சேனை’ சிறியதாக இருந்தாலும், அதாவது வருமானம், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் போன்ற வெளிக்காட்சிப் பொருட்கள் பிரம்மாண்டமாக ’ஷோ’வாக இல்லாவிட்டாலும் தர்ம, நியாயம் இருப்பதால் யாருக்கும் பயமில்லாத இந்த ஸ்திரமான நிலை என்பதும் மேற்கொண்டு புரிகிறது. </p>
<p>“தப்பு செய்தவன் திருந்தியாகணும், தவறு செய்தவன் வருந்தியாகணும்” என்று பட்டுக்கோட்டையார் சினிமா பாட்டில் பாடிவைத்ததுபோல், ராஜா துரியோதனனுடைய மனச்சாட்சி அவனை இங்கே இடறுவதால் உடலில் ஒருவித நடுக்கம், வார்த்தைகளில் பதற்றம். பதற்றத்தின் விளைவாகவே அர்த்தமில்லாத வெறும் சொற்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். </p>
<p>ராஜா வெறும் பொம்மைதான். ராஜா சொல்வது பொருளில்லாத வெறும் வசனம், வாதப் பிதற்றல் என்றால் மூலக்கதை, திரைக்கதை, இயக்கம் செய்தது யார்? அவர்கள் அங்கேயே தான் ராஜாவுக்கருகேயேதான் இருக்கிறார்களா அல்லது வேறெங்காவது வெளிநாட்டிலும் இருந்துகொண்டு ரிமோட்டில் ராஜாவை இயக்கி வைக்கிறார்களா? குருக்ஷேத்திரத்தில் ராஜாவை சிக்கவைத்து அதையும் வேடிக்கை பார்க்கிறார்களா?</p>
<p>போகப்போகத்தானே கதை புரியும்!</p>
<p>‘பகவத் கீதை’யைப் பொறுத்தவரை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே கண்ணன்தான். அவனே அதில் ஒரு முக்கியமான வேடத்திலும் நடிக்கிறான். ராஜாவை அவன் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கப்போகிறான், தான் வசமாக சிக்கியது மட்டுமல்லாமல் ராஜா யாரையெல்லாம் காட்டிக் கொடுக்கப் போகிறார், ராஜாவுக்கு என்ன ஆகப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.</p>
<p>அப்படி என்னதான் அர்த்தமில்லாமல் உளற ஆரம்பிக்கிறான் துரியோதனன்? </p>
<p>மேலே பார்ப்போம்!</p>
<p>(தொடர்வோம்)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=449</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>எனக்குத் தெரியாத கீதை! 2</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=436</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=436#comments</comments>
		<pubDate>Tue, 11 Oct 2011 06:51:50 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=436</guid>
		<description><![CDATA[கீதையை நாம் ஆழ்ந்து படிப்பதற்கு முன், கீதை பற்றிய சில உண்மைகள், விமர்சனங்கள், பொதுவான பார்வைகளை தெரிந்து கொள்வது நல்லது. முதலில் பத்து கேள்வி &#8211; பதில்கள்: 1. கீதை எந்த மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது? சம்ஸ்கிருதத்தில். ஆனால் சம்ஸ்கிருதம் உட்பட பலப்பல இந்திய மொழிகளில் சிறப்புரைகள், பொழிப்புரைகள், விளக்க உரைகள் கிடைக்கின்றன. ஸ்வாமி சிவானந்தரின் ஆங்கில உரை மிகவும் எளிதான ஒன்று. ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் உரைகள் மிகவும் பிரபலம். பாரதியாரின் அழகான தமிழ் உரை கிடைக்கிறது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கீதையை நாம் ஆழ்ந்து படிப்பதற்கு முன், கீதை பற்றிய சில உண்மைகள், விமர்சனங்கள், பொதுவான பார்வைகளை தெரிந்து கொள்வது நல்லது.</p>
<p>முதலில் பத்து கேள்வி &#8211; பதில்கள்:</p>
<p>1. கீதை எந்த மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது?</p>
<p>சம்ஸ்கிருதத்தில். ஆனால் சம்ஸ்கிருதம் உட்பட பலப்பல இந்திய மொழிகளில் சிறப்புரைகள், பொழிப்புரைகள், விளக்க உரைகள் கிடைக்கின்றன. ஸ்வாமி சிவானந்தரின் ஆங்கில உரை மிகவும் எளிதான ஒன்று.</p>
<p>ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் உரைகள் மிகவும் பிரபலம். பாரதியாரின் அழகான தமிழ் உரை கிடைக்கிறது. பல்வேறு தமிழ் அறிஞர்களின் படைப்புகள் எளிய தமிழில் கிடைக்கின்றன. சின்மயானந்தா போன்றோரின் பல ஒளி, ஒலி நாடாக்கள் கிடைக்கின்றன. ’ஹரே கிருஷ்ணா’ நிறுவனர் பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதாவின் ‘Bhagavad Gita &#8211; As It Is&#8217; ஆங்கிலப் புத்தகம் இலவசமாகவே கிடைக்கும்.</p>
<p>2. மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்?</p>
<p>700.</p>
<p>3. பலவித யோகங்களைப்பற்றி கீதையில் சொல்லப்பட்டிருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேனே, அவை என்னென்ன? அவற்றால் எனக்கு என்ன பயன்?</p>
<p>பொதுவாக, கீதையை ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம்  என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். கூகுள் மேப்சில் ஒரே இடத்துக்குச் நடந்தோ, காரிலோ, சைக்கிளிலோ செல்ல பலவிதமான வரைபடங்கள் காணக் கிடைக்கின்றன அல்லவா? அதே போல். இந்த மூன்று விதமான யோகங்களும் கடைசியில் சொல்லும் விஷயம் ஒன்றே.</p>
<p>4. இந்த 3 யோகமுறைகளில் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததா?</p>
<p>இல்லை. பொதுவாக மனிதர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம் என்று சொல்கிறார்கள் அல்லவா?</p>
<p>(1) எல்லாவற்றையும் படித்து, ஆராய்ந்து, கேள்விகள் கேட்டுமட்டுமே தெளிபவர்கள். Ph.D ரேஞ்சுக்கு சிந்திப்பவர்கள்.</p>
<p>(2) எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாகவே அணுகுகிறவர்கள். மொட்டை அடித்து, அலகு குத்தி ஆடுபவர்களிலிருந்து, ”எட்றா வண்டிய, கொளுத்ரா பஸ்ஸ” வரை, பயங்கர எமோஷனல் பார்ட்டிகள்.</p>
<p>(3) எல்லாவற்றையும் பகுத்து, வாழ்வியல் அறிவோடு மட்டுமே பார்க்கவேண்டும் என்பவர்கள். “ஏன், எதற்கு, எப்படி என்று விஞ்ஞான பூர்வமாக மட்டுமே பிரச்னைகளை அணுகுபவர்கள். ‘கண்ணால் காண்பதை மட்டுமே’ நம்புவேன் என்கிறவர்கள்.</p>
<p>தற்போதைய தமிழ்நாட்டு ’அரசியல் பகுத்தறிவுவாதி’களுடன் இவர்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஞான, பக்தி, கர்ம யோகமுறைகள் முறையே இந்த மூன்று சாராருக்கும் சரிவரும் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த மூன்று குதிரைகளையுமே அடக்கி ஆண்டு, நம் உடல் என்கிற தேரில் பூட்டிச் சரிவரப் பயணம் செய்தால் ‘பயணம்’ நன்றாக அமையும் என்கிறார்கள். பரிபூரண ஆத்ம ஞானமே இந்தப் பயணத்தின் முடிவாக இருக்கும்.</p>
<p>4. இது ட்விட்டர் யுகம். சுருக்கமாக, கீதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா?</p>
<p>Nike ஷூ கம்பெனியின் ‘Just Do It&#8217; ரத்தினச் சுருக்கமாகப் பொருந்துகிறது என்று எனக்குத் தோன்றுகிறது! ‘செய்வன திருந்தச் செய், அவற்றையும் என்னிடத்தில் பக்தியோடு செய்’ என்று கண்ணன் சொல்வதாக நாம் இதைச் சற்றே நீட்டிக்கொள்ளலாம்.</p>
<p>5. கேட்பதற்கு எளிமையாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் செய்வது எப்படி?</p>
<p>இனிவரும் அத்தியாயங்களில் ஆங்காங்கே இது பற்றியும் நாம் விரிவாகப் பேச இருக்கிறோம்.</p>
<p>6. இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்ததற்கு ஆதாரங்கள் ஏதேனும் உண்டா அல்லது இது கப்ஸாவா?</p>
<p><a href="http://www.archaeologyonline.net/artifacts/scientific-verif-vedas.html">இருக்கின்றன</a>.</p>
<p>குருக்ஷேத்திரம் <a href="http://en.wikipedia.org/wiki/Kurukshetra">இருக்குமிடம் </a>ஹர்யானா மாநிலத்தில்.</p>
<p>7. கீதை பிறந்த தேதி?</p>
<p>மார்கழி மாதத்து சுக்ல ஏகாதசியில் (பௌர்ணமிக்கு முந்தைய பதினோராவது நாள்) இது கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு சொல்லப்பட்டது.</p>
<p>8. கீதையை ஒருசாரார் மட்டுமே படிக்கலாம் என்பது பற்றி?</p>
<p>மகா அபத்தம். மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களுமே சமம், எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உண்டு என்பது கண்ணனால் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.</p>
<p>9. பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று கீதையில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?</p>
<p>இல்லவே இல்லை. மாறாக, ‘சமதரிசனம்’ என்கிற சமத்துவக் கொள்கை மட்டுமே சொல்லப்பட்டிருக்கிரது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; என்கிற வள்ளுவர் வாக்கை இங்கே நினைவு கூறவேண்டும். மும்பையில் பீடிக்கடை வைத்திருந்த்த நிஸர்க தத்தா போன்ற பல ஆன்மஞானிகள் பிராமண குலத்தில் பிறந்தவர்கள் அல்ல. பல நாயன்மார்கள், வள்ளலார், பிரும்மஞானிகள் பலரும் பிறப்பால் பிராமணர்கள் அல்லர். தற்கால பிராமணர்கள் வணங்கும் பல கடவுள்களும் (கண்ணன் உட்பட) பிராமணர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்க.</p>
<p>10. அப்படியானால், கீதையில் சொல்லப்படும் பிரம்மன் வேறு, பிராமணன் வேறா?<br />
ஆமாம். பிரம்மா என்கிற கடவுள் வேறு. பிரம்மன் என்கிற கடவுள் ஸ்வரூபம் வேறு, பிராமணன் என்கிற ஜாதி வேறு. இது பற்றியும் நாம் விரிவாகப் படிக்க இருக்கிறோம்.</p>
<p>ராமாயண ஆரம்பத்தில் ஒரு பாட்டில் அவ்வளவு பெரிய பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்துவிட நினைக்கும் சிறு பூனையாகக் கம்பன் தன்னைத்தானே அடக்கத்துடன் சொல்லிக் கொள்வான்.</p>
<p>எனக்கு அடக்கமெல்லாம் இல்லை. நானும் கீதையை எப்படியாவது படித்து சரியாகப் புரிந்துகொண்டுவிட நினைக்கும் ஒரு சராசரி மாணவனே.</p>
<p>பொதுவாக ஒரு நல்ல, படித்த, கற்றுத்தேர்ந்த குருவிடம் கீதை கற்பது சிறப்பு என்கிறார்கள்.</p>
<p>அந்த பாக்கியம் உங்களுக்கு வேறெங்காவது வாய்க்கட்டும்!</p>
<p>*** *** ***</p>
<p>சரி, இப்போது கீதைக்குள் நுழைவோமா?</p>
<p>சுருக்கமாக, முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனின் கவலை, குழப்பம் நன்றாகவே சொல்லப்படுகிறது:</p>
<p>முதல் அத்தியாயத்தின் முதல் ஸ்லோகம்:</p>
<p>த்⁴ருதராஷ்ட்ர உவாச:</p>
<p>த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:<br />
மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய</p>
<p>மன்னன் த்ருதராஷ்டிரன் ஸஞ்ஜயனிடம் கேட்கிறான்: “தர்மக்ஷேத்ரமாகிய குருக்ஷேத்திரத்தில் ’நம்மவர்களும்’ பாண்டவர்களும் போர் புரிவதற்காகக் கூடி இருக்கிறார்களே, அங்கே என்ன செய்கிறார்கள்?”</p>
<p>த்ருதராஷ்டிரன் கண் பார்வை இல்லாதவன். தன்னுடைய மந்திரியும் தேரோட்டியுமான ஸஞ்சயனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறான். போர்க்களத்தில் இல்லாவிட்டாலும் அரண்மனையில் இருந்தவாறே ‘டீவி’யில் பார்ப்பது போல் எல்லாவற்றையும் பார்க்கின்ற வரத்தை வியாஸரிடமிருந்து பெற்றவன் ஸஞ்சயன்.</p>
<p>பாண்டுவும் த்ருதராஷ்டிரனும் சகோதரர்கள் என்பதும், தருமர் முதலான ஐந்து பாண்டவர்கள் சூதாடி எல்லாவற்றையும் தோற்றுவிட்டு இப்போது போர்க்களத்தில் நிற்பதுமான முன்கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். கீதை முழுவதுமே இந்த ஸஞ்ஜயனின் சொற்பொழிவுதான்.</p>
<p>குருடனாக இருந்தாலும் பொடி வைத்துக் கேட்கிறான் த்ருதராஷ்டிரன். இனிவரும் ஸ்லோகங்கள் எல்லாமே ஸஞ்ஜயனின் பதில்கள்தான். இந்த ஒரு கேள்விக்குப் பிறகு அடுத்த 699 ஸ்லோகங்களிலும் த்ருதராஷ்டிரன் பேசப்போவதே இல்லை!</p>
<p>ஸஞ்ஜயனின் சாதுர்யமான பதிலை அடுத்த பகுதியில் பார்ப்போம்.</p>
<p>(தொடர்வோம்)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=436</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>எனக்குத் தெரியாத கீதை! 1</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=428</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=428#comments</comments>
		<pubDate>Fri, 07 Oct 2011 04:57:48 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[தொடர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=428</guid>
		<description><![CDATA[அனைத்து இந்திய மொழிகள் தவிரவும் உலகம் முழுவதும் பல முக்கிய மொழிகளில் (லத்தீன், ஃப்ரஞ்ச், ஜெர்மன், சைனீஸ், இத்தாலியன்) மொழிபெயர்க்கப்பட்டு, உலகளாவிய பல அறிஞர்களாலும் அலசி ஆராயப்படும், ஆராதிக்கப்படும் பகவத் கீதையைப் பற்றி, பாரதத்தில் பிறந்து வளர்ந்த ஹிந்துவாகிய எனக்கு ஒன்றுமே சரியாகத் தெரியவில்லையே என்கிற ஏக்கம் எனக்குப் பல நாட்களாக இருந்து வந்தது. பகவத் கீதை என்றால் என்ன என்று தெரியும். ஒரு சில ஸ்லோகங்கள் தெரியும். ஆனால் அதை ஆழமாகப் படித்ததில்லை. ஆதி சங்கரரின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அனைத்து இந்திய மொழிகள் தவிரவும் உலகம் முழுவதும் பல முக்கிய மொழிகளில் (லத்தீன், ஃப்ரஞ்ச், ஜெர்மன், சைனீஸ், இத்தாலியன்) மொழிபெயர்க்கப்பட்டு, உலகளாவிய பல அறிஞர்களாலும் அலசி ஆராயப்படும், ஆராதிக்கப்படும் பகவத் கீதையைப் பற்றி, பாரதத்தில் பிறந்து வளர்ந்த ஹிந்துவாகிய எனக்கு ஒன்றுமே சரியாகத் தெரியவில்லையே என்கிற ஏக்கம் எனக்குப் பல நாட்களாக இருந்து வந்தது.</p>
<p>பகவத் கீதை என்றால் என்ன என்று தெரியும். ஒரு சில ஸ்லோகங்கள் தெரியும். ஆனால் அதை ஆழமாகப் படித்ததில்லை.</p>
<p>ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தில் ஒரு பாட்டு இப்படி வரும்:</p>
<p>’பகவத் கீதா கிஞ்சிததீதா<br />
கங்காஜலலவ கணிகா பீதா<br />
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா<br />
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா’</p>
<p>இதில் முதலடியான ‘பகவத்கீதா கிஞ்சிததீதா’யின் கிஞ்சிததீதா என்பது ‘கிஞ்சித் + அதீதா’ என்று பிரிகிறது. அதீதா- இது வேர்ச்சொல். அதாவது படிப்பதிலிருந்து வருவது அத்யயனம், அத்யாயி, அத்யார்த்தி, அத்யாபனம் போன்ற சொற்கள்.</p>
<p>&#8216;கிஞ்சித்&#8217; என்பது ‘கொஞ்சமேனும், ஒரு சின்னத் துளியேனும்’ என்று பொருள் கொள்கிறது.</p>
<p>முழு ஸ்லோகமும் என்ன சொல்கிறது?</p>
<p>“கொஞ்சமாவது பகவத்கீதையைப் படித்திருந்தாலும், ஒரு துளியேனும் கங்கை நீரை அருந்தி இருந்தாலும், ஒரே ஒரு கணமேனும் நாராயணனை நினைத்திருந்தாலும், அப்படிப்பட்டவன், இறக்கும் தருவாயில் எமனுடன் சர்ச்சை செய்ய வேண்டுவதில்லை”</p>
<p>அதாவது, அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்களிடம் கடைசி காலத்தில்கூட எமன் வாலாட்டுவதில்லை.</p>
<p>கொஞ்சம் படித்தாலும் புண்ணியம்தான். ஆனால் முழு பகவத் கீதையையும் யாரும் கலி காலத்தில் நெட்டுருப் போட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்பது தெரிந்துதான் ஆதி சங்கரர் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும்.</p>
<p>ஆதி சங்கரரை கொஞ்ச நேரத்துக்கு அங்கேயே விட்டுவிடுவோம். மீண்டும் பகவத் கீதைக்கே திரும்புவோம்.</p>
<p>சரி, இந்த பகவத் கீதை என்பதுதான் என்ன? ஒரு அத்தியாயமா? பல அத்தியாயங்களா? எது மெயின் கதை? என்றெல்லாம் குழப்பம் வருகிறதல்லவா? நானும் அப்படிக் குழம்பினவன்தான். கொஞ்சம் சீரியசாக பல புத்தகங்களை எடுத்துப் படித்ததில், பல உபன்யாசங்களைக் கேட்டதில் நான் புரிந்து கொண்டவற்றை அல்லது புரிந்துகொண்டேன் என்று நம்பும் சில விஷயங்களை மட்டுமே உங்களுடன் பகர இருக்கிறேன்.</p>
<p>வேத வியாசரின் மகா இதிகாசமான மகாபாரதத்தில் தான் இந்த பகவத் கீதை வருகிறது.</p>
<p>சற்றேறக்குறைய 5000 வருடங்களுக்கு முன்பு, கி.மு. 3137 ல் குருக்ஷேத்திரப் போர் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.</p>
<p>(3 வருடங்கள் முன்பு நான் பத்ரிநாத் சென்றிருந்தபோது அங்கிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள மானா என்கிற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். இதுதான் இந்திய-சீன எல்லையின் கடைசி இந்திய கிராமம். இப்போது வேறெங்குமே தென்படாத சரஸ்வதி நதி தென்படுவது அந்த ஓரிடத்தில் மட்டுமே. அலாகானந்தா நதியும், சரஸ்வதியும் இந்த கிராமத்தருகே கலக்கின்றன. அங்கே வியாசர் குகை, கணேஷ் குகை எல்லாவற்றையும் பார்த்தேன்.)</p>
<p>மகாபாரதம் மொத்தம் 18 பர்வங்களைக் கொண்டது. இதில் ஆறாவது பர்வமான பீஷ்ம பர்வத்தில் பகவத் கீதை வருகிறது.  குருக்ஷேத்திரப் போரின் தொடக்கத்தில் இந்த (அக்கப்)போர் தேவைதானா என அர்ஜுனனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வருகிறது. அதுவும் எங்கே? குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், போர் ஆரம்பிக்கும் நிலையில், பாண்டவ சேனைகளும், கௌரவ சேனைகளையும் ஒருவரை ஒருவர் வெட்டி மாய்த்துக்கொள்ளத் தயாராக நிற்கும் நிலையில் அர்ஜுனனுக்கு இந்தப் பொல்லாத சந்தேகம் வருகிறது.</p>
<p>தன் தேரோட்டியான பகவான் கண்ணனிடம் அவன் தன் தயக்கத்தைச் சொல்கிறான். அதற்குக் கண்ணன் பதிலளிப்பதாக பகவத் கீதை 18 அத்தியாயங்களில் 700 ஸ்லோகங்களாகச் சொல்லப்படுகிறது. மொத்தம் 3 பாகங்கள், ஒவ்வொரு பாகத்திலும் 6 உட்பிரிவுகள்.</p>
<p>மேலே செல்வோமா?</p>
<p>(தொடர்வோம்)</p>
<p>பி.கு: என் வாசக அன்பர்களில் பலரும் என்னைவிட மிகவும் படித்தவர்கள், கற்றுத் தேர்ந்த விஷயஞானிகள். ஆங்காங்கே எனக்கும் அவர்கள் தெளிவுபடுத்தி இதை மேல்நடத்திச் செல்லவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=428</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>சுஜாதா நினைவஞ்சலி 2011</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=418</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=418#comments</comments>
		<pubDate>Mon, 28 Feb 2011 04:55:05 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[general]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[கம்ப்யூட்டர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=418</guid>
		<description><![CDATA[சுஜாதா மறைந்து மூன்றாண்டுகள் ஓடி விட்டன. இந்த ஆண்டு அவருக்குத் தமிழ் இலக்கிய, வாசக உலகம் நிகழ்த்தாத / நிகழ்த்திய அஞ்சலி கொஞ்சம் விநோதமானது. ஃபிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருக்கிறோமே, ஃபிப் 27 சுஜாதா மறைவு தினமாயிற்றே, ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்தால் நாமும் போய் எட்டிப் பார்க்கலாமே என்று நினைத்திருந்தேன். நண்பர்களுக்கு ஃபோன் செய்து பார்த்தேன், ட்விட்டரில் மெசேஜ் கொடுத்துப் பார்த்தேன், ஊஹூம், யாரும் எந்த நிகழ்ச்சியுமே இல்லை என்று தான் சொன்னார்கள். பொதுஜனத் தொடர்பாளரும் சக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சுஜாதா மறைந்து மூன்றாண்டுகள் ஓடி விட்டன.</p>
<p>இந்த ஆண்டு அவருக்குத் தமிழ் இலக்கிய, வாசக உலகம் நிகழ்த்தாத / நிகழ்த்திய அஞ்சலி கொஞ்சம் விநோதமானது.</p>
<p>ஃபிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருக்கிறோமே, ஃபிப் 27 சுஜாதா மறைவு தினமாயிற்றே, ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்தால் நாமும் போய் எட்டிப் பார்க்கலாமே என்று நினைத்திருந்தேன். நண்பர்களுக்கு ஃபோன் செய்து பார்த்தேன், ட்விட்டரில் மெசேஜ் கொடுத்துப் பார்த்தேன், ஊஹூம், யாரும் எந்த நிகழ்ச்சியுமே இல்லை என்று தான் சொன்னார்கள். பொதுஜனத் தொடர்பாளரும் சக நண்பருமான நிகில் முருகனுக்கு மெசேஜ் கொடுத்தால் பதிலே இல்லை. ஒரு சில ப்ளாக்கள், பழைய சுஜாதா மேட்டரையே திரும்பப்போட்டு ஒப்பேற்றிக் கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள்.</p>
<p>’என்னடா இது சுஜாதாவுக்கு வந்த சோதனை?’ சரி, அவர் வீட்டுக்காவது போய் திருமதி. சுஜாதா அவர்களிடம் கொஞ்ச நேரம் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவோம் என்று அவர்களைத் தொடர்பு கொண்டேன்.</p>
<p>இந்த வருடம் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தினார் திருமதி சுஜாதா.</p>
<p>“டைரக்டர் வசந்த் எங்கேயோ ஷூட்டிங்ல இருக்காராம். மனுஷ்யபுத்திரனுக்கு முதுகு வலியாம். பார்த்திபனுக்கு பேதியாம்” என்ற ரீதியில் இருந்தது அவர் பேச்சு.</p>
<p>”சரி விடுங்கள். நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி வரவா?”</p>
<p>“ராம், சொல்ல மறந்து விட்டேன். சார் படித்த க்ரோம்பேட் எம்ஐடியில் சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து கொஞ்சம் பணம் கலெக்ட் செய்து அதை சுஜாதா நினைவாக ஒரு ஹார்ட் சர்ஜரிக்கு உதவும்படியாக ஏதோ ஒரு ஃபௌண்டேஷனுக்குக் கொடுக்கத் திட்டமாம். சின்ன நிகழ்ச்சி தான். ஆனால் அவர் படித்த கல்லூரி. போய் வரலாம் என்றிருக்கிறேன்.”</p>
<p>“ஆஹா, அப்படியே செய்யுங்கள். நான் இன்னும் ஒரு வாரமாவது இங்கே இருப்பேன். ஊருக்குப் போகுமுன் கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன்” என்று ஃபோனை வைத்து விட்டேன்.</p>
<p>பத்து நிமிடங்களில் என் தொலைபேசி அழைத்தது. திருமதி சுஜாதா தான் பேசினார்.</p>
<p>“ராம். எனக்கு ஒரு சின்ன உபகாரம் பண்ணமுடியுமா?”</p>
<p>“என்ன வேண்டும், சொல்லுங்கள்”</p>
<p>“நான் சொன்ன அந்த க்ரோம்பேட்டை நினைவஞ்சலியில் சுஜாதாவின் வயதான உறவினர் ஒருவர் அவரைப்பற்றி நாலு வார்த்தை பேசுவதாக இருந்தது. இப்போது அவரால் வரமுடியாத சூழ்நிலையாம். அதனால், அந்த இடத்தில் நீங்கள் வந்து சாரைப் பற்றி நாலு வார்த்தைகள் பேச முடியுமா? நீங்கள் தான் அவருக்கு நெருங்கிய நண்பராயிற்றே”</p>
<p>இப்படித்தான் நான் 2011 சுஜாதா ஒரே நினைவஞ்சலியின் ஒரே பேச்சாளன் ஆனேன்.</p>
<p>**********************</p>
<p>நான் மயிலாடுதுறை நேஷனல் ஹைஸ்கூலில் படித்த காலத்தில் எட்டாம் வகுப்பில் ஒரு நாள் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் எல்லா மாணவர்களையும் தாங்கள் பிற்காலத்தில் என்னென்ன படிப்பதாக உத்தேசம் என்று பேசச் சொன்னார். வருங்காலக் கனவுகள் கண்களில் மிதக்க டாக்டர்கள், எஞ்சினியர்கள், விண்வெளி விஞ்ஞானிகள் எல்லோரும் எழுந்து நின்று ஆளாளுக்குக் கொஞ்சம் பீலா விட்டு அமர்ந்தார்கள். என் முறை வந்தபோது நான் “எம்டெக் படிக்கப் போகிறேன், க்ரோம்பேட்டை எம்ஐடியில்” என்று கண்களில் பூச்சி பறக்கச் சொன்னேன்.</p>
<p>விதிவசமாக, அந்த எம்ஐடி இன்னொரு கலாமை இழந்தாலும் ஒரு நல்ல சுஜாதா ரசிகனை அமெரிக்காவுக்கு பார்சல் செய்துவிட்டது. என் சொந்தக்கதை, சோகக்கதை இருக்கட்டும். எம்ஐடியில் நேற்று மாலை நிகழ்ந்தது என்ன?</p>
<p>காரில் நானும் திருமதி சுஜாதாவும், சுஜாதாவின் மூத்த பிள்ளை ரங்கப்பிரசாதும். திருநெல்வேலியிருந்து சற்று நேரமுன்னரே இம்போர்ட் செய்யப்பட்டிருந்த எங்கள் ஓட்டுநர் சென்னை சிட்டி டிராஃபிக், சிக்னல்கள், போகவேண்டிய இடம் எது பற்றியும் கிஞ்சித்தும் பிரக்ஞை இன்றி கிடைத்த சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புகுந்து புறப்பட எத்தனித்தார்.  ரங்காவை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். கல்யாணமே வேண்டாம் என்றிருந்த ரங்கா ஃபிப் 14ல்தான் கல்யாணம் செய்து கொண்டாராம். அவசரமாக ரங்காவுக்கு கன்கிராட்ஸ் சொன்னபிறகு எல்லோருமே சேர்ந்து போகுமிடம் பற்றிய கவலையில் ஆழ்ந்தோம். ஓட்டுநரின் லாஜிக் எனக்கு சுத்தாமாகப் பிடிபடவில்லை. எந்த ரோட்டில் எதற்காக ஏன் திரும்புகிறார் என்பது பயங்கர ஃபஸ்ஸி லாஜிக்காகிப் போனது. ஆனால் அவருக்குப் பதட்டம் சற்றுமில்லை. எப்படியும் இன்று பேட்டா நிச்சயம். நாங்கள் தான் பதறிப் போனோம். சரியான ரோடுகளில் திரும்பவைத்த பிறகு “அதான் எனக்கு மொதல்லியே தெரியுமே!” என்கிற திருநெல்வேலிப் பம்மாத்து வேறு. சரியான காமெடி பீஸ்! எனக்கு வடிவேலுவின் ‘வரும், ஆனா வராது’ சீக்வென்ஸ் ஞாபகம் வந்து பயமுறுத்தியது.</p>
<p>பத்து வருடங்களுக்கு முன் ரங்காவை Northridge-ல் விருந்தோம்பியபோது அவன் சாப்பிட்ட ‘ஓல்ட் ஆஸ்திரேலியன் ஸ்டௌட்’ பற்றியெல்லாம் பேசுவதை நிறுத்தி ஓட்டுநரைச் சமாளிக்க ஆரம்பித்தோம். சத்தியமாக எம் ஐடி சிட்லபாக்கத்தில் இல்லை என்பது எனக்குத் தெரியுமென்பதால், அங்கே இங்கே தடுமாறி, ரிவர்ஸில் போய் ஒரு வழியாக கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து விட்டோம்.</p>
<p>அரை இருட்டு. அத்வானமான கேம்பஸ். ஆங்காங்கே சில அமானுஷ்யமான சப்தங்கள். வாசலில் ஈ காக்கை இல்லை. ரங்கா அம்மாவை முறைத்தான்.</p>
<p>எங்களை அழைத்திருந்தவர்கள் ஒருவழியாக எங்களைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். எல்லோரும் இளைஞர்கள். இப்போதெல்லாம் பள்ளிப் படிப்பு முடித்த உடனேயே எம்ஐடியில் சேர்ந்து விட முடிகிறதாம். தெரிந்தது.</p>
<p>MITAFEST 2011 என்ற கொண்டாட்டத்தின் ஒரு இடைச்செருகலாக சுஜாதா நினைவஞ்சலியும் திணிக்கப்பட்டிருப்பது புரிந்தது.</p>
<p>மிகவும் சின்சியராக சில மாணவர்கள் பணம் வசூலித்து அந்தப் பணத்தை சுஜாதா நினைவாக ஒரு இருதய ஆப்பரேஷனுக்காகச் செலவழிக்க நினைத்தது பெருமைப்படவேண்டிய விஷயம். “சுஜாதா சார் எங்கள் சீனியர்” என்று சின்னப் பசங்கள் பெருமைப்பட்டது நல்ல காரியம்.</p>
<p>என்னை யாரென்பது யாருக்கும் தெரியாதாகையால் சுஜாதா பற்றி இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘L.S. ராம்’ பேசுவார் என்று யாரோ ஒருவர் அறிவித்தார். என்னைப்பற்றிக் கவலையில்லை. அவர் சுஜாதாவின் ஒரு புத்தகத்தையாவது படித்திருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. சுஜாதாவைப் பற்றியே அவர் அப்படித்தான் சிலாகித்துக் கொண்டிருந்தார்.</p>
<p>ஓடி வந்து அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கிய இன்னொரு பெண்மணி, சுஜாதா பற்றித் தயாராக எழுதிக் கொண்டுவந்திருந்த ஒரு ஏழெட்டு பக்கங்களைப் படிக்க ஆரம்பித்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. முதல் பக்கம் முடிக்குமுன்னரே, இனிமேல் சுஜாதா பற்றி அவருடைய அமெரிக்க நண்பர் ’L.A. ராம்’ பேசுவார் என்று அறிவித்தார். ரங்கா தலையில் அடித்துக்கொண்டான். “சாரி ராம்” என்று ஆரம்பித்தவனுக்கு ’யாமிருக்க பயமேன்’ என்று அபய ஹஸ்த முத்திரை காட்டி நான் மேடை ஏறினேன்.</p>
<p>சதா சர்வதா காலமும் (ராயல்டி நஹி என்று நினக்கிறேன்) ஏதாவது ஒரு டீவியில் ’பன்னீர் புஷ்பங்கள்’, ‘ஜீன்ஸ்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்று ஓடிக்கொண்டிருப்பதால் ஒரு சில படங்களிலாவது என்னைப் பார்த்திருக்கக்கூடிய ஆடியன்சுக்குச் சற்றே குழப்பம்.</p>
<p>’இந்த சொங்கி அவன்தானா, இல்லையா?’ என்கிற சலசலப்புப் பேட்டிகள் என் காதில் விழாமல் இல்லை.</p>
<p>பக்கத்தில் கருங்கல் ஜல்லி மேடு எதுவும் இல்லை என்பதை நான் ஏற்கனவே கவனித்திருந்ததால் எனக்கு நிம்மதி. அவர்களை இன்னும் கொஞ்சம் குழப்புமுகமாக நான் யாருமே பார்க்காத, திரைக்கே வராமல் பல மாதங்களான ரகசியப் படமான ‘ஜக்குபாய்’ படத்திலும் நடித்திருப்பதைச் சொல்லி மேலும் அவர்களைக் குழப்பினேன்.</p>
<p>”Good evening friends! Do you want me to speak in English? அல்லது தமிழிலேயே பேசட்டுமா?” என்றேன்.</p>
<p>“தமிழ்! தமிழ்!” என்ற ஆரவாரம்.</p>
<p>“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது  கண்மணியே” என்கிற வைரமுத்துவின் நாயகன் &#8211; நாயகி பாவத்தை ஒரு நட்பு பாவமாக  சுஜாதா பெயரில் உல்டா செய்ததை ஆடியன்ஸ் ரசித்தார்கள், கை தட்டினார்கள்.</p>
<p>முதலில் நான் யார், சுஜாதாவுக்கும் எனக்கும் எந்தவிதமான ஸ்நானப் பிராப்தி என்பதைக் கூட்டத்திடம் விளக்கினேன். சுஜாதா குடும்பத்தினர் என்னோடு வந்து ’எல்லே’யில் தங்கியிருந்த நாட்கள், ‘ஜீன்ஸ்’ படத்தில் நடிக்க என்னை அவர் இயக்குனர் சங்கரிடம் ரெகமெண்ட் பண்ணியது, பலப்பல விஷயங்கள் பற்றிய சுஜாதாவின் விஷயஞானம், இன்னபிற விஷயங்களை மிகவும் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன்.</p>
<p>பக்கத்திலேயே ‘ஹா’வென்று நின்று கொண்டிருந்த பேப்பர் அம்மணியிடம் “இன்னும் பேசலாமா, நேரம் இருக்கிறதா, அல்லது இத்துடன் முடித்துக் கொள்ளவா?” என்றேன். எல்லாவற்றுக்குமே பலமாகத் தலையாட்டினார்.</p>
<p>“Brevity is the  soul of wit&#8221; என்பதற்கு சுஜாதா வாழும் உதாரணமாக விளங்கினார். அதை மனதில் கொண்டு, சுஜாதா பெயரால் செய்யப்படும் இந்த நல்ல காரியத்தைச் செய்ய முன்வந்தவர்களை வணங்கிப் பாராட்டி, என் சிற்றுரையை முடித்தேன்.</p>
<p>இன்னொரு விஷயமும் சொன்னேன். சுஜாதாவின் மறைவு தினத்தைக் கொண்டாடுவதை விட அவர் பிறந்த தேதியை (மே 3) கொண்டாடுவதில் திருமதி சுஜாதா அதிகம் விருப்பம் காட்டியதால் அதையும் அங்கே மறக்காமல் சொல்லி மே 3ம் தேதிக்குள் இன்னொரு ஹார்ட் சர்ஜரிக்கு உண்டான பணத்தையும் ஏற்பாடு செய்யுமாறு அவர்களை வேண்டிக்கொண்டேன். அப்படி ஏற்பாடு செய்யப்பட்டால், எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பாகவும் ஒரு டொனேஷன் கொடுப்பதாகச் சொன்னேன்.</p>
<p>அழுகிய முட்டைகள், நசுங்கிய தக்காளிகள் எதுவும் என் திசையில் பறக்குமுன்னர் ஜாக்கிரதையாகக் கீழே இறங்கியவனை மீண்டும் மேடைக்கு அழைத்தார்கள். எனக்கும் ஆஸ்கார் மாதிரி ஒரு நினைவுப் பரிசைக் கையில் திணித்தார்கள். டீன் ஆறுமுகம் ஸ்டான்லி “அங்கே பாருங்க” என்று காமெராவைப் பார்த்து போஸ் கொடுக்கச் சொன்னார்.</p>
<p>அடுத்ததாக ஃபேஷன் ஷோ என்று அறிவித்துக்கொண்டேஏஏ இருந்தார்கள். வரவேண்டிய பெண்கள் கல்லூரி ஏதோ ஒன்று வராததால், காட்டாங்கொளத்தூர் எஞ்சினீயரிங் கல்லூரி மாணவர்கள் (கவனிக்க, நோ மாணவிகள்) விடைத்துக்கொண்டு வந்து நின்று விதம் விதமாக போஸினார்கள். நாம் இருப்பது வெஸ்ட் ஹாலிவுட்டா, க்ரோம்பேட்டா என்று நான் ரங்காவிடம் வினவினேன்.</p>
<p>ரங்கா “போகலாம்மா, எனக்குப் பசிக்குது” என்றான்.</p>
<p>வரும் வழியில் நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்துகொண்டிருந்த, என் பேச்சையும் மிஸ் பண்ணிவிட்ட, வைஸ் சேன்ஸ்லர் மன்னார் ஜவஹர் என்பவரைப் பார்த்துக் கொஞ்சநேரம் பேசினோம். ”சுஜாதா டெக்னாலஜி பற்றி எழுதத் தெரிந்தவர்” என்று ஏதோ சொன்னார். நான் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’வின் வர்ச்சுவல் ரியலிட்டி பற்றி நினைவூட்டினேன்.  “தம்பிக்கு எந்த ஊரு?” என்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்தார். “நானு போன மாசம் ஹாலிவுட் வந்திருந்தேன்” என்றார். நானும் அளவாக சந்தோஷப்பட்டேன்.</p>
<p>வரும் வழியில் எங்கள் ஓட்டுநர் மறுபடியு திருநெல்வேலிக்கே போக எத்தனிக்க, நாங்கள் அவரை ஒரு ஓட்டு ஓட்டி, ஒரு வழியாக சிட்டிக்குள் வந்து சேர்ந்தோம்.</p>
<p>“இந்த ரூட்டுதான் எனக்குத் தெரியுமே” என்றார் ஓட்டுநர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=418</wfw:commentRss>
		<slash:comments>15</slash:comments>
		</item>
		<item>
		<title>மன்னிக்க வேண்டும்!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=410</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=410#comments</comments>
		<pubDate>Thu, 12 Aug 2010 20:06:44 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[general]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=410</guid>
		<description><![CDATA[வாசகர்களின் பல பின்னூட்டங்கள், என் ஜிமெயில் அக்கவுண்டின் ‘ஸ்பாம்’ செட்டிங்குக்குள் புகுந்து மாதா மாதம் அநாதையாய்க் கேட்பாரின்றி காலாவதியாகிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.  பின்னூட்டங்கள் ஒழுங்காகவே வந்துகொண்டிருந்தன. வோர்ட்பிரஸ் அல்லது ஜிமெயில் செட்டிங்சில் ஏதோ சமீப அப்டேட்டின்போது மாற்றம் செய்து விட்டார்கள் போலும் ;-( இப்பொழுது சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், உங்கள் பின்னூட்டங்கள் சரியான முறையில் வெளிவராமல் இருந்திருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். என்னுடைய யாஹு முகவரியிலும் இனிமேல் எனக்குத் தெரியப்படுத்தலாம். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வாசகர்களின் பல பின்னூட்டங்கள், என் ஜிமெயில் அக்கவுண்டின் ‘ஸ்பாம்’ செட்டிங்குக்குள் புகுந்து மாதா மாதம் அநாதையாய்க் கேட்பாரின்றி காலாவதியாகிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.  பின்னூட்டங்கள் ஒழுங்காகவே வந்துகொண்டிருந்தன. வோர்ட்பிரஸ் அல்லது ஜிமெயில் செட்டிங்சில் ஏதோ சமீப அப்டேட்டின்போது மாற்றம் செய்து விட்டார்கள் போலும் ;-(</p>
<p>இப்பொழுது சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், உங்கள் பின்னூட்டங்கள் சரியான முறையில் வெளிவராமல் இருந்திருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். என்னுடைய யாஹு முகவரியிலும் இனிமேல் எனக்குத் தெரியப்படுத்தலாம். (அதே பெயர் தான் @யாஹு.காம்!)</p>
<p>என்றென்றும் அன்புடன்,</p>
<p>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=410</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>செவ்வடையான மசால்வடையே!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=403</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=403#comments</comments>
		<pubDate>Fri, 09 Jul 2010 19:28:08 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[Miscellaneous]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=403</guid>
		<description><![CDATA[செவ்வடையான மசால்வடையே! &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211; ’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக்  குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம். ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல! ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>செவ்வடையான மசால்வடையே!<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக்  குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.</p>
<p>ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!</p>
<p>ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும்  கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.</p>
<p><a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/07/vada.jpg"><img class="alignleft size-full wp-image-404" title="Masal Vadai" src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/07/vada.jpg" alt="" width="400" height="342" /></a></p>
<p>‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!</p>
<p>’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?</p>
<p>இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!</p>
<p>*************************</p>
<p>பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?</p>
<p>ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.</p>
<p>என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.</p>
<p>சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:</p>
<p>”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”</p>
<p>ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.</p>
<p>”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. &#8216;ஆறு&#8217; என்றால் வழி; &#8216;ஆற்றுப்படுத்துதல்&#8217; என்றால் &#8216;வழிகாட்டுதல்&#8217;. &#8216;ஆற்றுவடை&#8217; என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, &#8220;அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்&#8221; என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.</p>
<p>’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட &#8216;ஆறுபடை வீடு&#8217; அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், &#8216;ஆறு திருப்பதி&#8217; &#8216;அறுபத நிலை&#8217; &#8216;ஆறு நிலை&#8217; போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. &#8216;ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே&#8217; என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்&#8230; ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”</p>
<p>இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.</p>
<p>இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.</p>
<p>சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.</p>
<p>’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’</p>
<p>ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.</p>
<p>’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.</p>
<p>திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:</p>
<p>”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.</p>
<p>’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்<br />
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்<br />
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்<br />
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்<br />
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’<br />
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.</p>
<p>இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.</p>
<p>‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.</p>
<p>சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”</p>
<p>சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”</p>
<p>வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.</p>
<p>**********************</p>
<p>”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”</p>
<p>”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்‌ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”</p>
<p>இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?</p>
<p>”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”</p>
<p>இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.</p>
<p>“இந்த மசால் வடை &#8211; செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.</p>
<p>இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.</p>
<p>செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?</p>
<p>இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.</p>
<p>ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.</p>
<p>நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”</p>
<p>எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.</p>
<p>இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!</p>
<p>நன்றி: கல்கி                                                                             </p>
<p>************************</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=403</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>கணினியில் கன்னித் தமிழ் வளர்ந்த கதை!</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=399</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=399#comments</comments>
		<pubDate>Tue, 18 May 2010 18:16:07 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=399</guid>
		<description><![CDATA[&#8220;இணையம், இணையத் தமிழ் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதித் தாருங்கள்” என்று நண்பர் நா. கணேசன் சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். ஏதோ விழா மலருக்கு என்று நினைவு. இது என்ன ஆயிற்று, வெளியானதா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. அதனாலென்ன, இங்கே வெளியிட்டு விடலாமே என்று இன்று காலை தோன்றியதன் பலனை இனிமேல் அனுபவியுங்கள்! ***** “ஏய், இவளே! ஓடி வந்து இதைப் பாரேன்! உன் பெயரைத் கம்ப்யூட்டரில் தமிழில் அடித்திருக்கிறேன், பார்!” வீட்டிலே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;இணையம், இணையத் தமிழ் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதித் தாருங்கள்” என்று நண்பர் நா. கணேசன் சில மாதங்கள் முன்பு கேட்டிருந்தார். ஏதோ விழா மலருக்கு என்று நினைவு. இது என்ன ஆயிற்று, வெளியானதா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது.</p>
<p>அதனாலென்ன, இங்கே வெளியிட்டு விடலாமே என்று இன்று காலை தோன்றியதன் பலனை இனிமேல் அனுபவியுங்கள்!</p>
<p>*****</p>
<p>“ஏய், இவளே! ஓடி வந்து இதைப் பாரேன்! உன் பெயரைத் கம்ப்யூட்டரில் தமிழில் அடித்திருக்கிறேன், பார்!”</p>
<p>வீட்டிலே ஒரு புதுக் குழந்தை பிறந்ததும் எல்லோரும் என்ன செய்வதென்று கூடத் தெரியாமல் வாயெல்லாம் பல்லாக அதைச் சுற்றிச் சுற்றி வருவோமே, அதே போல், முதன் முதலாகத் தமிழ் எழுத்துகளைக் கணினியில் பார்த்த குதூகலம் இப்பொழுதும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.</p>
<p>1995-ம் வருடம். அமரர் சுஜாதா அவர்கள் சென்னையிலிருந்து குடும்பத்துடன் என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டுக்கு வருகை தந்திருந்த நேரம் அது. எங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான சினிமா, அரசியல் நண்பர்களைப் பற்றி சுவாரசியமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். வசனம் எழுதுவது, திரைக்கதை அமைப்பது, Scriptor, Movie Magic போன்ற சினிமா தொழில் சார்ந்த மென்பொருட்கள் பற்றியும் பேச்சு திரும்பியது.</p>
<p>“தமிழில் தட்டச்சு செய்யமுடியும், தெரியும், இல்லையா?” என்று கேட்டார் சுஜாதா.</p>
<p>அது பற்றிய விபரங்களை நான் அரசல் புரசலாக இணையத்தில் அறிந்திருந்தாலும், அந்த மாதிரி முயற்சிகளுக்கு சுஜாதா பெரும் முன்னோடியாக இருந்தவர் என்கிற முறையில் அவரையே மேல் விபரங்கள் தரும்படி கேட்டுக் கொண்டேன். கணினி, தமிழ், அறிவியல்- எல்லாமே சுஜாதாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியான சந்தோஷ சமாச்சாரங்கள் அல்லவா! அவ்வளவு பெரிய பிதாமகர் குருகுலம் மாதிரி பக்கத்திலிருந்து சொல்லிக் கொடுத்தால் கேட்பதற்கு எனக்குக் கசக்குமா?!</p>
<p>‘அஞ்சல்’ மென்பொருள், முத்து நெடுமாறன், இன்னும் பல சிங்கை நண்பர்களின் கூட்டு முயற்சி பற்றியெல்லாம் சுஜாதா விபரமாகச் சொன்னது மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்கும்படியும், சோதனை முயற்சிகளுக்கு உதவவும் அவர் என்னைப் பணித்தார். ஓரளவுக்கு நானும் கணினித் துறையில் வல்லுனராக இருந்ததும் எங்களுக்கு வசதியாகப் போயிற்று. இன்னமும் சொல்லப்போனால், கணினி தொடர்பான வியாபாரங்களில் நான் அப்போது தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். IBM, HP, Apple, Microsoft போன்ற நிறுவனங்களுடனும், சினிமா தொழில் சார்ந்த மென்பொருள் தயாரிப்பாளர்களுடனும் எங்கள் வியாபார உறவுகள் பலமாகவே இருந்தன.</p>
<p>முத்து நெடுமாறன் மூலமாக, முதன் முதலாக ‘அஞ்சல்’ மென்பொருள் உபயோகப்படுத்தி ‘அம்மா, அப்பா’ என்றெல்லாம் விளையாட்டாகத் தட்டச்சு செய்து பார்த்து, எங்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் ஓடி வந்து ‘மானிட்ட’ரைப் பார்க்கச் செய்து குதூகலித்திருந்த காலம் அது. ஒரு சின்னக் குழந்தையைப் போல கணினியில் தமிழ் தவழ்ந்து, தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்த கால கட்டம்,</p>
<p>அது முதல், பல சோதனை முயற்சிகளுக்கும் என்னைத் தோள் கொடுக்குமாறு பணித்ததுடன் எனக்கு நல்ல பல அறிமுகங்களையும் சுஜாதா செய்து கொடுத்தார். கொஞ்சம் கூட வறட்டு கௌரவம் பார்க்காமல் அவர் எங்களுடன் பழகியது, சிக்கலான பல அறிவியல், கணினி, திரைக்கதை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாங்கள் விவாதித்திருந்தது,  கணினியில் தமிழுக்காக மேலும் என்னென்ன செய்யவேண்டும், யார் யார் எங்கெங்கே எப்படி இதற்காக மெனக்கெட்டு உழைக்கிறார்கள் போன்ற விபரங்கள்= எல்லாமே நாங்கள் எல்லோரும் ஒரு பெரிய, உயரமான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற உற்சாகமான முயற்சியாக இருந்தது. தமிழ் எழுத்தாளர்களில் ஒரு ஜாம்பவானாக இருந்த சுஜாதா அவர்கள் இப்படிப்பட பலப்பல புது முயற்சிகளுக்கு உதவியதுடன், இதற்கெல்லாம் தீவிரமான ஆதரவாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். ஒரு சின்ன அணிலாக நானும் என் பங்குக்கு ஏதோ என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன் என்கிற பெருமிதம் எனக்கு இன்றும் மன நிறைவைத் தருகிறது.</p>
<p>ஆரம்பத்தில் TSC, TSCu போன்ற கட்டமைப்புகளுடன் புதுப்புது தமிழ் ‘ஃபாண்ட்கள்’ வெளிவந்தபடியே இருந்தன. ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு ஃபாண்டில்! ‘இதைப் படித்தால் அதைப் படிக்க முடியாது, அதைப் படிக்க வேண்டுமென்றால் இன்னுமொரு ஃபாண்ட் தேவை’ என்று ஆரம்ப காலக் குளறுபடிகள் ஏராளம், ஏராளம்! “அவர் இதிலே காசு பார்க்கப் பார்க்கிறார்”, “இந்தாருங்கள், இது இலவசம்!” “இலவசமா? அதெல்லாம் குப்பை!” போன்ற வியாபாரக் கூச்சல்கள், குழப்படிகளுக்கும் அப்போது பஞ்சம் இல்லை! தகராறுகள் இல்லாமல் தமிழ் வளர்ந்ததாக சங்க காலத்திலிருந்தே சான்றுகள் இல்லையே!</p>
<p>பக்கம் பக்கமாக என்னுடைய நாடகங்களுக்கும், கதைகளுக்கும், கவிதைகளுக்கும் வெள்ளைத் தாளில் எழுதிப் பழகியிருந்த நான் எல்லாவற்றையும் கணினியில் செய்ய முடிவதில் சந்தோஷப்பட்டேன். ஆனால், அடிக்கடி கணினிகள் தட்டுத்தடுமாறுவது, ஹார்டு டிஸ்குகள் அகாலமாக மண்டையைப் போட்டு எழுத்தாளர்களை அழவைப்பது, வாரக் கணக்கில் எழுதியவையெல்லாம் ஒரே நொடியில் virtual space என்கிற வெற்றிடவெளியில் காணாமல் போவது போன்ற கவலைகளும் கூடவே வந்து கழுத்தை அறுத்தன.</p>
<p>பாலா பிள்ளையின் <a href="http://www.tamil.net/">www.tamil.net</a> இம்மாதிரி பல ஊடக முயற்சிகளில் இருந்த என் போன்றவர்களை ஒருங்கிணைக்க உதவியது. சிட்னி, ஆஸ்திரேலியாவில் இருந்த அவருடன் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருந்த நான் நண்பனானேன், ஆனாலும், பல விஷயங்களை ஒருங்கிணைக்க முடிந்தது. முத்து நெடுமாறன் சிங்கப்பூரில், சுஜாதாவோ சென்னையில்! இன்னும் பல நண்பர்கள் பலப்பல ஊர்களில்! ஒவ்வொருவரும் இருப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், படிப்பதும் ஒவ்வொரு நேரத்தில். ஆனால் ஒரே தளத்தில் எங்களால் எப்போதும் உறவாட முடிந்தது. தமிழ் இணையத்தால் மட்டுமே இது சாத்தியமானது. நல்ல பல தமிழ்ப் பெண்கள் “நாங்கள் கணினிக் கைம்பெண்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்!” என்று உலகளவில் கூக்குரலிட ஆரம்பித்ததும் இதே கால கட்டத்தில் தான்!</p>
<p>எந்தக் கண்ணகியின் கூச்சலுக்கும் பயந்து கணினித் தமிழ் முடங்கிக் கிடக்கவில்லை! அதன் வளர்ச்சி, பல தமிழ் ஆர்வலர்களின் பெரு முயற்சியுடன் யாஹு, கூகுள் போன்ற இடங்களில் பல தமிழ் குழுமங்களாகத் தொடர்ந்தது.</p>
<p>நானும் அகத்தியர், மரத்தடி, தமிழோவியம் போன்ற பல குழுக்களிலும் உறுப்பினராகித் தொடர்ந்து எழுதி வளர்ந்தேன். இரா. முருகன், என். சொக்கன், வெங்கடேஷ், பாரா போன்றவர்களுடன் ‘ராயர் காப்பி கிளப்’ ஆரம்பித்து அதையும் ஜாலியாக நடத்தினோம். என்னை ஊக்குவித்த பல நல்ல நண்பர்களை நான் இங்கே நன்றியுடன் நினைவு கூறுகிறேன். பாரா, வெங்கடேஷ் போன்ற பல பத்திரிகை நண்பர்கள் என்னை அடுத்த அடி நோக்கி நடக்க உற்சாகப்படுத்தினார்கள். ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், திண்ணை, தென்றல், கிழக்கு பதிப்பகம் என்று நானும் பல இடங்களில் எழுதலானேன்.</p>
<p>குழுக்கள் பெரிதாகப் பெரிதாக வெட்டியும் ஒட்டியும் எழுதுதல், வெட்டிப் பேச்சுகள், வீணர்கள் சிலர் என்று மட்டுறுத்தல் தேவைகளும் நாளடைவில் அதிகரிக்க ஆரம்பித்தன!</p>
<p>‘ஜாண் இடமாக இருந்தாலும் தனி இடமே சொர்க்கம்’ என்று ‘ப்ளாக்’கள் பிறகு வேர் விட ஆரம்பித்தன. ‘இந்தக் கூட்டுக் குடும்ப குழப்பங்களுக்குத் தனிக் குடித்தனமே தேவலை போல் இருக்கிறதே!’ என்று பலரும் யோசிக்க நேர்ந்தது. ஆனால், ஒன்றுக்கொன்று பிரச்னை இல்லாமல் குழுமங்களும், தனி வலைப்பகுதிகளும் சேர்ந்தே ஒற்றுமையுடன் இன்றும் இயங்குகின்றன.</p>
<p>‘ப்ளாக்’ என்கிற தனிப்பட்ட Blogger, WordPress போன்ற வலைப்பகுதிகளில் நாங்கள் எல்லோருமே இன்றும் தமிழால் வளர்ந்து வருகிறோம்! என்னுடைய முகவரியாகிய losangelesram.blogspot.com “வாருங்கள்! வந்து உங்கள் நினைவலைகளைப் பதிவு செய்யுங்கள்!” என உங்களை அன்புடன் அழைக்கிறேன். <a href="../../">www.writerlaram.com</a> இதுவும் என் வீடே!</p>
<p>தமிழின் பரிணாம வளர்ச்சி Twitter, Facebook, Myspace போன்ற இடங்களிலும் விருவிருப்பாகத் தொடர்கிறது</p>
<p>இணையத் தமிழ் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் வாசகர்கள், ரசிகர்கள், நண்பர்கள் ஏராளம்!</p>
<p>வாழ்க தமிழ்! வளர்க தமிழ் இணையம்! நாளையும் நமதே!</p>
<p>என்றென்றும் தமிழன்புடன்,</p>
<p>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</p>
<p><a href="http://losangelesram.blogspot.com/">http://losangelesram.blogspot.com</a></p>
<p><a href="http://losangelesram.blogspot.com/"></a> <a href="../../">www.writerlaram.com</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=399</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு ஜூரியின் டயரி &#8211; 4 1/2</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=392</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=392#comments</comments>
		<pubDate>Tue, 23 Feb 2010 19:00:32 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[தொடர்கள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=392</guid>
		<description><![CDATA[’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ &#8211; இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள். ‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ &#8211; இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள். என் ஜூரி டயரி  படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்: ‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’ ‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’ ‘ஒஹோ, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ &#8211; இதெல்லாம் துவாபர யுகத்தில் செய்வதற்கு உகந்த நல்ல காரியங்கள்.</p>
<p>‘அடுத்தவர் டயரியை எட்டி எட்டிப் படித்தல், அஜீத்குமாரை வம்புக்கு இழுத்தல்’ &#8211; இவை இந்தக் கலிகாலத்தில் செய்யப்படுகின்ற புண்ணீய காரியங்கள்.</p>
<p>என் ஜூரி டயரி  படிக்கும் புண்ணீயாத்மாக்கள் கொஞ்சம் பாவச் சேற்றில் கேள்விக் கணைகளுடன் தவித்துத் தத்தளிப்பதாக நான் அறிகிறேன்:</p>
<p>‘இந்த ஆள் சொல்வதெல்லாம் ரியலா, ரீலா?’</p>
<p>‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா, நடந்திருக்கக் கூடியதா?’</p>
<p>‘ஒஹோ, கலிஃபோர்னியாவில் மட்டுமே இதெல்லாம் சாத்தியமோ, ஈஸ்ட் கோஸ்டில் நாங்கள் ஜூரியானால் வெறுமனே பேஸ்தடித்துக் கை கட்டி வாய் பொத்தி  நிற்க வேண்டி இருக்கிறதே!’</p>
<p>இப்படிப்பட்ட  கவலைகளால் நம் வாசகர் உலகம் குழம்பிக் கிடக்கிறது.</p>
<p>தனி மடலில் கேட்கிறார்கள், தண்ணியடித்து விட்டு விம்முகிறார்கள், ”தல, நீ ஒண்ணும் கண்டுக்காத பிரதர்” என்றும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள்.</p>
<p>அதனால் தான் இந்த அரைப் பக்கக் கேள்வி, உங்களைப் பார்த்து:</p>
<p>இந்த ஜூரி டயரியைத் தொடர்ந்து</p>
<p>எழுதிக் கிழிக்கட்டுமா? அல்லது கிழித்துப் போட்டு விடட்டுமா?!</p>
<p>(சட்டம் தன் வேலையைத் தொடருமா ?)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=392</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு ஜூரியின் டயரி -4</title>
		<link>http://www.writerlaram.com/tamil/?p=379</link>
		<comments>http://www.writerlaram.com/tamil/?p=379#comments</comments>
		<pubDate>Mon, 15 Feb 2010 23:09:31 +0000</pubDate>
		<dc:creator>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</dc:creator>
				<category><![CDATA[தொடர்கள்]]></category>
		<category><![CDATA[நினைவலைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerlaram.com/tamil/?p=379</guid>
		<description><![CDATA[“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’ வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!. வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>“அசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?!’</strong></p>
<p>வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக், தாலிபான் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டபிறகு “ஐயோ, அம்மா, அடிக்கிறானுவளே, மொத்துறானுவளே, கொரில்லா குத்து குத்துறானுவளே” என்று அமெரிக்கர்கள் போர்முனையில் ஒப்பாரி வைப்பதும், பட்ட அடி மறப்பதற்குள் புதிது புதிதாக இன்னொரு வம்புச் சண்டையை வேறெங்காவது ஆரம்பிப்பதும் …. ’அமெரிக்க அரசியல்’ல இதெல்லாம் சகஜமப்பு!.</p>
<p>வியட்நாம் போர் காலத்தில் (1965-1973) அப்படி அபத்தமாக வியட்காங் கொரில்லாக்களிடம் மாட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பறிகொடுத்த தேசம் அமெரிக்கா. வீர மரணம் அடைந்தவர்களை விட, கை, கால், கண் இழந்து மன நோயாளிகளாகவும், முடமாகவும், பல்வேறு பயங்கர உடல் உபாதைகளுடனும் திரும்பிய பல்லாயிரம் பேரைக் கண்டு ஒரு தேசமே திகைத்துப் போனது. என்ன செய்வதென்றே தெரியாமல் பம்மிப் பதுங்கியது. பழுத்த அரசியல்வாதிகள் கூட நிலைகுலைந்து போனார்கள்.</p>
<p>எங்கு பார்த்தாலும் நொண்டிகளாகவும், கை கால் இழந்தவர்களாகவும் ’வியட்நாம் வார் வெடரன்ஸ்’ வீல் சேர்களில், ஆஸ்பத்திரிகளில், வீதிகளில். “அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக, அரசியல் லாபங்களுக்காக, ஆயுத வியாபாரிகளின் லாபத்திற்காக, அநியாயமாக ஒரு தலைமுறையே பலிகடா ஆக்கப்பட்டு விட்டது” என்கிற போருக்கெதிரான வலுவான கோஷங்கள் நாடெங்கும் ’பீட்டில்ஸ்’ போன்றவர்களால் எதிரொலிக்க ஆரம்பித்திருந்த நேரம்.</p>
<p>ஆட்சியாளர்கள், தங்கள் மனச்சாட்சிக்கு ஒரு களிம்பு பூசும் முயற்சியாகவும், போருக்கெதிரான போராட்டங்களைச் சற்றேனும் திசை திருப்புமுகமாகவும் ‘Americans with Disabilities Act’ என்றொரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ‘வெடரன்ஸ்’களுக்காகக் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன், இலவச மேற்படிப்பு, இலவச ஆஸ்பத்திரி இத்தியாதி இத்தியாதி!</p>
<p>அந்த ADA சட்டத்தின்படி, நாடு முழுவதும் வீல்சேர்களில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைகண்ணிகளின் நுழைவாயில்களுக்கு மிக அருகே சரியான பார்க்கிங், சக்கர வண்டிகள் சென்றுவர சரியான பாதை அல்லது லிஃப்ட், முறையான பாத்ரூம் வசதிகள் செய்து தரும்படி எல்லாக் கம்பெனிகளும், பிசினஸ்களும் நிர்ப்பந்திக்கப்பட்டன. படியிலேறி நடந்து செல்லமுடியாதவர்களுக்கான சாய்வான வசதியான பாதைகள், ஸ்பெஷல் சாய்விருக்கைகள், பஸ், ரயில் போன்ற பொதுஜன மார்க்கங்களில் ரிசர்வ்டு சீட்கள்- எல்லாம் கட்டாயமாக்கப்பட்டன. போர்க்காலத்தில் நொண்டி, முடமானவர்கள் தவிர, பிறக்கும்போதே ஊனமுற்றிருந்தவர்களுக்காவும் இந்த கட்டாய வசதிகள் பயன்பட ஆரம்பித்தன.</p>
<p>கண் பார்வை இல்லாமல் போனவர்கள் வசதிக்காக பஸ்களில் Blind Dogs என்று சொல்லப்படும் ஸ்பெஷல் டிரெய்னிங் உள்ள நாய்களுக்காக ரிசர்வ் சீட்கள் இருப்பதை நான் சான் ஃப்ரான்சிஸ்கோ பேருந்துகளில் பார்த்திருக்கிறேன். செய்யப்படவேண்டிய நல்ல காரியம் தான். அடிக்கடி வலிப்புநோய் வந்து அவதிப்படுபவர்கள் கூட இப்படிப்பட்ட புத்திசாலி நாய்களை உபயோகிப்பதுண்டு.</p>
<p>அருகாமையில் இருப்பவர்களுக்கு வலிப்பு வரப்போகிறது என்கிற செய்தி இந்த நாய்களுக்கு சில நொடிகள் முன்கூட்டியே தெரிந்து, அவை தம் எஜமானவர்கள் தடுமாறிக் கீழே விழுந்தால் தம் உடலைத் தலையணை போல் கிடத்தி அவர்களைத் தலையில் அடிபடாமல் காப்பாற்றுமாம். பஸ் சீட்களுக்கு அடியில் சமர்த்தாக வாலைச் சுருட்டியபடி, அதே நேரத்தில் தன் எஜமானர் மேலும் ஒரு கண்பதித்து இந்த நாய்கள் படுத்திருப்பதை நான் மிகுந்த ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன்.</p>
<p>*** *** ***</p>
<p>ஆனால், எல்லா நல்ல காரியங்களையும் தத்தம் சுயநலத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டு ஆதாயம் தேட முனையும் அசுரர்கள், கேவலமான மனம் படைத்தவர்கள் எங்கும் உண்டெல்லவா?</p>
<p>அப்படிப்பட்ட அமெரிக்காசுரர்களில் முதன்மையான வீல் சேர் அசுரனின் கேஸ் ஒன்று எங்கள் கோர்ட்டுக்கு வந்தது. வீல்சேராசுரன் என்பது நான் வைத்த செல்லப்பெயர். அவனுடைய ஒரிஜினல் பெயர் மோல்ஸ்கி.</p>
<p>மோல்ஸ்கிக்கு இடுப்புக்கீழே கை கால் விளங்காது. வீல்சேரில் தான் சதா வாசம். ஆனால் ஆளைப் பார்த்து ’ஐயோ பாவம்’  என்று பரிதாபம் கிரிதாபம் பட்டு விடாதீர்கள். ஏனென்று சொல்கிறேன்.</p>
<p>தினமும் மோல்ஸ்கிக்கு என்ன வேலை தெரியுமா? காரில் வீல்சேரிலுடன் ஏறி, தன் கேர்ள் ஃப்ரண்டுடன் பக்கத்துப் பக்கத்து ஊர்களில் இருக்கும் ஏதாவது கடைகளுக்கு அல்லது ஹோட்டலுக்குச் செல்வது.</p>
<p>இதிலே என்ன தப்பு? என்கிறீர்களா? பொறுங்கள்.</p>
<p>அங்கே போனவுடன் “என்னால் வீல்சேருடன் கடைக்குள் சரியாக நுழைய முடியவில்லை, நீ போட்ட பாதை சரியில்லை, வாசலில் பார்க்கிங் சரியில்லை, கதவைத் திறக்கும்போது கை பிசகி விட்டது, கடைக்குள் பாத்ரூம் சரியில்லை” என்று ஏதாவது வம்படியாக ரவுசு பண்ணி அந்தந்த கடைக்காரர்கள் மேல் கேஸ் போடுவது அல்லது கேஸ் போட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி காசு பறிப்பது மோல்ஸ்கியின் தொழில்!</p>
<p>பல சின்ன கடைக்காரர்கள் மோல்ஸ்கியின் அதிரடிக்குப் பயந்து, “நமக்கெதற்கு வம்பு?” என்று அவன் கேட்கின்ற தொகையை சைலண்டாக செட்டில் பன்ணித் தொலைக்க ஆரம்பித்தார்கள். இல்லையென்றால் “அங்கே போன் பண்ணுவேன், இங்கே சொல்லி விடுவேன். நீ கடையை இடித்துக்கட்ட எவ்வளவு செலவாகும் தெரியுமா?” என்ற பயமுறுத்தல் தான்.</p>
<p>ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இப்படி அடாவடி வீல்சேர் கட்டைப் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த மோல்ஸ்கி நாளாவட்டத்தில் மேலும் மேலும் எக்கச்சக்கமாக துட்டு பண்ணப் பழகிவிட்டான். அவனுக்கு ’உதவி’ செய்வதற்கென்றே ஒரு வக்கீல்கள் டீம், போட்டோகிராஃபர்ஸ் டீம், அசிஸ்டெண்ட்ஸ் என்று வைத்துக்கொண்டு பகல் கொள்ளையே அடிக்க ஆரம்பித்து விட்டான்.</p>
<p>மோல்ஸ்கியின் பெயரைக்கேட்டாலே லாஸ் ஏஞ்சல்ஸ் சிறு தொழில் கடைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம் ஆகி விட்டது.</p>
<p>அப்படித்தான் ஒரு நாள் மோல்ஸ்கி லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரங்களில் ஒன்றான வுட்லண்ட் ஹில்சில் ஒரு சைனீஸ் ஹோட்டலுக்கு லஞ்ச் சாப்பிடப் போனான். சாப்பிட்டு முடித்து, பாத்ரூம் போகவேண்டும் என்று அங்கே போய் ஏகப்பட்ட கலாட்டா. ’டாய்லெட்டின் அமைப்பு சரியில்லை, டிஷ்யூ பேப்பரை வீல்சேர்வாதிகள் எட்ட முடியாமல மிக உயரே வைத்து விட்டார்கள், வாஷ் பேசின் உசரம் அதிகம், கம்மோட்டில் இருந்து வீல்சேர் மாறுவதற்குள் எனக்குக் கை பிசகி விட்டது, கழுத்து ஒடிந்து விட்டது’ என்றெல்லாம் குறை சொல்லி, ரெடியாக வந்திருக்கும் தன் வக்கீலுடன் நோட்டிஸ், அது, இது என்று மிரட்டிப் பார்த்தான். “ஐயாயிரம் டாலர்ஸ் எடு. இல்லாட்டி மவனே, கோர்ட், கேசுன்னு உன்னை அழிச்சிடுவேன், ஜாக்கிரதை!”.</p>
<p>எத்தனையே பேர் இதற்கு முன மோல்ஸ்கியிடம் அடி பணிந்திருந்தாலும் அன்று அந்த சைனாக்கார ஓனர் இந்த பெப்பேக்கெல்லாம் பயப்படுவதாக இல்லை. “கேஸ் போடறதுன்னா போடப்பு. சும்மா உதார் காட்டாத. பத்து பைசா தர்ரதாயில்ல. மொதல்ல எடத்தக் காலி பண்ணுடா சோமாறி”</p>
<p>*** *** ***</p>
<p>கேஸ் ஜூரிக்கு வந்தது.</p>
<p>வீல்சேரில் பரிதாப முகம் காட்டிய மோல்ஸ்கி தன்னால் சின்னச் சின்ன அசைவுகளைக்கூட சரியாகச் செய்ய முடியவில்லை என்று நடிப்பைப் பிழிந்து கொட்டிக் கொண்டிருந்தான். ’பாகப் பிரிவினை’ சிவாஜி தோற்றார், போங்கள்! கண்ணாடி போட, தண்ணீர் குடிக்க என்று அடிப்படை உதவிகளுக்குக்கூட ஆள், படை, அம்பாரியுடன் ஒரு பெரிய பட்டாளம்.</p>
<p>பல ஜூரர்கள் அவன் நடிப்பில் கரைந்து காணாமலே போய்க் கொண்டிருந்தாலும் இவன் ஒரு வல்லாளகண்டன் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லாமல் போயிற்று. என் குருநாதர் சுஜாதா சொல்கிற மாதிரி, அவன் கண்களில் கயமை தெரிந்தது.</p>
<p>நஷ்ட ஈட்டுத்தொகையாக ஒரு 5000, இதுவரை அவன் அங்கே பட்ட உடல் கஷ்ட நிவர்த்திக்காக ஒரு 5000, அப்புறம் அவன் பட்டிருக்கின்ற மனவலிக்காக ஒரு 25,000 என்று மோல்ச்கி தரப்பு வக்கீல் பெரிய பட்டியல் போட்டுக் கொண்டிருந்தான். சைனீஸ் ஹோட்டல் மூடுவிழா தான் என்று மற்ற ஜூரர்கள் பேசிக்கொண்டார்கள்.</p>
<p>“சர்த்தான், பெர்ர்ர்ய ப்ளானோட ஒரு குரூப்பாத்தான் திரியறானுவ போல இருக்கு” என்று எனக்குப்பட்டது. இருந்தாலும், சுற்றி இருக்கின்ற  எல்லோருடைய பச்சாதாபத்திலும் நனைந்து வழியும் ஒரு வீல்சேர் பேர்வழி மேல் அவ்வளவு சீக்கிரமாக அபாண்டமாக எதுவும் சோல்லிவிட முடியாதல்லவா? எக்குத்தப்பாக எதையாவது சொல்லி வைத்தால் எல்லோரும் நம் மேல் பாய்ந்து விழுந்து பிறாண்டி விட மாட்டார்களோ?</p>
<p>ஹோட்டல்காரருடைய சைனாக்கார வக்கீலும் கேஸை சொதப்பலாகவே நடத்திக் கொண்டிருந்தான். 25,000 டாலர்கள் கொடுத்து செட்டில் பண்ணிவிடலாம் என்கிற நினைப்பில் இருந்தான் போலிருக்கிறது. 10,000த்தில் முடியுமா என்று நூல் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற ஜூரர்களுக்கும் இது ஓகே, இன்னும் கொஞ்சம் கூட ‘மீட்டருக்கு மேலே’ போட்டுக் கொடுக்கலாம் என்றார்கள்.</p>
<p>“அன்னிக்கே அஞ்சாயிரம் குடித்திருந்தியானா உன்னிய அன்னிக்கே வுட்ருப்பேன்டி. பதில் கேசா போடற? இன்னிக்கி உனுகு இருக்குடி ஆப்பு, அம்பதாயிரமாச்சியும் கறக்காம உடறதில்லடி”</p>
<p>வீல்சேர் ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே, வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்’ என்று மனசுக்குள் பாடி சந்தோஷத்தில் குலுங்கியதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் ’த்ஸோ த்ஸோ’ என்று பதறினார்கள் சக ஜூரர்கள்.</p>
<p>“பயங்கர பகல் கொள்ளை இது” என்று நான் மனசுக்குள் குமுறினேன்.</p>
<p>கோர்ட் இடைவேளையில் சைனா வக்கீலைக் கூப்பிட்டேன்.</p>
<p>“அடேய் அபிஷ்டு, பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராச்சாரியார், டைகர் வரதாச்சாரியார், பூச்சி பயங்கராச்சாரியார் ரேஞ்சுக்கெல்லாம் உனக்கு கேஸ் நடத்தத் தெரியாதென்பது உன் சப்பை மூஞ்சியைப் பார்த்தாலேயே தெரிகிறது. அதற்காக நீ இவ்வளவு சோப்ளாங்கியாகவா கேஸ் நடத்துவது? அந்த வீல்சேரன் என்னடாவென்றால் ஆட்டோகிராஃப் ரேஞ்சுக்கு ஃபிலிம் காட்டுகிறான், ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே’ என்று சொல்லிச் சொல்லி ”அங்கே வலிச்சுதே, இங்கே குடைஞ்சுதே என்று சைக்கிள் ஓட்டுகிறான். இந்த மாயக்கண்ணாடியிலெல்லாம் நீயும் மயங்கி மக்கு பிளாஸ்திரியாக நிற்கிறாய்.</p>
<p>‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ ரேஞ்சுக்கு உன்னால் ஸ்நேகா மாதிரி இழுத்துப் போர்த்திக்கொண்டே சிரித்து மயக்கத் தெரியாதென்றாலும், இந்த அநியாயத்தை யாராவது தட்டிக் கேட்க வேண்டாமா?</p>
<p>சைனா தலையை தொங்கப் போட்டுக்கொண்டான்.</p>
<p>சரி, நீயும்  போய் சோத்தைக் கொட்டிக்கொண்டு, அல்லது நூடுல்சை ஒரு மொக்கு மொக்கி விட்டு வா. நான் சில பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுக்கிறேன் உனக்காக”</p>
<p><a href="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/02/Gita-in-Chinese.png"><img class="alignleft size-full wp-image-380" title="Gita in Chinese" src="http://www.writerlaram.com/tamil/wp-content/uploads/2010/02/Gita-in-Chinese.png" alt="" width="200" height="250" /></a></p>
<p>ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ</p>
<p>அஹம் த்வா ஸர்வாபாபேப்யோ மோக்‌ஷயிஷ்யாமி மாஷுச:</p>
<p>நான் எதற்காக பகவத் கீதையின் பதினெட்டாவது அத்தியாயம் அறுபத்தி ஆறாவது ஸ்லோகம் ரேஞ்சுக்கு- கீதையின் சாராம்ச ரேஞ்சில் -அவனுக்கு அபயம் அளிக்கிறேன் என்பது புரியாமல் அவனும் பேய் முழி முழித்து, தலையைச் சொறிந்தபடி வெளியே போனான்.</p>
<p>நான் ஏன் பிறந்தேன்?</p>
<p>பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்கிருதாம்</p>
<p>தர்ம சம்ஸ்தாபனார்த்தாய <strong>சம்பவாமி யுஎஸ்ஏ யுஎஸ்ஏ</strong></p>
<p>என்றெல்லாம் நான் அவனுக்கு விளக்கம் சொல்வதாயில்லை.</p>
<p>*** *** ***</p>
<p>கைக்கடக்கமான என் ’பிட்’களைப் பார்த்த சைனா ஒரிஜினல் ஷகீலா பிட் பார்த்த சந்தோஷத்தில் இருநூறு டெசிபல் அதிகமாகவே எகிறி முழங்கினான்:</p>
<p>“மிஸ்டர் மோல்ஸ்கி, அன்று என் க்ளையண்ட்டின் சைனா உணவகத்தில் லஞ்ச் சாப்பிட வந்தீர்கள் இல்லையா?</p>
<p>“எங்கே சாப்பிட்டேன்?” மோல்ஸ்கி சிங்கம் போல் சீறினான்.</p>
<p>“சாப்பாடோ கேவலம். வாந்தி வந்தது. சக்கர நாற்காலியில் பாய்ந்து பாத்ரூம் ஓடினால், அய்யகோ, அங்கே என் சொல்வேன்? வாஷ் பேசின் எட்டவில்லை, தவித்த வாய்க்குத் தண்ணீர் குடிக்க முடியவில்லை, கம்மோடில் கால் வைக்க முடியவில்லை, கண்ணுக்கெட்டிய டிஷ்யூ கைக்கு எட்டவில்லை. கதவிடுக்கில் கை மாட்டி, கம்மோடில் கால் மாட்டி, சக்கர நாற்காலி சறுக்கி நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. என் எதிரிக்கும் இது நிகழலாகாது”</p>
<p>ஆஸ்கார் பெர்ஃபாமன்சில் மோல்ஸ்கி குலுங்கி அழுதான். மற்ற ஜூரர்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டபடி ”அட் லீஸ்ட் அம்பதாயிரம் குடுத்துடலாம்” என்று கிசுகிசுத்துக் கொண்டார்கள்.</p>
<p>புழு, பட்டாம்பூச்சியிலிருந்து பிரதிவாதி பயங்கர வக்கீலாய் உருவெடுத்துக் கொண்டிருந்த சைனா வக்கீல் என்னைப் பார்த்துக் கண்ணடித்தபடி,</p>
<p>“நல்ல நடிப்பு நண்பரே!. ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை தடவை லஞ்ச் சாப்பிடுவீர்கள், மோல்ஸ்கி?” என்று கேட்டான்.</p>
<p>”இதென்ன முட்டாள்தனமான கேள்வி?” மோல்ஸ்கி சீறினான். ஜட்ஜைப் பார்த்து “இந்த அபத்தத்துக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டுமா, ஐயா?”</p>
<p>“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்” என்றார் ஜட்ஜ். தன் செல்லத் தூக்கத்தை யார் கலைத்தாலும் அவருக்குக் கடுப்பு தாங்காது.</p>
<p>“எல்லோரையும் போல் ஒரு வேளை லஞ்ச், ஒரு வேளை டின்னர் தான்”</p>
<p>சீன வக்கீல் திடீரென்று விஸ்வரூபம் எடுத்தான்.</p>
<p>”இல்லையே, சம்பவம் நடந்த அதே தினத்தன்று நீங்கள் ஏழு இடங்களில் லஞ்ச் சாப்பிடச் சென்று, மற்ற ஆறு இடங்கள் மேலும் கேஸ் போட்டு, முப்பதாயிரம் டாலர்களுக்கு செட்டில் செய்திருப்பது உண்மையா இல்லையா?”</p>
<p>“ஜட்ஜய்யா, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” மோல்ஸ்கி பிளிறினான்.</p>
<p>“ஷட் அப்” என்றார் ஜட்ஜய்யா.</p>
<p>“அது மட்டுமல்ல, கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் 400-க்கு மேற்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர ஏரியா கடைகளில், ஹோட்டல்களில், பார்களில், திரை அரங்குகளில் ஏதாவது ஒரு பொய்க் குற்றச்சாட்டின் பெயரில் அடாவடியாக வசூலித்திருக்கின்ற மொத்தத் தொகை 1 மில்லியன் இருநூற்றி முப்பத்தை ஐந்தாயிரம் டாலர்கள். உண்மையா இல்லையா?”</p>
<p>“அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்” –மோல்ஸ்கியின் வக்கீல் அலறினான்.</p>
<p>“ஆல் ஆஃப் யூ ஷட் அப்” சீறினார் ஜட்ஜ்.</p>
<p>“உண்மையாகவே நலிவுற்றிருப்பவர்களின் நலன் கருதி நாட்டிலே ஒரு நல்ல  சட்டம் போட்டால் அதை வைத்து மோல்ஸ்கி போன்ற கயவர்கள் இப்படிக் கொள்ளை அடிப்பது அசிங்கம், அவமானம், அதிகபட்ச அபராதத்திற்கும் உரியது. மோல்ஸ்கியுடன் சேர்ந்து வக்கீல்கள் உட்பட ஒரு குண்டர் குழாமே இப்படி ஆட்டம் போட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.</p>
<p>இதை உடனே தடுத்து நிறுத்துவது இந்தக் கோர்ட்டாரின் தலையாய கடமையாகிறது. அதனால் இந்த மோல்ஸ்கி என்கிற வீல்சேர் வில்லனை உடனேயே, இக்கணமே, vexatious litigant என்று அறிவிக்கிறேன். அதாவது, இனிமேல் எந்த கோர்ட்டிலும் எந்தக் காலத்திலும் இந்த ஆள் எந்த கேஸ் போடவேண்டுமென்றாலும் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்.</p>
<p>இந்த கேசை தள்ளுபடி செய்கிறேன்.</p>
<p>”அது மட்டுமல்ல” தூக்கம் கலைந்து ஜட்ஜுக்கு நன்றாக முழிப்பு வந்து விட்டது போலும் “இந்த மாதிரி வெத்து கேஸ்களை ஜோடனை செய்ய உதவிய வக்கீலாகிய உமக்கும் இதே கதி தான். இனிமேல் நீர் எந்த கேஸை எங்கே தாக்குதல் செய்வதானாலும் என்னிடம் பர்மிஷன் கேட்டு வரவேண்டும்”</p>
<p>“நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது வழங்கப்படுவது அனைவருக்கும் தெரிந்து வழங்கப்படவேண்டும். உம்மை கலிஃபோர்னிய பார் கௌன்சிலில் இருந்தே நீக்கவும் இதனால் பரிந்துரை செய்யப்படுகிறது.</p>
<p>எல்லா ஜூரர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள்.</p>
<p>உலகத்திலே, ஸ்பெக்ட்ரமாகட்டும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகட்டும், லஞ்சத்தைக் களைய நினைப்பதாகட்டும்- வெறுமனே மனசுக்குள் நினைத்துக் கொண்டு மசாலா டீ சாப்பிட்டால் மட்டும் போதாது. தலைமை முதலில் பெருந்தூக்கம் கலைய வேண்டும், பயப்படாமல் துணிந்து செயல்படவேண்டும், சேலை நுனியில் ஒளிந்துகொள்வதை விடவேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காகக் குண்டர்களிடன் அடிபணிந்து கிடக்காமல் சிங் கம் போல் எழுந்து செயல்படவேண்டும்.</p>
<p>இன்னொரு முக்கியமான விஷயம். பயங்கர வீக்கான 1-11 மைனாரிடியாக இருந்தாலும், மெஜாரிட்டிக்கு ஜால்ரா போடாமல்,. சரியான நேரத்தில் மிகச் சரியான பாயிண்டுகளோடு நீதியை நிலைநாட்ட உதவிய ஜூரர் நம்பர் 12 அவர்களுக்கு இந்த கோர்ட் தன் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறது!</p>
<p>நான் வெட்கத்தில் நாணிச் சிவந்தேன்!</p>
<p>டயரியின் அடுத்த பக்கம், <strong>“நல்ல நல்ல பொண்ணுங்களை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி!” </strong></p>
<p>(சட்டம் தன் வேலையைச் செய்யும்)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerlaram.com/tamil/?feed=rss2&#038;p=379</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
		</item>
	</channel>
</rss>
